search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம்"

    • சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபதாரணி முன்னிலையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுக்கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், லெட்சுமி நகர் முதல் வடக்கு குடியிருப்பு வரை செல்லும் சாலைக்கு கலைஞர் சாலை என பெயர் வைக்கவும், மகளிர் உரிமைத் தொகை கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் யூனியன் தலைவர் முத்துராமலிங்கம், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் அமுதா லெட்சுமணன், சீதா வைரவன், செல்வி முத்து, முன்னாள் தலைவர் அன்பரசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    • கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
    • 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகையன் வரவேற்றார்.

    வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் விரைந்து நடை பெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கபட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    100 நாள் வேலைத்திட்ட பணியில்ஊதியம் வழங்குவதில் தேக்க நிலைஇருந்தது.

    தற்போது அது சரி செய்யப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் ஏற்றப்படும். மேலும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெற்றவர்கள் உடனடியாக பணியை முடிக்க வேண்டும் .

    அப்படி முடித்தால் தான் மற்றவர்களுக்கு வீடு கிடைக்கும்.

    எனவே விரைந்து வீடு கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர்ராஜு பேசினார்.

    கருப்பம்புலம் ஊராட்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வீட்டு வரியை இனி ஊராட்சி மன்றமே செலுத்தும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.

    சென்ற ஆண்டு கிராம சபா கூட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி கிடையாது என்று அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தியராஜன் நன்றி கூறினார்.

    • மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மானாமதுரை

    மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மகேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுகா தாரத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த அலுவலர்கள் அரசு திட்டங்களை விளக்கி பொதுமக்கள், விவசாயிகள் கூறினர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினார். இக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பாக்கி யலட்சுமி அர்ச்சுணன். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, துணைத் தலைவர் முத்து சாமி, வட்டாட்சியர் ராஜா, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள தாயமங்களம் ரோடு, மற்றும் ஊராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளை மானா மதுரை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கல்குறிச்சி ஊராட்சி யில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டவுடன் பாதுகாப்பு பணியில் உள்ள சிப்காட் போலீசார் கிராம சபை கூட்டத்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • காத்தனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பறை யங்குளம் மலட்டாறு அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் சங்கரத் தேவன் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வ ரப்படாமல், கருவேல மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுவதால், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஆப்பநாடு இளைஞர் சங்கம் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை அதிகாரி களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புதான் அந்த கால்வாய் தூர்வாரப்பட் டது. அதனால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும் ஆப்பநாடு இளைஞர்கள் சங்கம், விவசாயிகள் சபை சார்பில் தன்னார்வலர்கள் துணையோடு இளை ஞர்களே கால்வாயை தூர் வார அதிகாரிகள் அனுமதி அளித்தால் போதும் என பலமுறை மாவட்ட நிர்வா கத்திடமும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து வருகின்றனர்.

    அதிகாரிகள் அனுமதி தர மறுத்து வருவதால் காந்திெஜயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கமுதி, கடலாடியை சுற்றி உள்ள எஸ்.கீரந்தை, நாராயணபுரம், புதுக் கோட்டை, காத்தனேந்தல், ஏனாதி, எ.தரைக்குடி, எஸ்.எம்.இலந்தைகுளம், ஆப்பநாடு, மறவர் கரிசல் குளம், ஏ.உசிலங்குளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • கூட்டத்திற்கு தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளேபாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுரேந்திரன், ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வெள்ளி குப்பம்பாளையம் முதல் பகத்தூர் வரை சாலை அமைத்தல், ஆ னைப்பள்ளி புதூர் கிராமத்தில் மேல்நி லைத் தொட்டி அமைத்தல், தங்கவேல் தோட்டம் முதல் மாகாளி தோட்டம் வரை சாலை அமைத்தல், அன்னூர் சாலையில் இருந்து குமரன் குன்று கோவில் வரை தார் சாலை அமைத்தல், வெள்ளிக்குப்பம் பாளையம் காலனியில் காங்கிரீட் சாலை அமைத்தல், சிறுமுகை சக்தி சாலையில் இருந்து அம்பாள் பள்ளி வரை தார் சாலை அமைத்தல், சென்னம்பாளையம் ஏழு எருமை பள்ளம், பெள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் பகுதியில் தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீர் முறையாக வழங்க வேண்டும், தெருவிளக்கு அமைத்தல், விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
    • திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிலம் வாங்குவோர் விற்போ ர் நலச்சங்க கூட்டம் அதன் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் பால்குளத்தில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவ ட்டம் நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்ச னைகளில் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு மாவட்ட பதிவாளரிடம் ஏற்கனவே மனு அளிக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் தங்கள் நிலங்களை விற்க முடியாத பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுப்ப முடியாமலும், திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நிலம் தொடர்பா ன தொழில் செய்வோர் அண்டை மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, இப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் கவன த்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இக்கூட்டத்தில் நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கௌரவத் தலைவர் எஸ்.அழகேசன், செயலர் பாண்டியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் டி.பாலகிரு ஷ்ணன், சுதர்சன், தீபன் சக்ரவர்த்தி, சம்பூர்ண தேவராஜன், விஸ்வை சந்திரன், சொர்ணப்பன், சில்வஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் நேரு வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூ ராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:

    கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட கண்டிமட்டம் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதற்காக அந்த பகுதியில் புதிய குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து, அம்மக்கல் தடுப்பணையில் இருந்து கண்டிமட்டம் வரை குடிநீர் குழாய்கள் பதித்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    காந்திபுரம், பூதியாடா கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால், அங்கு புதிய குழாய்கள் அமைக்கப்படும்.

    மட்டகண்டி பகுதியில் சட்டவிதிகளை மீறி கட்டிய கட்டிடத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். ஆனால் அங்கு தற்போது மீண்டும் கட்டுமான பணிகள் நடக்கிறது.

    மேலும் சட்டவிதிகளைமீறி மின் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்தை, அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

    மஞ்சூர் சுற்றுவட்டார வியாபாரிகளின் கோரி க்கையை ஏற்று கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 30 கிராமங்கள் மற்றும் குந்தா, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு, கிண்ணக்கொரை, அப்பர்ப வானி, பெங்கால்மட்டம், மஞ்சகம்பை, கெத்தை போன்ற சுற்றுலா பகுதிகளை காண கேரளாவில் இருந்துவரும் பயணிகளை, முள்ளி சோதனைச்சாவடியில் தடுக்காமல், அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கவுன்சிலர் மாடக்கன்னு நன்றி கூறினார்.

    • மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • அனைத்து செட்டியார் சமூகத்தினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தலைமை செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தேசிய செட்டி யார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.

    மாநில தலைவர் தமிழ்ச் செல்வன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி தென்னவன், மாநில பொருளாளர் ராஜ ராஜசேகரன், மாநில மகளிர் அணி தலைமை ஒலிங்கி ணைப்பாளர் ராஜேஸ்வரி, சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயராமன், மாநில தலைமை ஒருங்கிணைப் பாளர் மோகன், மாநில துணைப் பொதுச் செய லாளர் வக்கீல் ராம கிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்தமணி, மோகன், ரகுபதி, தலைமை நிலைய இணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி ஒருங்கிணை்ப பாளர் சுறா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மூர்த்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ காஞ்சி காமாட்சி அறக்கட்டளை நிறுவனர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் உள்ள அரசி யல் கட்சிகளில் நமது சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் மாநில முழுவதும் மாவட்ட வாரியாக சிறப்பு கூட்டங் கள் ஏற்பாடு செய்து நலத் திட்டங்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு அனைத்து சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைத்தல்.

    நமது சமுதாயத்தின் நூற்றாண்டு மாநாடு அனைவரும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். உடுமலை நாராயண கவிக்கு சென்னை அண்ணா சாலையில் முழு உருவசிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கேரளா எல்லையில் அமைந் துள்ள கண்ணகி கோவிலில் தமிழ் மாதந்தோறும் சாமி தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வர லாற்றை பறைசாற்று கின்ற அளவுக்கு தேனி லோயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும். அனைத்து செட்டியார் சமூக மக்களையும் மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்பட முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மணி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, தமிழக, கேரளா, கர்நாடக, புதுச்சேரி, ஆந்திரா உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
    • பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.

    வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.

    சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.

    சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.

    ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.

    சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.

    பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.

    கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.

    பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்-ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வலையங்குளத்தில் நேற்று மாலை ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடந்தது. மாநாட்டு திடலில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப் பட்டது. அதனை தொடர்ந்து ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும், நாட்டின் பெயர் மாற்ற முயற்சிக்கும் சட்டத்திருத் தத்தை கைவிட வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ம.தி.மு.க. எதிர்க்கிறது. இதனை ஜன நாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

    மத்திய அரசின் கட்டுப் பாட்டில் நூலகங்கள் கொண்டு செல்லப்படும் முயற்சியை தடுக்க வேண்டும். நீட் தேர்வு விலக்குக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மதுரை யில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாநாட்டில் நிறைவுறை யாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசி னார். அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். குறிப்பாக முல்லை பெரியாறு, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மேகதாது அணை திட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். இதுவரை தமிழக மக்கள் உரிமைக்காக 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடை பயணம் சென்று உள்ளேன். தமிழகத்திற்காக வும், நாட்டிற்காகவும் எனது குடும்பம் தியாகம் செய்துள்ளது.

    கட்சியில் ஏதாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் என் மகனுக்கு கிடையாது என்று சொல்ல இருந்தேன். ஆனால் மாநாட்டில் பேசிய அவரே இதை கூறிவிட்டார். கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது துரை வைகோ கட்சி பணியாற்றினார்.

    இந்த மாநாட்டின் வெற்றிக்கு காரணமானவர் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தான். அவர் கட்சியை தென்மண்ட லத்தில் கட்டிக்காத்து வரு கிறார். என்னுடன் 19 மாதங்கள் பொடா சட்டத் தில் சிறையில் இருந்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    மாநாட்டில் துரை வைகோ பேசியதாவது:-

    சனாதனம் என்பது உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை உருவாக்குகிறது. சனாதனம் குலக்கல்வியை வலியுறுத்து கிறது. அம்பேத்கார், பெரி யார், அண்ணா மற்றும் திராவிட இயக்கங்கள் சனா தனத்தை எதிர்த்தன. அதனை வேரறுக்க வேண்டி யது ஒவ்வொரு தனி மனித னின் கடமையாகும்.

    கட்சியில் எந்த பதவிகள் வழங்கினாலும் ம.தி.மு.க. தொண்டர் என கூறுவது தான் எனக்கு பெருமை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    முன்னதாக பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கீரைத்துறை பாண்டியன், மாவட்ட பொருளாளர், மாநில கலைத்துறை இணைச் செயலாளர் சுருதி ரமேஷ், அன்னமுகமது மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள்,மாவட்ட செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

    மாநாட்டில் கரு.சுந்தர், தண்டளை ஏ.ரமேஷ், எம்.சரவணன், பெ.முருக பெருமாள், துரை கே.ஜெய ராமன், பா.பச்சமுத்து, எஸ்.சண்முகவேல், எஸ்.ஆர்.பாண்டி, வக்கீல் சோ.பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் தலைவர் சுமதி தலைமையில் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனி வாசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத் தில் ஆமத்தூர், குந்தலப்பட்டி, வள்ளியூர், பட்டம்புதூர், தம்ம நாயக்கன்பட்டி, சின்னவாடி, வி.முத்துலிங்காபுரம், தாதம்பட்டி, வச்சக்காரப்பட்டி, கன்னிசேரி புதூர், ஒண்டிப் புலிநாயக்கனூர், கட்டனார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள யூனியன் தொடக் கப்பள்ளியில் உள்ள சமையலறைகளை தலா ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் மன்னார்குடி, சத்திரரெட்டியபட்டி, மற்றும் பட்டம்புதூர் கிராமங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களை ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், கே.சுரேஷ்குமார், யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியா செல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்ய பிரியா முரளி கிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், கே.ஜி.டி.கௌதமன், எம்.கண்ணன் மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட நசரத்பேட்டை, அகரமேல், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் அமைப்பது. பழுதடைந்த அரசு கட்டடங்களை சீரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×