search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekam"

    • 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் எழுந்தருளி உள்ளார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    சென்னை:

    வடசபரி என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் (ஆர்.ஏ.புரம்) 18 படிகள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஐயப்பன் சாமி எழுந்தருளி உள்ளார். இறைவனின் உத்தரவுப்படி புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், நவக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கும் புதுபொலிவுடன் கோபுரங்கள் கட்டி பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த 24-ந்தேதி விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 25-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாக பூஜை, 26-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7.15 மணி அளவில் 6-ம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து 10.45 மணிக்கு சபரிமலையில் இருந்து வந்திருந்த மோகன் தந்திரி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ கே.பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்துக்கும், அதை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

     இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 'சாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 7 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஐயப்ப சாமி எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

    விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசையும், கலைநிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சாமி கோவில் அறக்கட்டளை அறங்காவலரும், கும்பாபிஷேக திருப்பணிக்குழு தலைவருமான ஏ.சி.முத்தையா மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

    • காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.
    • 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள அஷ்டபுஜப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோவிலாக இது உள்ளது. இங்கு மூலவர் 8 திருக்க ரங்களை உடை யவராகவும், கஜேந்திர மோட்சம் நடந்த சிறப்புக்கு உரிய தலமாகவும் விளங்குகிறது.

     இந்த கோவிலில் கும்பாஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, அறநிலை யத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, உத்திரமேரூர் எம்எல்ஏ.சுந்தர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் திருப்பணி குழு செயலாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • அவினாசியில் லிங்கேசுவரர் கோவில் உள்ளது.
    • வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.

    பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா இன்று காலை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந் தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு 6-ம்கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    • திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    இந்நிலையில் மத்திய போலீஸ் படையின் ஒரு பிரிவான விரைவு அதிரடிப்படை போலீசார் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். இந்த படைக்கு 1 துணை கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 33 பேர் வருகை தந்துள்ளனர்.

    இந்த விரைவு அதிரடி படையினர் திருப்பூரில் பதட்டமான பகுதிகளான காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கிகளுடன் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    • வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
    • மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி ஆகும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (ஜனவரி 22ம் தேதி) மிக விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமோனோர் அழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

    பிரான் பிரதிஷ்டை என்று கூறப்படும் இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப அயோத்தியில் உள்ள சரயு காட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஒளி-உமிழும் டையோட்கள் (எல்இடி) மிதக்கும் திரை நிறுவப்பட்டுள்ளது.

    மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி ஆகும். பக்தர்கள், பிரதிஷ்டை விழாவை நேரடியாக ஒளிபரப்ப குஜராத் நிறுவனம் திரையை உருவாக்கியுள்ளது.

    இதுகுறித்து மிதக்கும் எல்இடி திரையின் எம்டி அக்ஷய் ஆனந்த் கூறியதாவது:-

    இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் எல்இடி திரையை குஜராத் நிறுவனம் ஒன்று ஜனவரி 22ம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வுக்காக தயாரித்துள்ளது. இதில், பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரடியாக சரயு காட்டில் இருந்து நேரடியாக காண்பிக்கப்படும்.

    இந்த முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி., இது முழு மிதக்கும் எல்இடி திரை தோராயமாக 1100 சதுர அடியாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
    • நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

    ஷாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் பிரானி உத்யானின் இயக்குனர் மனோஜ் குமார் சுக்லா," இந்த சலுகை ஜனவரி 21ம் தேதி அன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்" என்றார்.

    மிருகக்காட்சிசாலைக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டாலும், மிருகக்காட்சிசாலையின் நுழைவு மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய சுக்லா முடிவு செய்துள்ளார்.

    நுழைவு பிளாசாவில் உள்ள நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில்  விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து உலக இந்து அறக்கட்டளை அமைப்பின் தலைவர் சுவாமி விக்யானந்த் கூறியதாவது,

    தூதர்கள் உட்பட 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். பிரபு ராம்வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ரொமினிகா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள் லக்னோவிற்கு ஜன.20 - ஆம் தேதி வரவுள்ளனர். 21-ஆம் தேதி மாலை அவர்கள் அயோத்தி வந்தடைவர். உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடம் சிறியதாக இருப்பதால் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது.
    • தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக 22-ந்தேதி நடை பெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள்.

    அவரும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.

    தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளான நாளை (15-ந்தேதி) வரை இந்த பணிகள் நடக்கிறது.

    • 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
    • அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.

    அயோத்தி:

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலர் பலவிதமான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுள்ள ரவையில் அல்வா தயாரிக்க உள்ளார்.

    இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.

    ராம் அல்வா கிண்டுவதற்காக 12000 லிட்டர் கொள்ளளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.

    இது எக்கு மற்றும் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இதை தூக்குவற்கு கிரேன் பயன்படுத்தப்படும். அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.

    7000 கிலோ எடையில் தயாரிக்கப்படும் ராம் அல்வா குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்பு, ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

    கின்னஸ் சாதனை புத்தகத்தில விஷ்ணு மனோகர் பல முறை இடம் பிடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 12-வது முறைாக இடம் பெற்றது. அப்போது 75 வகையான அரிசியில் 75 வகையான பலகாரங்களை 285 நிமிடங்களில் தயாரித்தார். இவற்றின் மொத்த எடை 375 கிலோ. ராம் அல்வா தயாரிப்பு மூலமும், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புவதாக ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    ×