search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம்

    • விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டம ங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    3 நாட்கள் 4 கால பூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. இந்த நிறைவு பெற்று பூர்ணகுதி நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார் பங்கேற்றார். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×