என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை
- அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.
- பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும்.
பல்லடம் :
பல்லடம் கடைவீதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நிலையில், கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், கோவில் முறையாக அளவீடு செய்து அதன் பின்னர் சுற்றுச்சுவர் தளம் அமைக்கும் பணி செய்ய வேண்டும். திருப்பணி நடைபெறுவது குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென கோவில் கமிட்டியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து செயல் அலுவலர் பிரேமா பேசுகையில், பாலாலயம் செய்த பின்புதான் திருப்பணி செய்வதற்கு அனுமதி பெறமுடியும். எனவே கோவில் திருப்பணி செய்வதற்கான தேதியை முடிவு செய்ய வேண்டும். அக்டோபர் 23, 28, நவம்பர் 11, 13, 14, ஆகிய தேதிகள் திருப்பணி செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோவில் திருப்பணிக்கு ஸ்தபதி, மற்றும் கும்பாபிஷேக தேதி ஆகியவற்றை தீர்மானித்து, சர்வேயர் மூலம் அளவீடு பணி செய்து ஆக்கிரமிப்புகள் ஏதும் இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, கும்பாபிஷேகப் பணிகள் செய்யலாம், மேலும் இந்து அறநிலையத்துறை கோவில் என்பதால் அறநிலையத்துறை அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளாது. கோவில் கமிட்டியாளர்கள், நன்கொடையாளர்கள் மூலம், திருப்பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






