search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு தொடர்பான பிரச்சினை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல தீர்மானம்
    X

    குமரி மாவட்டத்தில் பத்திரப்பதிவு தொடர்பான பிரச்சினை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல தீர்மானம்

    • மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
    • திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிலம் வாங்குவோர் விற்போ ர் நலச்சங்க கூட்டம் அதன் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் பால்குளத்தில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவ ட்டம் நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்ச னைகளில் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு மாவட்ட பதிவாளரிடம் ஏற்கனவே மனு அளிக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் தங்கள் நிலங்களை விற்க முடியாத பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுப்ப முடியாமலும், திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நிலம் தொடர்பா ன தொழில் செய்வோர் அண்டை மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, இப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் கவன த்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இக்கூட்டத்தில் நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கௌரவத் தலைவர் எஸ்.அழகேசன், செயலர் பாண்டியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் டி.பாலகிரு ஷ்ணன், சுதர்சன், தீபன் சக்ரவர்த்தி, சம்பூர்ண தேவராஜன், விஸ்வை சந்திரன், சொர்ணப்பன், சில்வஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×