search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாங்குளத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கிராம சபை கூட்டம்
    X

    மாங்குளத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கிராம சபை கூட்டம்

    • மாங்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    மானாமதுரை

    மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூர் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். இக்கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மகேந்திரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுகா தாரத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த அலுவலர்கள் அரசு திட்டங்களை விளக்கி பொதுமக்கள், விவசாயிகள் கூறினர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கிப் பேசினார். இக் கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பாக்கி யலட்சுமி அர்ச்சுணன். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா அண்ணா துரை, துணைத் தலைவர் முத்து சாமி, வட்டாட்சியர் ராஜா, ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர் பான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாங்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாங்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள தாயமங்களம் ரோடு, மற்றும் ஊராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளை மானா மதுரை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கல்குறிச்சி ஊராட்சி யில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டவுடன் பாதுகாப்பு பணியில் உள்ள சிப்காட் போலீசார் கிராம சபை கூட்டத்தை பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×