search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்மானம்"

    • பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
    • மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வின் சர்வதேச அமைப்புக ளுக்கான துணை வெளி யுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்றார்.

    • பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
    • மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.

    இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தின் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    சங்கத்தின் கவுரவ தலைவர் சேவியர்தாஸ், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் ரெக்குமோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்வரன், கவுரவ ஆலோசகர் தனசேக ரன், பொருளாளர் ரஞ்சித், மாவட்ட துணை செயலா ளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு 6 மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவ தும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன், செல்வம், கவுந்தர பாண்டியன், விஜய், ஸ்ரீதர் ராஜ், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
    • கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆலந்தூர்:

    சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் 12-வது மண்டல அலுவலகம் ஆலந்தூர், புதுப்பேட்டை தெருவில் செயல்பட்டு வந்தது. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்காக இந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரசு கட்டிடத்தில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு போதிய இடவசதி இல்லை. இந்தநிலையில் ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் இன்று தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர்கள் மற்றும் மண்டல அதிகாரி சீனிவாசன் உள்பட சுமார் 70 பேர் பங்கேற்றனர். ஆனால் போதிய இடவசதி இல்லாததால் அதிகாரிகள் கூட்டத்தில் நின்றபடி பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு அதிகாரிகளுக்கு தனியாக நாற்காலிகள் கொண்டுவரப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காளையார்கோவிலை பேரூராட்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    • விவசாய சங்க மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காளையார்கோவில்

    தமிழ்நாடு விவசாய சங் கத்தின் சிவகங்கை மாவட்ட அளவிலான 27-வது மாநாடு காளையார் கோவி லில் நடைபெற்றது. மாநில விவசாய சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

    இந்த மாநாட்டில் முன் னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாநில விவசாய சங்க செய லாளர் மாசிலா மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கணங ணகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி னர்.

    மாநாட்டில் வழக்கறிஞர் மருது, கோபால், முருகேசன், ஆறுமுகம், மாதர் சங்கத்தின் சார்பில் பாண்டியம்மாள், மஞ்சுளா, மாவட்ட விவசாய சங்க செயலாளர் காமராஜ், சகாயம், ராஜா, பாண்டி, ஒன்றியச் செயலாளர் திரு செல்வம் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சந்தைத் திட லிலிருந்து மாநாடு திடல் வரை பேரணி நடைபெற்றது. மாநாட்டில், அதிக மக்கள் தொகை உள்ள காளையார் கோவில் ஊராட்சியை தமிழக அரசு பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும்,

    தொண்டி-மதுரை ரெயில் பாதையை மத்திய அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தினை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.
    • எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்

    அரியலூர்

    அரியலூர்பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அ ரங்கத்தில் மாவட்ட ஊ ராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர் தலை மையில் நடைபெற்றது.

    துணைதலைவர் அசோகன்,செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் அம்பி கா,ராமச்சந்திரன், நல்ல முத்து, குலக்கொ டி,வசந்த மணி,சகிலாதேவி, ராஜேந்திரன்,அன்பழகன், தனசெல்வி,கீதா, புள்ளியியல் அலுவலர் பால சுப்பிர மணி யன்,அலுவலக உதவியா ளர்கள் ரமேஷ், ராமராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுப்பாளையம்நெறிஞ்சிக்கோரை,பெரியநா கலூர்,அஸ்தி னாபுரம்,வாலாஜநகரம், தாமரைக்குளம் சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள்  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் எடுப்பதற்காக நிலம் கொடுத்தனர்.

    ஆனால் இதுவரை நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொ டுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,விவசாயிகள் கொடுத்துள்ள அந்த நிலத்தில் நவம்பர் மாதம் 28-ந் தேதி சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகம் நடத்தவுள்ளது. எனவே,நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும்,  விவசாயி களுக்கு உரிய இழப்பீடு தரும் வரை கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாது.

    மீறி நடத்தப்பட்டால் அங்கு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தி்ல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியு றுத்தினர். கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதையடுத்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள் தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரும் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வருகை தர உள்ளார். முதல்வரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் இரு வண்ண கொடியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தர ராஜன்,மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாநில விவசாய அணி துணை ெசயலாளரும், முது குளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், மாநில, மாவட்ட, நகர், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய சங்க கூட்டம் நடந்தது.
    • செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நீரினை பயன்படுத்து வோர் சங்க கூட்டம் தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீரினை பயன்ப டுத்துவோர் சங்க கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நிர்வாக கவனத்திற்கு எடுத்துச் செல்வது.

    2022-23ஆண்டில் பருவ மழை பொய்த்ததால் வைகை தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணி வராததால் இத னால் பாசனம் பெறும் 72 துணை கண்மாய்கள் நீர்வ ரத்து இல்லாமல் விவசாய முற்றிலும் பாதிக்கப்பட்ட தால் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண வழங்க வேண்டும் எனவும், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கண் மாய்களின் வாரத்துக்கு கால்வாய்களை தூர்வார வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் உகந்தான்குடி ராமநாதன், நாகனேந்தல் விசுவநாதன், பாரனூர் சரவணன், துணைத் செய லாளர் பால்ராஜ், சிறு வண்டல் முருகானந்தம் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி பெறவேண்டும் என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.

    இதில் தொண்டி பேரூராட்சியின் மேலத்தெரு பகுதியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேல்நிலை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பழுதடைந்த வால்வுகளை பழுது நீக்குதல், பாரூர் போர்வெல்லி லிருந்து திருவாடானை செல்லும் பைப் லைனை மர்ம நபர்கள் உடைப்பதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. அதனால் திருவாடனை மின் வாரிய அலுவலகம் முதல் ஆராய்குடி குளக்கால் வரை சுமார் 2.62 கிலோ மீட்டர் தொலைவில் புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் உள்ளிட்ட குடிநீர் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மழை காலமாக இருப்ப தால் பொது மக்களின் சுகாதார நலன் கருதி சாலை களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மணிமுத்து ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருபுறங்களில் கரை அமைத்து தண்ணீர்சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டி பேரூராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக்கூட்டங்கள் அனுமதி பெறாமல் நடத்தப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருப்பதால் இனி வரும் காலங்களில் சாலைகள் மற்றும் தெரு க்களில் பொதுக்கூட்டம் நடத்த பேரூராட்சி நீர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ேமலும் கூட்டம் தொடர்பாக அனுமதி வழங்க மாவட்ட எஸ்.பி. மற்றும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி யோருக்கு தெரியப்படுத்து தல் தொடர் பாகவும் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
    • கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார்.

    மானாமதுரை

    இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் தலைவர், செயல் அலுவலர் பதிலளித்தனர்.

    கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூ ராட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பேரூராட்சிகள் இணை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும்.

    தமிழக அரசின் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 131 தெருவோர வியாபாரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க அடையாள அட்டை வழங்கப்படும்.

    பேரூராட்சிப் பகுதியில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந் தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • முல்லை பெரியாறு அணை மூலம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க வேண்டும்.
    • கிழக்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆணைக்கிணங்க ராமநாத புரம் கிழக்கு மாவட்ட பாட் டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கிம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலா ளர் வெங்கடேசன் வரவேற் றார்.

    பசுமை தாயகத்தின் மாநில துணைச்செயலாளர் பொறியாளர் கர்ண மஹா ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், ராமநாதபுரம் ஒன் றிய செயலாளர் பொறியா ளர் ஷரீப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், திருப்புல்லா ணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், இளைஞர் சங்க செய லாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், திருப்புல்லாணி

    ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாவட்ட சிறு பான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்கர் செயலாளர் சந்தோ சம், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, உழவர் பேரியக்கம் தலைவர் ஐ.பி.கணேசன் மற்றும் நிர்வாகி கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவே தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல் லாமல் கடன் வாங்கிய நபர்களின் வாகனங்களை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வது குண்டர் களை வைத்து மிரட்டுவது போன்ற செயல்கள் அதி கமாகி வருகிறது. இவை அனைத்தையும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து கட்டுப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாரதி நகரில் இயங்கி வரும் தனியார் நிறு வனத்தின் முன்பு வரும் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்,

    தினம் தினம் இலங்கை ராணுவத்தினரால் கட லுக்குச் சென்று வீட்டுக்கு திரும்புவதை கேள்விக்குறி யாக சென்று வரும் தமிழக மற்றும் குறிப்பாக ராமேசுவ ரம் மீனவர்களின் உயிருக் கும் உடைமைகளுக் கும் மத்திய அரசு பாதுகாப்பு மற்றும் உயிருக்கு உத்தரவா தம் வழங்க வேண்டும் ஒரு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட நிர் வாகத்தின் சார்பாக போராட்டம் நடத்த வேண்டும்,

    அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கிய அனைத்து நிர்வாகி களுக்கும் செயற்குழு கூட்டம் பாராட்டு, நன்றி, வாழ்த்துக் களை தெரிவிப்பது, விரை வில் சிக்கலை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றி யத்தை உருவாக்க வேண்டும் அதற்காக கடலாடி ஒன்றி யத்தின் சார்பாக விரைவில் ஒரு உண்ணா நிலை போ ராட்டம் நடத்த வேண்டும்,

    முல்லைப் பெரியாற்றிலி ருந்து நேரடியாக ராட்சத குழாய்கள் மூலம் மதுரை வரை கொண்டு வந்துள்ள குடிநீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்து கொண்டு வந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்சினையை முழு மையாக தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா நன்றி கூறினார்.

    • வீடு, வீடாக சென்று குறைகேட்க முடிவு செய்துள்ளனர்.
    • கவுன்சிலர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்க லம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் ஆதவன்அதியமான், சுகாதார அலுவலர் சண் முகவேல் ஆகியோர் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்து ரைத்தனர்.

    சிறப்பு தீர்மானமாக திருமங்கலம் நகர் பகுதியில் மாதத்தில் 5 வார்டுகள் வீதம் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்துதல், காய்ச்சல் குறித்து தினசரி நகரில் வீடு, வீடாக ஆய்வு செய்வது, பெண்களுக்கு மாதந் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சின்ன சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவி யம், பாண்டி, வினோத், காசிபாண்டி, பெல்ட்முரு கன், சரண்யாரவி, பாண்டி, முத்துக்காமாட்சி, ரம்ஜான் பேகம் சாலிகாஉல்பத், பவுசியா, அமுதா, ராஜகுரு, நகராட்சி மேலாளர் ரத்தின குமார், ஓவர்சீஸ் ராஜா, நகர அமைப்பு அலுவலர் சின்னா, சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×