என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காத்தனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- காத்தனேந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பறை யங்குளம் மலட்டாறு அணைக்கட்டில் இருந்து பிரிந்து செல்லும் சங்கரத் தேவன் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வ ரப்படாமல், கருவேல மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுவதால், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகளுக்காக கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆப்பநாடு இளைஞர் சங்கம் மற்றும் விவசாயிகள் சபை சார்பில் மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை அதிகாரி களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புதான் அந்த கால்வாய் தூர்வாரப்பட் டது. அதனால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும் ஆப்பநாடு இளைஞர்கள் சங்கம், விவசாயிகள் சபை சார்பில் தன்னார்வலர்கள் துணையோடு இளை ஞர்களே கால்வாயை தூர் வார அதிகாரிகள் அனுமதி அளித்தால் போதும் என பலமுறை மாவட்ட நிர்வா கத்திடமும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் மனு அளித்து வருகின்றனர்.
அதிகாரிகள் அனுமதி தர மறுத்து வருவதால் காந்திெஜயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கமுதி, கடலாடியை சுற்றி உள்ள எஸ்.கீரந்தை, நாராயணபுரம், புதுக் கோட்டை, காத்தனேந்தல், ஏனாதி, எ.தரைக்குடி, எஸ்.எம்.இலந்தைகுளம், ஆப்பநாடு, மறவர் கரிசல் குளம், ஏ.உசிலங்குளம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் சங்கரத்தேவன் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசா யிகள், பொதுமக்களின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்