search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டிமட்டம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - கீழ்குந்தா பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    கண்டிமட்டம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - கீழ்குந்தா பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் நேரு வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூ ராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:

    கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட கண்டிமட்டம் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதற்காக அந்த பகுதியில் புதிய குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து, அம்மக்கல் தடுப்பணையில் இருந்து கண்டிமட்டம் வரை குடிநீர் குழாய்கள் பதித்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    காந்திபுரம், பூதியாடா கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால், அங்கு புதிய குழாய்கள் அமைக்கப்படும்.

    மட்டகண்டி பகுதியில் சட்டவிதிகளை மீறி கட்டிய கட்டிடத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். ஆனால் அங்கு தற்போது மீண்டும் கட்டுமான பணிகள் நடக்கிறது.

    மேலும் சட்டவிதிகளைமீறி மின் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்தை, அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

    மஞ்சூர் சுற்றுவட்டார வியாபாரிகளின் கோரி க்கையை ஏற்று கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 30 கிராமங்கள் மற்றும் குந்தா, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு, கிண்ணக்கொரை, அப்பர்ப வானி, பெங்கால்மட்டம், மஞ்சகம்பை, கெத்தை போன்ற சுற்றுலா பகுதிகளை காண கேரளாவில் இருந்துவரும் பயணிகளை, முள்ளி சோதனைச்சாவடியில் தடுக்காமல், அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கவுன்சிலர் மாடக்கன்னு நன்றி கூறினார்.

    Next Story
    ×