search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜகோபுரம்"

    • திருவாடானை பெரிய கோவில் ராஜ கோபுரத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
    • அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சிநேகவள்ளி தாயார் -ஆதி ரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 தலங்களில் 8-வது தலமாக விளங்குகிறது.

    இந்த கோவிலின் ராஜகோபுரம் 9 நிலைகளை கொண்டுள்ளது. இதில் ஆங்காங்கே ஆலமரம், அரசமரம். வேப்பமரம் போன்ற மரக்கன்றுகள் முளைத்திருப்பதால் கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்கள் கீழே விழுந்து வருகின்றன. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
    • இதைத்தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் நடந்தது.

    இதில் கேரளாவை சேர்ந்த 4 நம்பூதிரிகள் கலந்துகொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், தேவபிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த்ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினருக்கும் இந்துசமய அறநிலையத்துறை வடிவமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது போன்று கோவில் தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் கோவிலின் தல விருச்சமான சந்தன மரமும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 66 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நில அளவீடு செய்யும் பணியை இந்துஅறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில், ஸ்ரீரங்கம் ஸ்தபதி இளையராஜா ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியும் மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக்கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த இறுதி கட்ட ஆய்வு பணிகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரத்தின் உயரத்தை 120 அடியில் இருந்து 150 அடியாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ராஜகோபுரத்தை 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ராஜகோபுரம் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொ டர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    • ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
    • ரா ஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ராஜ கோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது. அஸ்திவாரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டதில் கும்பாபிஷேகம் நடத்தி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று அருள்வாக்கு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரா ஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த் ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறை வடி வமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும் மிரு திஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக இந்து சமய அற நிலையத் துறையின் தலைமை ஸ்தபதியும் மகா பலிபுரம் அரசு சிறப்பு கலைக் கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமை யிலான வல்லுனர் குழுவினர் இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபாராம கிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம்
    • கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும்ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்நிலையில் அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதனைத் தெடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 60 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டு வதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்தில் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்க பல்வேறு ஆயுத்த பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் செய்து வரு கின்றனர். இந்நிலையில், மாநில வல்லுனர் குழு வடிவமைப்பு பொறியாளர் முத்துச்சாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கோபுரம் அமையவிருக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர்.

    இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மண்டல ஸ்தபதி செந்தில், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆனந்த், உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்ட னர். இதில் கோவில் கோபுரம் கட்டுமான பணிகளுக்கான மண் பரிசோதனை, கோபுரம் அமைப்பு உள்ளிட்டவை ஆராய்ந்து ஆய்வு செய்தனர்.

    • இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது. திருவனந்தபுரத்தை சேர்ந்த 4 நம்பூதிரிகள் தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும் சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற்காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து மிருதிஞ்சய ஹோமமும் நடந்தது. இந்த ஹோமத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித்சங்கர நாராயணரூ நடத்தினார். அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கன்னி மூலையான வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கோவிலின் தலவிருச்சமான சந்தன மரம் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், மண்டல ஸ்தபதி செந்தில், கோவில் மேல் சாந்திகள் விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, நிதின்சங்கர் போற்றி, சீனிவா சன் போற்றி, கண்ணன் போற்றி, முன்னாள் கோவில் களின் கண் காணிப்பாளர் ஜீவா னந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.
    • இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கி றார்கள். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோ புரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி நடந்தது. அப்போது பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண் டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபி ஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணி யை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற் காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை (22-ந்தேதி) கணபதி ஹோமம் நடக்கிறது. இதற்கிடையில் பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது. இந்த ராஜகோ புரத்தின் மாதிரி வரை படத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வழங்கினார்.

    • தொல்லியல் ஆலோசகர் பார்வையிட்டார்
    • 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம் என்று தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தொல்லியல் துறை ஆலோசகர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் கட்டப்படும் இடத்தையும் தொல்லியல் ஆலோசகர் மணி பார்வையிட்டார்

    • தேவப்பிரசன்னத்தில் தகவல்
    • பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும்

    கன்னியாகுமரி :

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோ புரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையா கவே இருந்து வருகிறது. அஸ்தி வாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.

    காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேவப்பி ரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. திருவனந்த புரத்தை சேர்ந்த சூர்யானந்த் சர்மா, சசிதர சர்மா, நடராஜ அய்யர், பத்மநாப அய்யர் ஆகிய 4 நம்பூதிரிகள் தேவ பிரசன்னம் பார்த்து அருள்வாக்கு சொன்னா ர்கள். மணலிக்கரைமாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ சஜித், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ரா மகிரு ஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, ஜோதீஸ்வரன், நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருக்கோவிலூர் மராமத்து பிரிவு பொறி யாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தேவப்பிரசன்னத்தின் போது கேரளநம்பூதிரிகள் வெற்றிலை மூலமும் சோவியை குலுக்கிபோட்டு பார்த்தும் சொன்ன அருள்வாக்கு முழு விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி கடற்கரையில் தவக்கோல த்தில் பகவதி அம்மன் வீற்றிருப்பதால் இந்த கோவில் அதிக சக்தி வாய்ந்த கோவிலாக திகழ்கிறது. முனிவர்களும், ரிஷிகளும், மகான்களும், சித்தர்களும் தவசு இருந்து முக்திபெற்ற தலமாகும். திருமணம் முடியாமல் இருக்கும் கன்னி பெண்களுக்கு இந்த கோவிலில் தொடர்ந்து 11 வாரம் சுயவரம் அர்ச்சனை செய்தால் திருமணம் நடக்கும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வருவதற்கு இந்த தலத்தை நாடி வந்தால் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்க வேண்டும் என்று இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்தால் வேலை உடனடியாக கிடைக்கும்.

    இந்த கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்ப டாமல் பாழாகி கிடக்கிறது. அதனை உடனடி யாக சீரமைத்து தெப்ப திருவிழாவை ஒழுங்காக நடத்த வேண்டும். இந்த கோவிலின் சன்னதி தெருவில் அமைந்துள்ள பாபநாச தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு அந்த குளத்தில் இருந்து கோவிலுக்கு சுரங்கப்பாதை வழியாக வந்து தான் மேல் சாந்திகளாக இருக்கும் போற்றிமார்கள் அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்த வேண்டும். ஆனால் அந்த பாபநாச தீர்த்தகுளம் இன்று கழிவு பொருட்கள் கலந்து சுத்தம் இல்லாமல் உள்ளது. அதனை உடனடியாக சுத்த ப்படுத்தி மேல் சாந்திகள் அங்கு குளித்துவிட்டு வந்து தான் பூஜை நடத்த வேண்டும்.

    கோவிலில் உள்ள கொடிமரத்தில் கீறல் விழுந்து சேதமடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். தங்க கொடிமரம் வைக்கலாம்.

    அம்மனின் பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும். இந்த கோவிலுக்கு ஸ்தல விருச்சமாக கன்னி மூலையில் சந்தன மரம் நட வேண்டும். கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும். மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும்பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    • இன்று காலை தொடங்கியது
    • பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

    கன்னியாகுமரி, செப்.17-

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக பெருந்திரு விழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தை அமாவாசை, திருக்கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பயனாக தற்போது பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

    இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார். இந்த நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்த தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    கோவில் கொலு மண்டபத்தில் நடந்த இந்த தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த 5 நம்பூதிரிகள் பங்கேற்று தேவபிரசன்னம் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ்வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
    • பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.

    வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.

    சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.

    சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.

    ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.

    சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.

    பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.

    பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.

    கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.

    பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    17-ந்தேதி கேரளா நம்பூதிரிகளை வரவழைத்து தேவபிரசன்னம் பார்க்க ஏற்பாடு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக் காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம் அதேபோல மாலை 4 மணிக்கு திறக்கப் பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பெருந்திருவிழா, நவராத்திரி பரிவேட்டை திருவிழா, ஆடி அமாவாசை, தைஅமாவாசை, திருக்கார்த் திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியைமீண்டும் தொடங்கஇந்துஅறநிலைய த்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதற்கிடையில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற பிரபா ராமகிருஷ்ணன் சென்னையில் அறநிலைய துறைஅமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் முதல் கட்டமாக ஸ்ரீரங்கம் சிற்பி சமீபத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்து ராஜகோபுரம் கட்டுவதற்கான அஸ்திவார ஸ்ரத்தன்மையை ஆய்வு செய்து உள்ளார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அஸ்தி வரத்தோடு நின்று போன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க லாமா? என்பது குறித்து வருகிற 17-ந்தேதி கேரளா வில் இருந்து நம்பூதிரிகளை வரவழைத்து தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கானஏற்பாடுகளை குமரிமாவட்டதிருக்கோவில்களின் இணைஆணையர் ரத்தினவேல்பாண்டியன், அறங்காவலர் குழுதலைவர் பிரபாராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன்நாயர், ஜோதீஸ் வரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பேட்டி
    • 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக பிரபா ராமகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு சுசீந்திரம் திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கோவில்கள் என 490 கோவில்களுக்கும் அவர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அங்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சென்னையில் அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது குமரி மாவட்டத்தில் திருக்கோயிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவர் எடுத்துக் கூறினார். மேலும் ஆயுதபூஜையை யொட்டி பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் உடைவாள் மாற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதாக உறுதி அளித்தார். தொடர்ந்து 490 கோவில்களில் ஆய்வு செய்த போட்டோக்களை பிரபா ராமகிருஷ்ணன், அமைச்சர் சேகர்பாபுவிடம் காண்பித்தார். அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் 490 கோவில்களை ஆய்வு செய்த பிரபா ராமகிருஷ்ணனை அமைச்சர் சேகர் பாபு பாராட்டினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்குமார், துளசிதரன் ஆகியோரும் உடன் இருந்தனர். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையும் அறங்காவல் குழு சந்தித்தது.

    இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் திருக்கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ள 490 கோவில்களையும் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். கோவில்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவரும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் சில கோவில்களை புரணமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.அதற்கான நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக உறுதி அளித்தார். குமரி மாவட்டத்தில் அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×