search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய்"

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் மழையால் வாழைக்குளம் கண்மாய் மறுகால் பாய்கிறது.
    • கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் மலையடி வாரத்தில் உள்ள கண் மாய்கள், நீர் நிலைகள் நிரம்ப தொடங்கின. வாழை குளம், ரெங்கப்ப நாயக்கன் குளம், வேப்பங்குளம் ஆகிய கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 மி.மீட்டர் மழை பொழிவு பதிவானது.

    இதனால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. இதையடுத்து வாழைக்குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த கண்மாய் மூலம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும்அந்த நீரானது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாய்க்கு சென்று சேருவதால் மாவட்டத்தின் பெரிய கண்மாய்களில் ஒன்றான பெரியகுளம் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கண்மாய்க்குள் நிரம்பி கிடக்கும் மதுபாட்டில்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் உள்ளது பணிக்கனேந்தல் கிராமம். இங்குள்ள கண்மாயின் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வருபவர்கள் மது குடித்து விட்டு பாட்டில் களை கண்மாய்க்குள் வீசி செல்கின்றனர். பாட்டில் களை வீசி எறியும் போது அவை உடைந்து கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடக்கின் றன. இதனால் கண்மாய் அழியும் நிலை உள்ளது.

    கண்மாயில் நிரம்பிக் கிடக்கும் பாட்டில் துகள் களை அகற்றவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி பணிக்கனேந்தல் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்செல்வி, மகேஸ்வரி, அருணா, பிச்சை, ராமச்சந்தி ரன் ஆகியோர் கூறியதா வது:-

    பனிக்கனேந்தல் கிராமம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால்தான் விவசாயம் செய்யும் நிலை உள்ளது.இங்குள்ள மூன்றாம்குளம், இரண்டாம் குளம் ஆகிய கண்மாய் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.

    இந்த கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் கண்மாய் கரையிலேயே அமர்ந்து குடித்து விட்டு மது போதையில் பாட்டில்களை கண்மாய்க்குள் வீசி எறிந்து செல்கின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் கண்ணாடி துகள்கள் சிதறி கிடக்கின்றன.

    டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அந்த பகுதியில் பள்ளி மாணவிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது. சமூக விரோத செயல்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனால் இந்த கிராமத்திற்கு தனியாக வர பொதுமக்கள் அஞ்சு கின்றனர். பகலிலேயே இந்த பகுதியில் நடமாட முடியாத அளவுக்கு போதை ஆசாமிகள் சுற்றி திரிகின்ற னர். பனிக்கனேந்தல் கிராமத்தில் மூன்றாம்குளம், இரண்டாம் குளம், சன்னதி யேந்தல், பனிக்கனேந்தல் ஆகிய 4 கண்மாய்கள் உள்ளது. மது பிரியர்களின் அட்டகா சத்தால் கண்மாய் கள் பாழாகி விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது.

    டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • நரிக்குடி அருகே இருஞ்சிறை பெரிய கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும்.
    • விவசாயிகள் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பள வில் பெரிய கண்மாய் உள்ளது. இது பொதுப் பணித் துறையால் பராம ரிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து இருஞ்சிறை, வடக்குமடை, செங்கமடை, தர்மம் உள்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இருஞ்சிறை கண்மாய் பகுதியில் பெரியமடை, கருதாமடை, தாழிமடை என 5 க்கும் மேற்பட்ட மடைகள் இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆண்டு தோறும் கிருதுமால் விவசாய பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விரகனூர் அணையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து உளுத்திமடை, கட்டனூர் வழியாக இருஞ்சிறை பெரிய கண்மாயை வந்தடைகிறது.

    இந்த நிலையில் கண்மாய் மடைகள், அதனை சார்ந்த கால்வாய்கள் அனைத்தும் பல வருடங்களாக தூர்வா ராமல் புதர் மண்டி கிடக்கிறது. மேலும் கண்மாய் பகுதியின் சில மடைகள் சேதமடைந்தும், பெரும்பாலான மடைகளில் துடுப்புகள் இல்லாமலும் இருப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது அது வீணாக வெளியேறி அருகிலுள்ள தரிசு நிலங்க ளுக்கு செல்வதாகவும், இதனால் கண்மாய் நீர் முழுமையாக விளை நிலங்களுக்கு சென்று சேர்வதில்லை என விவசாயிகள் தெரிவிக் கின்றனர்.

    இது குறித்து பலமுறை அதிகாரி களிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப் படுகிறது. முக்கிய பாசன ஆதார மாக உள்ள இந்த கண்மாயை தூர்வாரு வதற்கு போதிய நிதி ஆதாரமில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், வழக்கம் போல விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

    மேலும் கடந்த முறை விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் வெளியேறாமல் இருக்க விவசாயிகள் மணல் மூட்டைகளை மடைக ளுக்குள் அடுக்கி அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இருஞ்சிறை கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வந்தாலும் வீணாக வெளியேறி விவசாயத்திற்கு பயன்படாமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

    கடந்த வருடம் வைகை அணை திறக்கப்பட்டு இருஞ்சிறை கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் விவசாயம் முடிந்து 4 மாத தண்ணீர் இருந்தும் சேதமடைந்த மடைகளால் கண்மாய் நீரானது வீணாக வெளியேறி விட்டதாகவும், தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதி சரிவர சீரமைக்கப்படாத காரணத்தால் புதர்மண்டி கிடப்பதாகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் இருக்கும் பகுதியானது தடம் தெரியாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    இருஞ்சிறை பெரிய கண்மாயை நம்பி 10 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர் செய்து வருவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சி யத்தால் கண்மாய் பகுதி செப்பனிடப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும், 1990-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை விவசாயிகள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் கால்வாய்களை பராமரிப்பு செய்ய வேண்டிய உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே பொதுப்பணி துறையினர் இதை கவனத்தில் எடுத்து அனைத்து மடைகளையும் ஆய்வு செய்து சேதமடைந்த மடைகள், கால்வாய்களை தேவையான நிதி ஒதுக்கீடு செய்து சீரமைத்து தர வேண்டும் எனவும், கண்மாயில் தண்ணீர் சீராக செல்லவும், வீணாக தண்ணீர் வெளியேறாத வகையிலும் கண்மாயை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுக்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலுப்பக்குடி ஊராட்சியில் தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபதாரணி முன்னிலையில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகள், இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுக்கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், லெட்சுமி நகர் முதல் வடக்கு குடியிருப்பு வரை செல்லும் சாலைக்கு கலைஞர் சாலை என பெயர் வைக்கவும், மகளிர் உரிமைத் தொகை கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் யூனியன் தலைவர் முத்துராமலிங்கம், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, உறுப்பினர்கள் அமுதா லெட்சுமணன், சீதா வைரவன், செல்வி முத்து, முன்னாள் தலைவர் அன்பரசன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய், கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் விவசாயி கள் வேளாண்மை சார்ந்த கோரிக்கைகள், பயிர்க்கடன் தள்ளுபடி, கண்மாய்கள் தூர்வாருதல், வயல்வெளி களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரி செய்தல், ஊரணி தூர்வாரு தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்த னர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலமாக பல்வேறு திட்டங் களை அறிவித்து அதன் மூலம் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் விவசாயிகளின் குறைகளையும், கோரிக்கை களையும் கேட்டறியும் வகை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு விவசாயி களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.

    மேலும் வறட்சி நிவாரண மாக நமது மாவட்டத்திற்கு வரப்பெற்ற ரூ.132 கோடி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டு வருகிறது. ஓரிரு தினங்களில் மீதமுள்ள பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

    வடகிழக்கு பருவ மழையையொட்டி கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை சரி செய்திட வும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற தென்னை மற்றும் கரும்பு விவசாயிக ளுக்கான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 457-ஐ மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் கோபு, வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, கூட்டு றவு சங்க மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம்:

    நாட்டின் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக வலைதள வீடியோக்கள் உதவியாக உள்ளன. இதற்கு உதாரணமாக அண்மையில் மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் வீடியோ சாட்சி. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    தமிழகத்தில் கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்களை அரை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் பல்வேறு கண்மாயின் மீன்பிடிக்கும் உரிமையை பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு குத்தகைதாரர்கள் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஏலம் எடுத்தவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளி நபர்கள் யாரேனும் மீன்களை பிடித்து விற்கக்கூடாது என்பதற்காக கண்மாய்க்கு காவலுக்கு ஆட்களை போட்டு கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருங்கூர் கண்மாயில் அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்கள் திருட்டு போய் வந்தது. இதன் காரணமாக கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் கண்மாயில் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, அன்பழகன், மனோகர், மனோஜ் ஆகிய 4 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மீன்பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவலாளிகள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து குத்தகைதாரர் ராஜ்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

    அவர் 4 பேரையும் போலீசில் ஒப்படைக்காமல் அரை நிர்வாணமாக்கி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். அவருடன் சேர்ந்து சதீஷ், சத்தியராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகியோரும் அவர்களை தாக்கி உள்ளனர்.

    அப்போது 4 பேரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனாலும் தொடர்ந்து ராஜ்குமார் தரப்பினர் அவர்களை தாக்கினர். மேலும் மீன்பிடித்தற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டினர். இந்த தாக்குதலை ராஜ்குமார் தரப்பை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வேகமாக பரவி வைரலானது. 4 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடக்கும் பதிவு பார்ப்போர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம் வடக்கு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 4 வாலிபர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைதாரர் ராஜ்குமார், சதீஷ், சத்யராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த இருவர் எலும்பு முறிவு காரணமாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • திருப்பத்தூர் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிறுகூடல்பட்டி சென்னல்குடி கண்மாயில் ஊத்தாகூடை மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். கண்மாயில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தாகூடைகளில் மீன் பிடித்தனர். இதில் சிலருக்கு நாட்டு மீன்களான கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, பாப்புலெட், வயித்து கெண்டை உள்ளிட்ட பெரிய மீன்கள் கிடைத்தன.

    பலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இருந்தபோதும் ஆர்வத்துடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர். மீன்கள் கிடைத்தவர்கள் சாக்குப்பைகள், பாத்திரங்கள், தென்னைநாா் பெட்டிகளில் எடுத்து சென்றனர்.

    • கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    • அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    • திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி கார் டிரைவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை சேர்ந்தவர் காசி (வயது54). கப்பலூர் தொழிற்பேட்டையில் கார் டிரைவராக வேலை பார்த்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று கூத்தியார்குண்டு கண்மாயில் குளித்தார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அந்த பகுதியில் நின்றவர்கள் கண்மாய்க்குள் இறங்கி காசியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    ஆகவே கண்மாயில் காசி மூழ்கியது குறித்து திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். வெகுநேர தேடுதலுக்கு பிறகு காசி பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.
    • வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    மதுரை

    ஆனையூர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(48). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, ஆனையூர் கோசாகுளம் கண்மாயில் அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எமனேசுவரம் கண்மாய் நீர்வழிப்பகுதி ஆக்கிரமிப்பால் 7 கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • எமனேசுவரம் நீர்ப்பாசன சங்க தலைவர் துரை. நாகராஜனிடம் முறையிட்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-வது பெரிய கண்மாய் எமனேசுவரம் கண்மாய் ஆகும். இந்த கண்மாய்க்கு பாத்தியப்பட்ட குமார குறிச்சி, காந்திநகர், பெரும்பச்சேரி, மலையான் குடியிருப்பு, எமனேசுவரம், சுந்தரனேந்தல், ரகுநாதமடை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசனம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

    சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களில் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இங்கு வைகை ஆறு நீர்ப்பாசனத்தை நம்பியே விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

    வைகை கால்வாய் வழியாக வரக்கூடிய நீர் வழித் தடத்தை மறைத்து உயர்ந்த கட்டிடங்களை கட்டி அந்த பகுதியை மேடாக்கி கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்தை வராமல் தடுத்து வருவதாக மேற்கண்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எமனேசுவரம் நீர்ப்பாசன சங்க தலைவர் துரை.நாகராஜனிடம் முறையிட்டனர்.

    அதன்பேரில் அவர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சிவகங்கை மாவட்ட கலெக்டர், இளையான்குடி தாசில்தார், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எமனேசுவரம் கண்மாய் உள்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் பட்டா நிலங்க ளில் புதிய வீடுகள், குடியி ருப்புகள் கட்டி வருகின்றனர். விவசாயம் செய்யக்கூடிய நஞ்சை நிலங்களை அழித்து பிளாட்டு போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நீர்வழி பகுதியில் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் புதிய கட்டிடங்கள் கட்டுவதால் கண்மாயின் நீர்வரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது சம்பந்தமாக பல்வேறு துறை அதிகாரி களிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது கண்மாயின் உள்வாயிலில் மராமத்து வேலைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் கண்மாயின் நீர்ப் பிடிப்பு எல்லை பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் நீர்வரத்து, விநியோகம் போன்றவை பாதிக்கும் நிலை உள்ளது.

    இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கண்மாய் பகுதி பாலைவனமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எமனேசுவரம் கண்மாயை நம்பி விவசாயம், குடிநீர் போன்றவைகளை எதிர்பார்த்து வாழும் 7 கிராம மக்கள் சோதனைகள், துயரங்கள், வறட்சிகளை சந்திக்கும் நிலை உள்ளது.

    எனவே குமாரகுறிச்சி எமனேசுவரம் கண்மாயை நம்பி வாழும் ஏழை, எளிய விவசாய மக்கள் பாதிப்ப டையாத வகையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவனியாபுரம் அருகே அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
    • கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    மதுரை

    மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள வெள்ளக்கல் பகுதியில் அயன்பாப்பாக்குடி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    வறண்ட நிலையில் காணப்பட்ட கண்மாய் 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தற்போது ஓரளவு நீர் நிரம்பியுள்ளது. கண்மாய் அருகே சில கிலோ மீட்டர் தொலைவில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

    கடந்த சில மாதங்களாக இங்கு கழிவுநீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்காலில் இருந்து வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையை யொட்டி வாய்க்காலில் அதிகளவு சுத்திகரிக்கப் பட்ட கழிவுநீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் வெண் நுரை ததும்ப கலக்கிறது. இதனால் கண்மாயில் துர்நாற்றம் வீசுகிறது.

    கழிவுநீர் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    வெள்ளக்கல்லில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த மான சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேலான கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அயன்பாப் பாக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 130 ஏக்கர் கொண்ட திறந்த வெளி நிலப்பரப்பு மற்றும் தோட்டங்களை ஆக்கிர மிக்கிறது.

    இதனால் அந்த பகுதியில் விவசாயம் கேள்வி குறியாகி உள்ளது. மேலும் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தோல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அயன்பாப்பாக்குடி மற்றும் விவசாய நிலங்களில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×