search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்"

    • டாக்டரை தாக்கியதால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. இவரது 11 மாத பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. குழந்தையை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழந்தைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    முன்னதாக குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. அதன் பின்பு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குழந்தையை பார்க்க ஜிப்மருக்கு வந்த தியாகுவின் உறவினர்கள், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் உடல்நிலை மோசமானதாக கூறி அங்கிருந்த டாக்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் டாக்டரை தாக்கினர். இதனால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த காவலாளிகள் தியாகுவின் உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
    • நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.

    இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

    மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.

    • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகர்மன்ற சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், நகராட்சி பொறியாளர் மணி, மேலாளர் சக்திகுமார், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகராஜா பேசுகையில், குளச்சல் அரசு மருத்துமனையில் தேவையான மருத்துவர்கள் இல்லை. மருந்து தட்டுப்பா டும் உள்ளது. மருத்து வமனையை சீரமைக்க அனைத்து கவுன்சிலர்களும் மருத்துவமனையில் உள்ளிருப்பு செய்வோம் என்றார். தி.மு.க. கவுன்சிலர் ஷீலா ஜெயந்தியும், குளச்சல் மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் நசீர், தேவையான மருத்துவ உபகரணங்கள் கேட்டு எழுதி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. கவுன்சிலர் ரகீம் பேசுகையில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளருக்கு தன் பணி குறித்து அடிப்படை தெரியவில்லை. நகராட்சி ஆக்கிரமிப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். உடனே தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கும்போது கவுன்சி லர்கள் சிபாரிசுக்கு வரக்கூ டாது என்றார்.

    சுயேச்சை கவுன்சிலர் அன்வர் சதாத் பேசுகையில், சிலர் தெருக்களையே ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினர். அம்மா உணவகத்திலிருந்து பார்சல் வாங்கி சிலர் வெளியே விற்பனை செய்வ தாக காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அம்மா உணவகம் கண்காணிக்கப்படும் என தலைவர் கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பணிக்குருசு, ஜான் சன், ஜான் பிரிட்டோ, நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்தி ற்குட்பட்ட காகிதக்காரத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் , இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சந்திரசேகரன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற சந்திரசேகரன் மதிய உணவு அருந்திவிட்டு தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து ள்ளார்.

    இதனை யடுத்து சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரி ழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பணியின் போது மாரடைப்பில் உயிரிழந்த 58 வயதான சந்திரசேகரன் இதற்கு முன்பு கூத்தாநல்லூர் காவல் நிலையம் திருவாரூர் தாலுகா காவல் நிலையம் நிலைய எழுத்தராக பணிபுரிந்து ள்ளார். கடந்த 4 வருடங்களாக திருவாரூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தி ல் உள்ள மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளராக ஒரு வருடம் பணியில் இருந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழந்த நிகழ்வு மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.
    • 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய முதுநிலை படிப்பு மொத்த இடங்கள் 2,100 உள்ளன. இவற்றில் 50 சதவீத இடங்கள் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 50 சதவீத இடங்கள் தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் முதுநிலை மேற்படிப்புக்கு பல கோடி செலவிட வேண்டிய நிலையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 'நெஸ்ட்' தேர்வு மூலம் சேர தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்லது.

    மிகவும் குறைந்த செலவில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க அரசு உதவி செய்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து முடிக்கும் போது, இதுவரையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி மூப்பு காலம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவர்களின் பணி ஓய்வு காலம் 60 வயது என மாற்றப்பட்டது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிக்கலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் கடைசி பணி ஓய்வுபெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறையும் ஏற்கனவே உள்ளது.

    இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, '55 வயது உள்ள மருத்துவர் முதுநிலை படிப்பில் இதன்மூலம் சேர முடியும். 3 ஆண்டுகள் முதுநிலை படிப்பை முடித்தபின் அவர் மேலும் 2 ஆண்டுகள் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிய வேண்டும். இது முன்பு ஓய்வு பெறும் வயதில் இருந்து 2 ஆண்டுமுன்பு வரை முதுநிலை மருத்துவபடிப்பில் சேரலாம் என இருந்தது. அதில் மாற்றம் செய்து புதிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது
    • ஜீவிதா விற்கு அவருடைய தாயார் சார்லட் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சார்லட் (வயது 52), தொ ழிலாளி. இவரது மகள் ஜீவிதா (31) என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறுநீரக பிரிவில் சிசிச்சைக்காக சேர்ந்தார்.

    ஆஸ்பத்திரியில் அவருக்கு கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனிடையே ஜீவிதாவுக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. இந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகமும் அகற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. ஜீவிதாவிற்கு அவருடைய தாயார் சார்லட் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 6-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சார்லட்டுக்கு முழு உடல் பரிசோதனையும் மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ குழுவில் முன் அனுமதியும் பெற்றார்கள்.

    இதையடுத்து ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள் மற்றும் டாக்டர்கள் ஜெயலால், பத்மகுமார், அருண் வர்கீஸ், எட்வர்ட் ஜான்சன், செல்வகுமார் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் ஜீவிதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பின்னர் அவர் 15 நாட்கள் மருத்துவ குழுவினரால் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜீவிதா தற்போது நல்ல உடல் நலம் பெற்று உள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜீவிதாவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ டாக்டர் குழு வினரை பாராட்டினார்.

    அப்போது ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் பேசியதாவது:-

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 2 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் டுள்ளது. முதலில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. பின்னர் மருத்துவ முன் அனுமதி பெற்று அவருக்கு அவரது தாயாரின் ஒரு சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஜீவிதாவிற்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த அனைத்து மருத்துவ குழுவினரையும் பாராட்டுகிறேன். மேலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வினையை சீர் செய்யும் சிறப்பு மருந்துகளும், தொடர் கண்காணிப்பு சிகிச் சைக்கான பரிசோதனை களும் முற்றிலும் இலவசமாக தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத் தின் கீழ் வழங்கப்படும். இந்த மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ10 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
    • டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

    கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    • சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி இட்டேரி சாலை பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது37). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கவுசல்யா. இவரும் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் ஊர் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் 40 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி பகுதியில் தனியாக இருக்கும் வீடுகள், நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. போலீசாரின் தீவிர கண்காணிப்பால் குற்ற சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் உதயகுமாரை தாக்கி கட்டிப்போட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் மற்றொரு டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்குமோ? என சந்தேகம் எழுந்துள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது.
    • 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாட்னா :

    பீகார் மாநில சுகாதாரத்துறை, அறிவிப்பு இல்லாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருந்த 62 அரசு டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்களில் சிலர் ஒரு ஆண்டாகவும், மேலும் சிலர் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பு சுகாதார துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அனுமதியற்ற விடுமுறைக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பதில் அளிக்காத டாக்டர்களுக்கு தற்போது பகிரங்க நோட்டீஸ் வெளியிடப்பட்டு உள்ளது. இனி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர இருக்கிறது. அதிகபட்ச ஒழுங்கு நடவடிக்கையாக தவறு செய்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடம் உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும்.
    • ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரியில், டாக்டர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்தரியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் 2012-ம் ஆண்டின் கேரள சுகாதாரத்துறை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார்.

    அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மருத்துவத் துறையின் முழு பாதுகாப்புக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

    புதிய சட்ட திருத்த மசோதா குறித்து கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய சட்ட திருத்த மசோதா மூலம், சுகாதாரத்துறையில் உள்ள டாக்டர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. கொலை தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும். டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் இந்த புதிய சட்ட திருத்தத்தின் கீழ் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

    இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். சுகாதாரத்துறையினருக்கு எதிரான குற்றங்களுக்கு, சிறை தண்டனை மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.

    டாக்டர்கள், ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னரின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அங்கீகாரம் கிடைத்த பின், சட்டசபை கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×