search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்
    X

    பலியான சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்.

    சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்தி ற்குட்பட்ட காகிதக்காரத் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் , இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சந்திரசேகரன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற சந்திரசேகரன் மதிய உணவு அருந்திவிட்டு தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்து ள்ளார்.

    இதனை யடுத்து சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரி ழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பணியின் போது மாரடைப்பில் உயிரிழந்த 58 வயதான சந்திரசேகரன் இதற்கு முன்பு கூத்தாநல்லூர் காவல் நிலையம் திருவாரூர் தாலுகா காவல் நிலையம் நிலைய எழுத்தராக பணிபுரிந்து ள்ளார். கடந்த 4 வருடங்களாக திருவாரூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தி ல் உள்ள மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளராக ஒரு வருடம் பணியில் இருந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பில் உயிரிழந்த நிகழ்வு மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×