என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறை: மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
- வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும்.
- ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
திருவனந்தபுரம் :
கேரளாவில் கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரியில், டாக்டர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்தரியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2012-ம் ஆண்டின் கேரள சுகாதாரத்துறை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மருத்துவத் துறையின் முழு பாதுகாப்புக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
புதிய சட்ட திருத்த மசோதா குறித்து கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய சட்ட திருத்த மசோதா மூலம், சுகாதாரத்துறையில் உள்ள டாக்டர்கள் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆஸ்பத்திரிகளில் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. கொலை தொடர்பான குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வார்த்தைகளால் சுகாதார ஊழியர்களை திட்டினாலும் தண்டனை உறுதியாகும். டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் ஆகியோர் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் இந்த புதிய சட்ட திருத்தத்தின் கீழ் முழு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இந்த சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். சுகாதாரத்துறையினருக்கு எதிரான குற்றங்களுக்கு, சிறை தண்டனை மட்டுமின்றி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.
டாக்டர்கள், ஊழியர்களை தாக்குபவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கவர்னரின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னரின் அங்கீகாரம் கிடைத்த பின், சட்டசபை கூட்டத்தில் சுகாதாரத்துறை தொடர்பான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்