search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி ஜிப்மர் டாக்டரை தாக்கிய உறவினர்கள்- போலீசார் விசாரணை
    X

    குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி ஜிப்மர் டாக்டரை தாக்கிய உறவினர்கள்- போலீசார் விசாரணை

    • டாக்டரை தாக்கியதால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. இவரது 11 மாத பெண் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. குழந்தையை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குழந்தைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    முன்னதாக குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. அதன் பின்பு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குழந்தையை பார்க்க ஜிப்மருக்கு வந்த தியாகுவின் உறவினர்கள், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால்தான் உடல்நிலை மோசமானதாக கூறி அங்கிருந்த டாக்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் டாக்டரை தாக்கினர். இதனால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த காவலாளிகள் தியாகுவின் உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×