search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமப்புறம்"

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
    • நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.

    இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

    மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.

    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கனரா வங்கியின் இலவச தொழிற்பயிற்சிக்கு கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் நபா்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் ஆண்கள், பெண்களுக்கு இலவச சிசிடிவி கேமரா, தீ அலாரம் பொருத்துதல் மற்றும் பழுது பாா்த்தல் தொடா்பாக 13 நாள்கள் முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியின் முடிவில் திறன் இந்தியா சான்றிதழும், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆகவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். 

    • தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதலிபாளையம் நிப்ட் -டீ கல்லூரியில் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (டி.டி.யு.ஜி.கே.ஒய்.,) திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,250 பேருக்கு பயிற்சி அளிக்க கல்லூரிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. கிராமப்புற இளைஞர்களுக்கு தையல், அப்பேரல் பேஷன் டிசைன், மெர்ச்சன்டைசிங் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    கடந்த 2019 முதல் இதுவரை 1,050 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 150 பேருக்கு அப்பேரல் பேஷன் டிசைன் பயிற்சி அளிக்க கல்லூரியின் திறன் பயிற்சி மையம் முடிவு செய்துள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் உணவு, தங்குமிடம், சீருடை, கல்வி உபகரணங்களுடன் இலவசமாக பேஷன் டிசைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ் 2 மற்றும் அதற்குமேல் படித்த கிராமப்புற இளைஞர்கள் இப்பயிற்சியில் இணையலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் உடனடி வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கிராமப்புற சாலைகளில் இருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு சொல்கிறார்.
    • தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் விபத்துகள் மூலம் தினமும் 410 உயிரிழப்புகளும், தமிழகத்தில் 41 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

    இதைக் கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருசக்கர வாகன பயன்பாடு 42 சதவீதமும், 4 சக்கர வாகன பயன்பாடு 17 சதவீதமும், கனரக வாகன பயன்பாடும் 14 சதவீதமும் உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களே அதிகம் நடக்கின்றன.

    'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் விபத்து சிகிச்சை அளிக்க 659 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 83512 விபத்துகளில் தமிழக அரசு ரூ.75.81 கோடி செலவழித்து 83512 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

    விபத்தை அதிகளவில் குறைத்து முதலிடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.25 லட்சமும், 2-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.13 லட்சமும், 3-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை 4 வழிச்சாலைக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு

    முதல்கட்டமாக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை பணி நடந்து வருகிறது. 2-ம் கட்டமாக நாகப்பட்டினம் வரை, 3-ம் கட்டமாக ராமநாதபுரம் வரை, 4-ம் கட்டமாக தூத்துக்குடி வரை, 5-ம் கட்டமாக கன்னியாகுமரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கார் நிறுத்தம் மற்றும் கழிப்பறை அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்துள்ளேன்.

    சாகர் மாலா திட்டத்தின் பாம்பன் பாலத்தின் கீழ் பாம்பன் கால்வாய் 10 மீட்டர் ஆழத்தில் தூர்வார மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.

    தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இதற்காக முதல்வருடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். தமிழகத்தில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம், பி, , எம்.எல்.ஏ, க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×