search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accidents"

    • பாதாள சாக்கடை-கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டி மூடப்படாத குழிகளால் தொடரும் விபத்துகள் அதிகரித்துள்ளது.
    • சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொழில் வளர்ச்சியில் நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறைந்து கொண்டே செல்கிறது. நக ரின் நுழைவு வாயிலான பஞ்சு மார்க்கெட் முதல் யூனியன் அலுவலகம் வரை மிக மோசமான நிலையில் உள்ள சாலையால் நாள் தோறும் நடக்கும் விபத்துகள் தவிர்க்க முடியாததாகி விட்டது.

    அதிலும் ஒரு மணி நேரம் மழை பெய்துவிட்டால் சாலை எது, சாக்கடை எது என்று தெரியாத அளவுக்கு மூழ்கிவிடுகிறது. பாதசாரி கள் முதல் வாகனங்களில் பயணம் செய்வோர் திக்கு தெரியாமல் தடுமாறும் நிலை இன்றளவும் தொடரத் தான் செய்கிறது.

    இதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தை வலியுறுத்தி ராஜபாளையம் நகர் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று (21-ந்தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு அனுமதி வழங்கப் படாத நிலையில் உண்ணா விரதம் இருக்க முயன்ற 17 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில அடைத்து வைத்தனர். கைதானவர்கள் அங்கும் தங்களது போராட் டத்தை தொடர்ந்தனர்.

    ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரப ரணி கூட்டு குடிநீர் திட்டப்ப ணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நடைபெற்ற தென்காசி சாலை கடந்த இரண்டு ஆண்டு காலமாக போக்கு வரத்துக்கு லாயக்கற்று மிக மோசமான நிலையில் உள் ளது. இச்சாலையில் பய ணித்த பலரும் விபத்துக்குள் ளாகி உள்ளனர். கடந்த ஆண்டு ஒரு மாணவன் உயி ரிழந்ததுடன், பலருக்கு கை, கால் முறிவு, முதுகுத் தண்டு வட பாதிப்பும் ஏற்பட்டுள் ளது.

    எனவே இந்த சாலையை சரிசெய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். அதன் அடிப்படையில் இச்சா லையை ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் இந்தச் சாலை போக்குவரத் துக்கு பயன்பாடு உள்ள வகையில் நன்றாக உள்ளது என சான்று அளித்தது கூட்டமைப்பு நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத் துள்ளது.

    இந்நிலையில் தான் 12 மணி நேரம் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதி அனுமதி கேட்ட நிலையில் நேற்று 20.11.23 இரவு 11 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. இரண்டு வருட காலமாக மக்கள் துன்பத்திற்கு முடிவு கிடைக்காத நிலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டால் அதை தடுக்கக்கூடிய வகையில் காவல்துறைக்கு நிர்பந்தம் இருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களுடைய உணர்வு களை வெளிப்படுத்தும் வித மாக தடையை மீறி ராஜபா ளையம் நகர் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் ஜவகர் மைதானத்தில் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட ஒருங்கிணைப் பாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திர ராஜா, மணி–கண்டன் தலைமையில் பங்கேற்றோர் கைதானார் கள்.

    இந்த போராட்டம் நடை பெற்ற ஒரு மணி நேரத்திற் குள் சாலைகளை (பேட்ச் ஒர்க்) சரி செய்யும் பணி களை தமிழக நெடுஞ்சா லைத்துறை துவக்கியுள்ளது. நிரந்தரமாக பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென் றால் பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை புதிதாக சாலை அமைக்கப்பட வேண்டும். எனவே அதற்கான முயற்சி களை தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணையம் செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை விரை வில் அறிவிப்போம் என சமூக ஆர்வலர்கள் கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்.

    நேற்று மதியம் டயருக்கு பஞ்சர் ஒட்டியது போல தென்காசி செல்லும் மெயின் ரோடான தேசிய நெ(கொடு)ஞ்சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்து முடிக் கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு மேல் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் ஒட்டுப்போட்ட சாலை பணி கள் ஒட்டுமொத்தமாக கரைந்து காணாமல் போனது. எனவே இனிமே லும் இதுபோன்ற மக்களை ஆறுதல் படுத்தும் பணிகளை கைவிட்டு சாலை சீரமைப்பு பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் முழுகவனம் செலுத்த வேண்டும் என் பதே ராஜபாளையம் வாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது.
    • 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறி கூடங்கள், கறிக்கோழி உற்பத்தி, விவசாயம், கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இணைப்பு சாலைகள், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன. வெளி மாநில வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர், மணல் லாரிகள், சரக்கு வேன்கள், ஆம்புலன்சுகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து செல்கின்றன.

    கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைப்பதால், சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக பல்லடம் உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இணையாக விபத்துகள், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டி ரிங் ரோடு, கரூர்- கோவை பசுமை வழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. சமீபத்தில் பல்லடம் - காரணம்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் இது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல்லடம் வட்டாரத்தில் நடந்த வாகன விபத்துகள், மற்றும் உயிரிழப்புகள் புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

    இதில் 2012 ம் ஆண்டு முதல் 2023 நடப்பு ஆண்டு வரை இதுவரை மொத்தம் ஆயிரத்து 117 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 110 பேர் வரை வாகன விபத்துகளில் மட்டும் உயிரிழக்கின்றனர். இதனால் எண்ணற்ற குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பல்லடத்தை காட்டிலும் குறைந்த அளவு போக்குவரத்து கொண்ட தாராபுரத்தில் கூட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல்லடம் தொகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது கானல் நீராகவே உள்ளது. எனவே சந்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை தவிர்க்கவும் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.
    • பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை - பொன்னன்படுகை இடையே சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் தரைப்பாலத்தில் இருந்து நீர் வெளியேற அமைக்கப்பட்டிருந்த 2 வாய்க்கால்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடாக மாறியது.

    இதனால் மழை பெய்யும் நேரங்களில் நீர் வெளியேற முடியாமல் தரைப்பாலம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்படும். அதுபோன்ற நேரங்களில் தரைப்பாலத்தை கடந்து செல்ல பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தரைப்பாலத்தில் நீர் உடனடியாக வெளியேறும் வகையில் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னன்படுகை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தற்போது தரைப்பாலத்தில் மழைநீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது. எனவே பாலத்தை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு இரவு நேரங்களில் பைக் விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் சில வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதிக தொலைவு உடைய குமணன்தொழு சாலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். அல்லது அதே இடத்தில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காமன்கல்லூர் கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு வரையிலான வெள்ளிமலை சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
    • எதிரெதிரே விலகி செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே காமன்கல்லூர் கிராமத்தில் இருந்து கடமலைக்குண்டு வரையிலான வெள்ளிமலை சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

    வாகன ஓட்டிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து காமன்கல்லூர்- கடமலைக்குண்டு இடையே புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கியது. அதில் சாலையின் இருபுறமும் மணல் கரைகள் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலையின் சில இடங்களில் மணல் கரைகள் அமைக்கப்படவில்லை.

    எனவே அந்த பகுதியில் எதிரெதிரே விலகி செல்லும் வாகனங்களில் ஏதாவது ஒன்று சாலையோர பள்ளத்தில் இறங்கினால் பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் விடுபட்டுள்ள இடங்களில் மண் கரைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விபத்துகளில் வாலிபர்-பெண் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள சாலை இலுப்பை குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டிமுருகன் (24). இவர் திருச்சுழி-காரியாபட்டி மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி முத்துலட்சுமி (38). இவர்கள் காசுகடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த முத்துலட்சுமி திடீரென தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காலை 8 மணியில் இருந்து இயங்குவதால் வாகனஓட்டிகள் பாதிப்பு
    • இரவு நேரத்தில் புறப்பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகள் அதிவேகத்தில் பறப்பதால் பாதசாரிகள் அவதி

    குனியமுத்தூர்,

    கோவையின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி விபத்துக்களும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து சாலைக ளில் அன்றாடம் பயணி க்கும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு போக்கு வரத்து சிக்னல்கள் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் இல்லையென்றாலும் கூட வாகனஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, சாலைகளை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போக்குவரத்து சிக்னல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

    கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் காலை 8 மணியில் இருந்துதான் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரை ரோட்டில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருசில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே சிறு சிறு விபத்துகளும் அரங்கேறி வருகிறது.

    கோவையில் வியாபாரிகள் காலைநேரத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் காய்கறி வாங்கி செல்கின்றனர். உழவர் சந்தையில் காய்கறி வாங்கி வீடு திரும்பும் வாகனங்களையும் பார்க்க முடி கிறது.

    அதிகாலையில் டியூசன் செல்லும் மாணவ மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து சாலையில் அதிகாலை நேரத்தில் கார்கள், பஸ்கள் மற்றும் நடைப்பயிற்சி செல்வோரையும் ஒரே நேரத்தில் அதிகமாக பார்க்க முடிகிறது.

    கோவையில் அதிகாலை நேரத்தில் சிக்னல்கள் இயங்காததால் அனைத்து வாகனங்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு சாலையை கடக்க முற்படுகின்றன. இதனால் பல்வேறு பகுதியில் சிறு-சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மேலும் தினந்தோறும் இரவு நேரங்களில் புறப் பட்டு கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள், சரக்கு லாரிகளும் அத்துமீறிய வேகத்தில் செல்கின்றன. அத்தகைய நேரத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    சென்னையில் காலை 6 மணி முதல் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. எனவே சென்னையை போல கோவையிலும் அதிகாலை 6 மணிக்கு சிக்னல் இயக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலைகளில் சிறு சிறு விபத்துகளையும் தடுக்க முடியும்.

    போக்குவரத்து நெரிசலும் கட்டுப்படும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சென்டர் மீடியனில் மோதி தினமும் விபத்தில் வாகனங்கள் சிக்குகின்றன.
    • எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் எதுவுமி இல்லா ததால் தினந்தோறும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நூற்பாலை உள்ளிட்ட ஆலைகளுக்கு மூலப்பொ–ருட்கள் மற்றும் உற்பத்தி பொருட் களை கொண்டு செல்ல தினசரி நூற்றுக்கணக் கான கனரக வாகனங்களும் இவ்வழியே செல்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் எல்.ஐ.சி. சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. உயரம் குறைவாக உள்ள சென்டர் மீடியனில் பேருந்து கள், கனரக வாகனங்கள் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    வளைவு பகுதி யில் எச்சரிக்கை பலகைகள் இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர் கள் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சா லையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது.

    இந்தநிலையில் கோயம் புத்தூரில் இருந்து ராஜபா ளையம் பகுதியில் உள்ள ஆலைக்கு மூலப்பொருட் களை ஏற்றி வந்த சரக்கு லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. லாரியில் சரக்குகள் அதிக அளவில் இருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் மதுரை-கொல் லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு லாரியில் இருந்த சரக்குகள் இறக்கப் பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத் தப்பட்ட பின் போக்குவ ரத்து சீரானது.

    அதே போல் நேற்று இரவு அதே சென்டர் மீடியனில் சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியன் உயரத்தை அதிகரித்து எச்சரிக்கை விளக்குகள் பொறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • டிப்பர் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் லாரிகளில் இருந்து கற்கள் மற்றும் மண் சிதறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது
    • அசுரவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    அன்றாட அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதுவாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்போடு எளிதில் செல்லும் வகையில் மத்திய-மாநில அரசுகளால் ஊரக ,மாவட்ட, மாநில தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.அதன் வழியாக பல்வேறு தரப்பட்ட மக்கள் நாள்தோறும் சென்று தேவைகள் சேவைகளை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.இந்த சூழலில் சுயநல நோக்கோடு செயல்படும் ஒரு சிலர் டிப்பர் லாரிகளில் அதிக அளவு மண்ணை ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் சாலைகள் சேதம் அடைவதும் கற்கள் மற்றும் மண் சிதறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் உடுமலை பகுதியில் இருந்து கற்களுடன் கூடிய சரளைமண்ணை ஏற்றிக் கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் சரளைகற்கள், மண்துகள்களை மேம்பாலத்தில் சிதர வைத்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

    பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை ஏதுவாக்கும் வகையில் சாலைகள் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.இதில் நிலப்பரப்போடு உள்ள சாலைகளை காட்டிலும் ஏற்ற இறக்கத்துடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் சற்று அபாயகரமானவை. ஏனென்றால் வாகனங்களை நிலை தடுமாற வைக்கும் சூழல் மேம்பாலங்களுக்கு உண்டு. அதை உணராமல் உடுமலை காந்தி சதுக்கத்தில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் கற்களுடன் கூடிய மண் துகள்களை சிதற வைத்து சென்று கொண்டு உள்ளது.உருளும் தன்மை கொண்ட கற்களால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேம்பாலம் வழியாக டிப்பர் லாரிகள் மண்ணை எடுத்துக் கொண்டு சென்ற வண்ணம் உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் அதிக அளவு மண்ணை ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் மேம்பாலத்தை கடந்து வருகிறது.அப்போது அதன் வேகத்தை தாங்க முடியாமல் மேம்பாலம் ஆட்டம் கண்டு வருவதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே அதிகாரிகள் அசுரவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகளை மீது நடவடிக்கை எடுப்பதுடன் மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் கற்கள் மண் துகள்களை உடனடியாக அகற்றி பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர்.
    • கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் புதுவை மாநிலத்திலிருந்து மது கடத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒழுக்கீனமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் மது போதையில் ஓட்டுகிறார்களா என சோதனை செய்து மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர். இதனையடுத்து கடலூரில் மதுபோதையில் ஏ.டியம் எந்திரத்தை வாலிபர் ஒருவர் இரவில் உடைத்த சம்பவமும் நடைபெற்றது. புதுவை மாநிலத்திலிருந்து மது அருந்தி வருவதும், மது கடத்தல் சம்பவமும் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே உள்ள சோதனை சாவடியில் 24 மணிநேரமும் போலீசார் புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு சென்று அங்கு திடீரென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் அங்கு பணியில் இருந்த போலீசார்கள் சரியான முறையில் சோதனை செய்கின்றார்களா அல்லது சரியான முறையில் அவர்கள் பணிகளை செய்யாமல் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீசார்களிடம் மது கடத்தல், மது போதையில் வாகனங்களை ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக விபத்து ஏற்படும் விதத்தில் லோடுகளை ஏற்றி வருவது, ஒழுங்கீனமான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலி பர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்க ளை யாரேனும் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தி வருகின்றனர்
    • திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

    சூலூர்,

    சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் உள்ள திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையை இரண்டாக பிரிக்க நடுவில் தடை கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை கற்களுக்கு அருகே எந்தவித எச்சரிக்கை பலகையும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் அந்த வழியே வந்த கார் ஒன்று மற்றொரு காரை முந்தியபோது இந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இன்ப துரைராஜ் என்பவருக்கும் அவருடன் வந்த மற்றொருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல மேலும் ஒரு கார் ஒன்று நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இப்பகுதியில் குறுகிய காலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதே இடத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. நெடுஞ்சாலை துறையினர் சாலை தடுப்பு அருகே போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் அல்லது பால வேலை நடைபெறும் இடம் வரை சாலை தடுப்பு கற்களை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் சாலையின் மத்தியில் சாலை தடுப்பு கற்களை முழுவதுமாக வைத்தனர். மேலும் அதன் மீது ஒளிரும் பட்டைகளையும் ஒட்டினர்.

    • திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
    • நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 27).அங்குள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று மாலை தனது மகளை இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக அன்பழகன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது .

    அப்போது தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்பழகன் குழந்தையை அணைத்து பிடித்துக்கொண்டார். இருப்பினும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பொதுமக்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு அன்பழகன் இறந்தார். இந்த விபத்தில் குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது.
    • டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் போலீஸ் நிலையம் எதிரே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்லடத்தில் தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலைகளில் போதிய இடவசதி இன்றி உள்ளது. இந்த நிலையில் சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துக்கள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போலீஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள டீக்கடை முன்பு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

    இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×