search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speed limit"

    • வரும் 4ம் தேதி முதல் வாகனங்கள் வேக வரம்பு அமல் படுத்தப்படும் என அறிவிப்பு.
    • வேக வரம்பை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் அபராதம்.

    சென்னையில், சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகனங்களுக்கான வேக வரம்பை நிர்ணயித்து போக்குவரத்து காவல்துறை நேற்று அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னையில் இலகு ரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கி.மீ வரை செல்லலாம் என்றும்,

    இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் 50 கி.மீ., ஆட்டோக்கள் அதிகபட்சம் 40 கி.மீ., வேகம் வரை செல்லலாம் என்றும் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சென்னையில் கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வேக வரம்பை மீறி செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள் வேக வரம்பை மீறினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது.

    வேக வரம்பை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு ஏ.என்.பி.ஆர் கேமரா மூலம் அபராதம் செலுத்தப்படும்.

    வரும் 4ம் தேதி முதல் வாகனங்கள் வேக வரம்பு அமல் படுத்தப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வேக கட்டுப்பாட்டை மீறி 3 மடங்கு வேகத்தில் கேரி சென்றார்
    • என் ஒரே அழகான மகளை இழந்து விட்டேன் என்றார் லட்சுமிதாஸ்

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரின் மேற்கில் உள்ள கென்சிங்டன் பகுதியில் ஜேட் முடுவா (22) எனும் இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, ஒரு பெண்ணை கத்தியை காட்டி எவரோ பயமுறுத்துவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததின் பேரில், அப்பெண்ணை காக்க சம்பவ இடத்திற்கு பெருநகர காவல்துறை வாகனத்தில் கேரி விட்கின்சன் (Gary Witkinson) எனும் காவலர் விரைந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த பகுதியில் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு இருந்தும் தனது கடமையை ஆற்ற சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் கேரி சென்று கொண்டிருந்தார்.

    நடந்து வந்து கொண்டிருந்த முடுவா, சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரி, முடுவாவை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால், மிக வேகமாக ஓட்டியதால் அவரால் உடனே நிறுத்த முடியவில்லை. இதனால் துரதிர்ஷ்டவசமாக முடுவா மீது கேரியின் காவல்துறை வாகனம் மோதியது.

    இதையடுத்து உடனடியாக கேரி காரை நிறுத்தினார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முடுவா, பலத்த காயங்களால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்திற்கு காரணமான கேரி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.

    ஆனால், கேரி காவல்துறையினரின் நடத்தை விதிகளின்படியே செயல்பட்டதாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    இதனையடுத்து, மிகுந்த வேதனையடைந்துள்ள முடுவாவின் தந்தை ஜெர்மைன் லட்சுமிதாஸ் (Jermaine Laxmidas), தெரிவித்ததாவது:

    காரால் மோதிய கேரியிடம் கேட்கப்பட்ட போது, "காவல்துறை வாகனங்கள் கடமையை ஆற்ற வேக கட்டுப்பாட்டை தாண்டி 3 மடங்கு அதிகம் செல்லாம்" என கூறியுள்ளார். இது தவறு. இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும். என் ஒரே அழகான மகளை நான் இழந்துள்ளேன். காவலர்களின் வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு லட்சுமிதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    அவரது இழப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும் அதே நேரம் இவரது தனிப்பட்ட கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளத்தில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சா லைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தார்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சில இடங்களில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு அருகே வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது.

    இதன் காரணமாக சிலர் தடுமாற்றத்துடன் விழுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.

    எனவே சாலையில் வேகத்தடை அமைக்கும் போதே வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    இல்லையென்றால் வேகத் தடுப்பில் அடிக்கும் வெள்ளை நிறத்திற்குப் பதில் வேகத்தடுப்பு கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம் என்று வாகன வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் எங்கெல்லாம் வேகத்தடைக்கு வர்ணம பூசாமல் உள்ளது என கண்டறிந்து அதறகு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சென்னை- கும்பகோணம் சிதம்பரம் பிரதான சாலை பின்னலூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சிவன் கோவில் அருகில் மற்றும் பஸ்நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.

    தற்போது சாலை அமைக்கப்பட்ட பின்பு அந்த இடத்தில் வேகத் தடை அமைக்கப்படவில்லை . இதனால் தொடர்ந்து விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் டி.எஸ்.பி. பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),

    இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பெரும்பாலான சுற்றுலா வாகனங்கள் அசுர வேகத்தில் பயணிக்கின்றன.

    கோத்தகிரி சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அபாயகரமான வளைவுகள் உண்டு. எனவே அங்கு செல்லும் உள்ளூர் வாகனங்கள் வாகனங்கள் வேகத்தை குறைத்து கவனத்துடன் செல்லும். ஆனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள், அபாய வளைவுகள் இருப்பதை அறியாமல், அதிவேகமாக சென்று திரும்புகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேட்டுப்பாளையம்- கோத்தகிரி ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கே.ஜி.மில் அருகே அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
    • சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் ரோட்டில் கே.ஜி.மில் அருகே நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், வளைவில் திரும்ப முடியாமல் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக நொறுங்கியது.

    எனவே மின்கம்பியில் பயங்கர தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்தனர்.

    அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் சாலையில் கடந்த வாரம் அதிகாலை கர்நாடக பஸ்- ஜீப் மோதி விபத்து நடந்தது. வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் வேகத்தடை இல்லை. எனவே அங்கு அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    இதனால் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் வேகத்தடை-டிவைடர் வைத்து, வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆனைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள சோலார் அடுத்த புறவழி ச்சாலை பகுதியான ஆனை க்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்து கவுண்டன் பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சென்று வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேக த்தடைகளும் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அகற்ற ப்பட்டது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்து வந்தது.

    ஒரு சில விபத்துகளும் இந்த பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இல்லாததால் வேகமாக சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில்  ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சரஸ்வதி எம்.எல்.ஏ., மொட க்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.

    இதில் சரஸ்வதி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேசி முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை யடுத்து அதிகாரிகள் விரை வில் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.

    இதனை அடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அங்கு இருந்து கலை ந்து சென்றனர்.

    • வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
    • வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குவிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் மைசூர் செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் இருந்து புஞ்சை புளியம்பட்டி செல்லும் முக்கிய சாலையில் தாசம்பாளையம் கிராமம் உள்ளது.

    பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி வரை தற்பொழுது புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, ரோடு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் இருந்து மைசூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் அதி வேகத்தில் செல்வதால் கடந்த ஒரு மாதமாக தாசம்பாளையம் கிராமம் அருகே ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்தனர்.

    மேலும் தாசம்பாளையம் கிராமத்தில் 3 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எதுவும் இதுவரை செய்யப்படாததால் இன்று காலை தாசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே குவிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் மைசூர் செல்ல வேண்டிய அனைத்து கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் 3 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    • திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
    • வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    வீரபாண்டி:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிபாளையம் செல்லும் சாலை ஏ.பி. நகர்., நொச்சிபாளையம், அவரப்பாளையம்,அல்லாளபுரம் ,உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதால் ஏபி நகர்,தெற்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம், .நொச்சிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன் வந்தனர். இதற்காக 3 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஜல்லிக்கற்களும் இறுகி விட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பேரையூர் விளக்கு சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பேரையூரில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பேரையூர் விளக்கு சாலையில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலை செல்கிறது.

    இந்த சாலை வழியாக புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. இதனால் பக்தர்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சிலிருந்து இறங்கி சாலையை கடந்து கோவில் செல்லவும், ஊருக்கு செல்லவும் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் பேரையூர் விளக்கு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், சிலர் இறந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    ×