search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்தட்டப்பள்ளம் பகுதியில் வேகத்தடை பணிகள் முடிவு
    X

    மேல்தட்டப்பள்ளம் பகுதியில் வேகத்தடை பணிகள் முடிவு

    • வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
    • வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×