search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வெவ்வேறு விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் பலி
    X

    கோவையில் வெவ்வேறு விபத்தில் முதியவர் உள்பட 2 பேர் பலி

    • ராமசுப்புவின் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி - விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராமசுப்பு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கா மல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துடியலூர் அருகே உள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன் (35). வெல்டர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை- தடாகம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கேசவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×