என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் பஸ் நிலையத்தில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க கோரிக்கை
- பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கால் ஆன வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது.
- பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்கால் ஆன வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால், அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் தனியார் வாகனங்களும் அத்துமீறி பஸ் நிலையத்திற்குள் அதிவேகத்தில் செல்கின்றன. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே பஸ் நிலையத்தில் பழுதடைந்த வேகத்தடையை சீரமைத்து மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்