search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Biting dogs"

    • மதுரையில் துரத்திச்சென்று கடிக்கும் வெறி நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் அதிகாரிகள்.

    மதுரை

    மனிதர்களின் உற்ற நண்பனாக வீட்டு விலங்கான நாய் உள்ளது. வீட்டு காவலாளி யாகவும் நன்றியுள்ள பிராணி யாகவும் உள்ள தெரு நாய்கள் தொல்லையால் தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுதந்திரமாக வெளியே சென்று வர முடிவதில்லை.

    மதுரை மாநகராட்சியை பொறுத்த வரை முன்பு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது நாய்களின் எண்ணிக்கை தெருவுக்கு தெரு குறைந்தது 5 முதல் 10 வரை சுற்றி திரிகிறது. எப்போதும் ஆக்ரோசத்துடன் காணப்படும் தெரு நாய்கள் நடந்து செல்வோரையும், மோட்டார் சைக்கிளில் செல்வோரையும் துரத்து துரத்தி கடிக்கின்றன.

    மேலும் தெருக்கள், சாலைகளில் விளையாடும் குழந்தைகள், சிறுவர்கள் நாள்தோறும் தெருநாய்களால் கடிப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கும்பலாக சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மதுரை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை வாகனம் வாங்கப் பட்டு வார்டுகள் தோறும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    அந்தத் திட்டம் தற்போது முழுவதும் முடங்கி உள்ளது. மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இதனால் மதுரையில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.மீனாட்சி அம்மன் கோவில், மாசி வீதிகள், ஜெய்ஹிந்த்புரம், பெரியார் பஸ் நிலையம், சோலை அழகுபுரம், வில்லாபுரம், அவனியாபுரம், வண்டியூர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, பழங்காநத்தம், காளவாசல் என எந்த பகுதி என்று குறிப்பிட முடியாமல் அனைத்து பகுதிகளிலும் நீக்க மற நாய்கள் நிறைந்துள்ளன. மனிதர்கள் நடமாட்டம் இருக்கிறதோ? இல்லையோ? நாய்களின் நடமாட்டம் 24 மணி நேரமும் காணப்படுகிறது.

    மதுரையில் தனியாக நடந்து செல்பவர்களை நாய்கள் குரைத்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் பீதி அடையும் சிறுவர்கள், பெரியவர்கள் நாய்களிடம் சிக்காமல் இருக்க ஓடுகின்றனர். இந்த செயலால் மேலும் ஆக்ரோஷம் அடையும் நாய் அவர்களை விரட்டி சென்று கடிக்கிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்த வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முகம், கை, கால் களில் கீறி ரத்த காயங்களுடன் சிகிச்சை பெறுவோர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

    இதிலும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோய் தாக்கப்படுபவர்களின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் தனி செல்லில் அடைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேபிஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிர் பிழைப் பது என்பது அரிது. நாய்களின் மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் தாக்கி மனித உயிரை காவு வாங்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு கொடூரமான தாக இருக்கும்.எனவே நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது. இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும், 2022-ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதன் பாதிப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

    இவ்வளவு பாதிப்புகளை கொண்ட வெறி நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சிகள் மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்துக் குரியது.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் விலங்குகள் நல அமைப்பு, விதிமுறைகள் என சாக்குப் போக்குகளை கூறி தட்டிக் கழிக்கின்றனர்.

    எனவே இனியும் தாம திக்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சு றுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • பெரியார் நகர் பெருமுலை ரோட்டில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பெருமுலை ரோட்டில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் நகரை சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள் என பலரை வெறி நாய் கடித்து திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்  எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும். அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரும் நடமாட முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×