search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர்"

    • மாமியார் உள்பட 2 பேர் மீது வழக்கு
    • பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகு விளையைச் சேர்ந்தவர் அபிராமி (வயது 22).

    இவருக்கும் பூதப்பாண்டி ஞாலம்காலனியை சேர்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நடந்தது.அபிராமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அபிராமி தனது அறையில் மின்விசிறி யில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். இது குறித்து அபிரா மியின் தந்தை வினு பூதப் பாண்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் தனது மகள் சாவிற்கு அவரது கணவர் மற்றும் தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் அபிராமி பேசிய ஆடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தொடர்ந்து மனோஜ் அவரது தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மனோஜை போலீ சார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.

    பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். நாகேஸ்வரி, கிருஷ்ணம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்ய பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
    • மகேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் போலீசார், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 29). இவரது தங்கை திருமலை செல்வி(27).

    பெயர் சூட்டு விழா

    இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாரிதுரை என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன பிறகு மாரிதுரை பெயர் சூட்டு விழா வைத்துள்ளார். ஆனால் அதற்கு மகேஷ்வரனை அழைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மகேஷ்வரன் தனது மைத்துனர் வீட்டுக்கு சென்று தன்னை அழைக்காதது குறித்து கேட்டுள்ளார்.

    ரூ.5 லட்சம்

    அப்போது மாரிதுரை, அவரது தாய் மற்றும் அத்தை ஆகிய 3 பேரும் சேர்ந்த ரூ.5 லட்சம் வரதட்சணையாக தந்தால் மட்டுமே விழாவுக்கு அழைப்போம் என்று கூறி உள்ளனர்.

    இதனால் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் மாரிதுரை தனது மனைவி திருமலை செல்வியை அடித்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை முயற்சி

    இதனால் மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக மகேஷ்வரன் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியபிரபு. இவரது மனைவி கலைசெல்வி(வயது 31). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கலைச்செல்வி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரது நகைகளை ஆரோக்கியபிரபு மற்றும் அவரது பெற்றோர் அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    விசாரணை

    பிரசவம் முடிந்து கலைச்செல்வி தனது வீட்டுக்கு சென்றபோது நகைகள் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர் முறையாக பதிலளிக்காமல் அவரை அடித்து பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியபிரபு மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
    • 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக புகார்.

    திருப்பூர் :

    திருப்பூர் எம் .எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி- . இவருக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சுமதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவர் சுமதி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றார்.

    தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட , அந்த பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் கணவர் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி 20க்கும் மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். 

    • படுகாயமடைந்த பேபி ஜாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதி
    • மணவாளக்குறிச்சி போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 41). கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேபி ஜாய் (25). ஆனந்த் கடந்த 3-ந்தேதி குடும்ப தகராறில் மது அருந்திவிட்டு கையால் மனைவி பேபி ஜாயை கன்னத்தில் அறைந்தாராம். பின்னர் இரும்பி கம்பியை காட்டி மிரட்டல் விடுத்தாராம்.

    இதில் படுகாயமடைந்த பேபி ஜாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயமானார்.
    • இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கவுசல்யா (வயது 27). இவர்களுக்கு அவந்திகா (7) என்ற மகளும், அனீஷ் (4) என்ற மகனும் உள்ளனர். கவுசல்யா வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்க நாதன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கவுசல்யா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிய வந்ததும் கவுசல்யாவை அவரது கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுசல்யா மகளை பள்ளியில் விட்டு விட்டு மகன் அனீசை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை பற்றி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
    • மேலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்தம் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), ஒரு மகள் உள்ளார்.

    சூரியகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். உடனே இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்களுடன் வந்த ராஜேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு சூரியகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சூரியகுமார் உடலை பிரேதபரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    தாலி கட்டிய மனைவியை ஆபாசமாக படம் எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு கணவர் மிரட்டிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலத்தை சேர்ந்தவர் அரசு பெண் டாக்டர். 42 வயதான இவர் தற்போது கோவையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த சென்னையில் பணிபுரியும் அரசு டாக்டர் ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பெண் டாக்டர் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு விவகாரத்து கேட்டு என்னிடம் வற்புறுத்தி வந்தார்.

    தற்போது சேலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து அந்த செல்போனில் புதிய ஆப்பை இன்ஸ்டால் செய்து எனக்கு தெரியாமல் என்னை ஆபாச படம் எடுத்துள்ளார்.

    மேலும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், சேலத்தில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த படங்களை பேஸ்புக், வாட்-அப்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நான் விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்பதுடன் அதனை ஏற்காட்டிற்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.

    மேலும் நாங்கள் சொன்னப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனது கணவரும், அந்த வக்கீலும் மிரட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் மீது விசாரித்து நடவடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார்.

    இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பெண் டாக்டரின் கணவரான அரசு டாக்டர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வக்கீல் மீதும் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.

    அரசு பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரான அரசு டாக்டர் மற்றும் வக்கீல் மீதும் 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×