search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை"

    • கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
    • விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்

    உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.

    அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.

    இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஓவியராக உள்ளார். இவர் வீடுகளில் அலங்கார ஓவியம் வரையும் வேலை செய்து வருகிறார். இவரும் அணைக்கரையை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஓவியர் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கும் ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த இளம்பெண் கல்லூரியில் இருந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள சாலையில் ஓவியர் காருடன் நின்று கொண்டிருந்தார். அவர் மனைவி வந்ததும் அவரை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார்.

    தகராறு முற்றிய நிலையில் மனைவியின் ஸ்கூட்டர் சாவியை பிடுங்கி கொண்டு காரில் ஏறினார். அவரை இளம்பெண் தடுக்க முயன்றபோது காரில் கிடந்த கம்பியால் அவரை தாக்கிவிட்டு காரில் புறப்பட தயாரானார். உடனே அந்த இளம்பெண் கார் ஜன்னல் வழியாக தனது ஸ்கூட்டர் சாவியை வாங்க முயன்றார்.

    அப்போது ஓவியர் காரை இயக்கி மனைவியை தரதரவென இழுத்துச்சென்றார். இதனால் அந்த பெண் அலறினார். இதை பார்த்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்தி சென்றனர். உடனே ஓவியர் மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார். இதில் அந்த இளம்பெண் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஓவியரை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓவியர் மனைவியை காரில் தரதரவென இழுத்து சென்ற பதைபதைக்க வைக்கும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23).. இவருக்கும் கீழ்மொணவுரை சேர்ந்த அருண்குமார் (33) என்றவர்க்கும் திருமணம் நடந்தது திருமணத்தின்போது 12 சவரன் நகையை ஐஸ்வர்யாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்த நிலையில் அருண்குமார் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஐஸ்வர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதை ஐஸ்வர்யா தட்டி கேட்டுள்ளார். அப்போழ அருண்குமார் மற்றும் அவரது தந்தை அசோகன் (60), தாய் வசந்தா (50), அகிலா (32), ஆஷா (22) ஆகியோர் ஐஸ்வர்யாவை ஆபாசமாக திட்டி உள்ளனர்.

    இது குறித்து ஐஸ்வர்யா வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துெ கொண்டார்.
    • அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ராஜ பாண்டலம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 21) என்பவருக்கும், மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு துரைமுருகன் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. அஜித்குமார் பால் ஏற்றி செல்லும் வாகனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமி திடீரென தூக்க போட்டுக் கொண்டார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபலட்சுமி இறந்தார்.

    இது குறித்து சுபலட்சுமி தாய் சித்ரா, தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சித்ராவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா என கள்ளக் குறிச்சி கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

    • சவுந்தர்யா சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 26 ) சிவில் என்ஜியர் இவரது மனைவி சவுந்தர்யா (24). இவர் சென்ைனயில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டு ஆகிறது. திருமணமான ஒரு சில நாட்களிலிருந்து கணவர் சூர்யா மற்றும் சூர்யாவின் தந்தை ஏழுமலை தாய் கலைமணி, சகோதரர்கள் லோகேஷ் ,சர்வேஷ் ஆகியோர்கள் வரதட்சணையாக ரூ.10 லட்சம் பணம் கேட்டு சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி காரை ஏற்றிக் கொன்று விடுவதாக மிரட்டி வாழவிடாமல் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக சவுந்தர்யா இன்று பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி செய்து சவுந்தர்யாவின் கணவர், மாமனார், மாமியார், கொழுந்தனார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு அரசு பெண் ஊழியர் துன்புறுத்தினர்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மார்டன் தெருவை சேர்ந்தவர் விக்டோரியா, அரசு பள்ளி ஊழியர். இவருக்கும், கல்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஜான்பிரிட்டோ விருதுநகர் மாஜிதிரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் எனது கணவர் தொழில் செய்வதற்காக என்னிடம் பண உதவி கேட்டார். இதற்காக 3 தவணைகளில் வங்கியில் ரூ.23 லட்சம் வரை கடன் பெற்று கொடுத்தேன். ஆனால் அதனை செலவு செய்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது. இதுகுறித்து கேட்டால் பணம் கொடுத்தால் என்னுடன் சேர்ந்து வாழ்வேன் என மிரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் கென்னடி-ஆகத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    தற்போது கூடுதலாக 9 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராணுவ வீரர்

    சாத்தூர் படந்தாலை சேர்ந்தவர் விமலாதேவி(27). இவருக்கும், வெம்பக் கோட்டை சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் கண்ணன் என்பவருக்கும் 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் விமலாதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி மகள் நித்யா ( 25 )என்பவருக்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தராமமூர்த்திமகன் ராமச்சந்திரனுக்கும் ஜனவரி மாதம் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்தும் மேலும் 10 லட்சம் பணம் கேட்டு கணவன் ராமச்சந்திரன், மாமியார்சாந்தி, மாமனார் ராமமூர்த்தி , நாத்தனார்ரம்யாஆகியோர்கள் அடித்து மிரட்டி கொடுமைப்படுத்துவதாக நித்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
    • அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 32). இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சரவணன், மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து பாலசரஸ்வதி தனது தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் சரவணன் சமரசம் பேசி மனைவியை அழைத்து சென்றார். இதற்கிடையில் மீண்டும், சரவணன் மனைவி யிடம் கூடுதலாக வரதட்சணை கேட்க பாலசரஸ்வதி தனது பெற்றோர் வீட்டில் இருந்து 14 பவுன் நகையை வாங்கி கொடுத்துள்ளார்.

    ஆனால் சரவணன் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, மாமனார் குமார் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் பாலசரஸ்வதிக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அருப்புக்கோட்டை அனை த்து மகளிர் போலீசார் சரவணன், அவரது பெற்றோர் குமார்- ராேஜஸ்வரி, உறவினர் பொன்மாரி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார்.
    • ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபிணி ( வயது 24). பல்லடம் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) . இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் ரூபினியின் சகோதரி கணவர், கடந்த பிப்ரவரி மாதம் ராஜா மற்றும் ரூபிணி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    சென்னை பேரூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபிணியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சணை கேட்டு ரூபிணியை ராஜா அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் ரூபிணியின் கையை உடைத்துள்ளார்.

    நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூருக்கு ரூபிணியை ராஜா அழைத்து வந்தார். அங்கு வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். ராஜாவின் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு அவதூறாக பேசி சரமாரி தாக்கியுள்ளனர்.

    இதனால் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவசர தொலைபேசி எண் மூலம் போலீசாரை வரவழைத்தார். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த ரூபிணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் இது குறித்து ரூபிணி பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கேட்டு காதல் மனைவியை கணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வரதட்சணை என்ற சமூக தீமையை முடிவுக்குக் கொண்டுவர உறுதி பூண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.
    • தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று ஆசிரியை கூறுகிறார்.

    திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. ஆனால், அதை எதிர்த்து ஒரு சிலரே தைரியமாக பொதுவெளியில் வந்து போராடுகின்றனர்.

    அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் உள்ள 27 வயதான ஆசிரியை ஒருவர், இந்த "சமூக தீமைக்கு" முற்றுப்புள்ளி வைக்க, போபால் காவல்துறை தலைமை அதிகாரி, ஹரிநாராயணன் சாரி மிஷ்ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    10க்கும் மேற்பட்ட ஆண்களால் வரதட்சணை காரணமாக தாம் நிராகரிக்கப்பட்டு தனக்கு திருமணம் நின்று போனதாக தெரிவிக்கும் அவர், தனது சொந்த அனுபவத்தை வைத்து இந்த மனுவை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

    அவரின் தந்தை, கடந்த பிப்ரவரியில் பெண் பார்ப்பதற்காக ஒரு இளைஞனையும் அவனது குடும்பத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞனின் தந்தையிடம் வரதட்சணை குறித்து கேட்டிருக்கிறார். அவர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும், உங்கள் மகள் அழகாக இருந்திருந்தால், நாங்கள் உங்களுக்கு தள்ளுபடி தருவோம் என்று அந்த இளைஞனின் தந்தை கேலியாக பேசியுள்ளார்.

    கடந்த வாரம், அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிஷ்ராவை சந்தித்தார். அவரிடம் அவர் அளித்த தனது மனுவில், திருமண இடங்களில் சோதனை நடத்துவதும், வரதட்சணை கொடுப்பவர்கள் அல்லது பெறுபவர்களைக் கைது செய்வதும்தான் இந்த கொடுமையை தடுக்க ஒரே தீர்வு என்றும், தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இந்த கொடூரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்றும் கூறுகிறார்.

    "வரதட்சணை ஒரு சமூகத் தீமை, அதை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் (காவல்துறை) உறுதி பூண்டுள்ளோம். எந்தப் பெண் இது குறித்து உதவி கேட்டு காவல்துறையை அணுகினாலும் அவர்களுக்கு உரிய உதவியை வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என மிஷ்ரா கூறியிருக்கிறார்.

    இது குறித்து கருத்து தெரிவித்த மிஷ்ரா, "காவல்துறைக்கு வரம்புகள் உள்ளன. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. மேலும், இந்த விஷயத்தில் நாம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்" என கூறினார்.

    பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவா இது குறித்து கூறுகையில், "காவல்துறையினால் கண்டிப்பாக உதவ முடியும். ஆனால் வரதட்சணையை சமாளிப்பது ஒரு சிக்கலான பிரச்சனை. இந்தியாவில் வரதட்சணை தடைச்சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என கூறினார்.

    இந்த ஆசிரியையை போன்று மேலும் பலர் துணிச்சலாக போராட துவங்கினால், இந்த சமூக அவலம் கட்டுக்குள் வரலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் துன்புறுத்தப்பட்டது.
    • அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது25). இவர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் சீனுவுக்கும், எனக்கும் கடந்த 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 23 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொ ருட்கள் ெகாடுக்கப்பட்ன.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக சீனுவின் பெற்றோர் செல்லதுரை-மகாராணி ஆகியோர் துன்புறுத்துகின்றனர். இதனை கணவர் கண்டு கொள்வதில்லை. மேலும் மாமனார் தவறான உள்நோக்கத்துடன் நடக்க முயல்கின்றார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் சீனு, அவரது பெற்றோர் ஆகிய 3 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வரதட்சணை வழக்கில் மனைவிக்கு பராமரிப்பிற்காக 2.25 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
    • பணம் இல்லாததால் கணவன் சிறையில் அடைப்பு. உறவினர்கள் முதல் தவணை செலுத்த முன்வந்தனர்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தஷ்ரத் குமாவாத் என்பவர் வழக்கில்தான் இந்த வினோதம் நடைபெற்றுள்ளது. இவருக்கு சுமார் 10 வருடத்திற்கு முன் சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த சில வருடங்களில் தஷ்ரத் குமாவாத் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜெய்பூராஸ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மனைவியின் பராமரிப்பிற்காக 2.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த தொகையை தஷ்ரத்தால் செலுத்த முடியவில்லை. இதனால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    ஜெயிலில அடைக்கப்பட்டுள்ள தஷ்ரத்தின் உறவினர்கள் அவரை வெளியில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். இதனால் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை முதல் தவணையாக நீதிமன்றத்தில் செலுத்த தொடங்கினார்.

    வரதட்சணை புகார் அளித்த தஷ்ரத்தின் மனைவி பணத்தை எண்ணிஎண்ணி சோர்வாகிட வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ.... முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை ஏழு பெட்டிகள் வைத்து கொண்டு வந்தனர்.

    இதனால் நீதிபதி வியப்படைந்தார். இதெல்லாம் என்னது என கேட்க...

    ஐயா... நாங்கள் தஷ்ரத்தின் உறவினர்கள். தஷ்ரத் கட்ட வேண்டிய பணத்தில் முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக கொண்டு வந்துள்ளோம். ஏழு பெட்டிகளில் 280 கிலோ எடைகொண்டது என்றனர்.

    என்ன இருந்தாலும் இதை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் பணத்தை எண்ணி பாதுகாக்கும்படி உத்தரவிட்டார்.

    நாணயங்களாக வழங்குவது வேண்டுமென்றே துன்புறுத்தல் செயலாகும். இது மனிதாபிமானமற்ற செயல் என்று சீமாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். ஆனால் தஷ்ரத் சார்பில் ஆஜரான வக்கீல், நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்க இந்திய பணம ஆகும் என்றார்.

    55 ஆயிரம் ரூபாயும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக இருந்தன.

    ×