என் மலர்tooltip icon

    இந்தியா

    வரதட்சணை கொடுமை: மனைவியை அடித்து உதைத்து தீவைத்து கொளுத்திய கணவன்- நொய்டாவில் கொடூரம்
    X

    வரதட்சணை கொடுமை: மனைவியை அடித்து உதைத்து தீவைத்து கொளுத்திய கணவன்- நொய்டாவில் கொடூரம்

    • 35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்.
    • மகன் கண்முன்னே மனைவியை தீ வைத்து கொளுத்திய கொடூரம்.

    கிரேட்டர் நொய்டாவில் கட்டிய மனைவியை 36 லட்சம் ரூபாய் வரதட்சணைக்கான தாய் உடன் சேர்ந்து கொடூர கணவன், அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள சர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும் நிக்கி என்பவருக்கம் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இதே குடும்பத்தில்தான் நிக்கியின் சகோதரியும் மருகளாக உள்ளார். விபினின் சசோதரனை திருமணம் செய்துள்ளார்.

    நிக்கி குடும்பத்தினர் வரதட்சணை பாக்கியாக 35 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 21ஆம் தேதி தகராறு முற்றியுள்ளது. நிக்கியின் கணவன் விபின் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் சேர்ந்து நிக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து கடுமையாக தாக்கும் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. நிக்கி மீது ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல்கருகி ஆபத்தான நிலையில் நிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கி தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இதேவீட்டில் மருமகளாக உள்ள நிக்கியின் சகோதரி, காஞ்சன் இது தொடர்பாக கூறுகையில் "மாமியார் குடும்பத்தினர் எனது சகோதரியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனது சகோதரியை வீட்டில் இருந்து துரத்திவிட்டு, விபினுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க விரும்பினர். சம்பவத்தன்று நான் தட்டிக்கெட்டபோது, என்னையும் கடுமையாக தாக்கினர். அன்றைய நாள் முழுவதும் நான் மயக்கமான நிலையிலேயே இருந்தேன். நான், நிக்கியின் மகன் ஆகியோர் அருகில் இருந்தபோதும் என்னுடைய சகோதரியை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என பரிதாபமாக கூறினார்.

    நிக்கியின் மகன் "எனது தாயார் மீது எதையோ ஊற்றினர். அதன்பின் கடுமையாக தாக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர்" என கண்ணீர் மல்க அந்த சிறுவன் தெரிவித்தார்.

    35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக தாய் உடன் சேர்ந்து மனைவியை கணவன் தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×