search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பெண்"

    • கொளத்தூர் அருகே விநாயக புரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்வாணன். இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஐ.டி. துறையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
    • இவரது மனைவி ஜெகப்பிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே விநாயக புரம் பகுதியை சேர்ந்த வர் தமிழ்வாணன். இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு ஐ.டி. துறையில் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெகப்பிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார்.

    விஷம் குடித்தார்

    இந்த தம்பதிக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    இதை யாரிடமும் செல்லாமல் தனக்கு வயிற்று வலி, வாந்தி வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை கொளத்தூர், அந்தியூர், ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    சிகிச்சை பலனின்றி பலி

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கோவையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிகிச்சை அளித்த மருத்துவரிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக ஜெகப்பிரியா தெரிவித்தார்.

    இதை கேட்டு மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேி ஜெகப்பிரியா உயிரிழந்தார்.

    ஆர்.டி.ஓ. விசாரணை

    இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெகப்பிரியா எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணமான 30 நாட்களில் புதுப்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுப்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம். இவரது மனைவி மஞ்சு (வயது20). இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணமானது.

    கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அருகில் உள்ள மாமனார் வீட்டிற்கு மஞ்சு செல்வார். சம்பவத்தன்று மஞ்சு நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

    இதுகுறித்து மஞ்சு தனது மாமனாரிடம் கூறியுள்ளார். மா மனார் சுந்தரலிங்கத்திடம் தட்டி கேட்டார். அப்போது சுந்தரலிங்கம் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மாமனார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே விவகாரத்தில் கூடலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் முத்து, முருகன், முத்து முனி யாண்டி ஆகியோர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுந்தரலிங்கம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடிதம் எழுதி வைத்து புதுப்பெண் திடீர் மாயமானார்.
    • ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்ன கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது27). இவருக்கும், முகல்யா (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துப்பாண்டி ஊர் திருவிழாவுக்கு மனைவியை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். திருவிழா முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது முகல்யா மாயமானார்.

    அப்போது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், "என்னை தேட வேண்டாம், மன்னித்து விடுங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டி, காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல், திருவள்ளு வர் காலனியை சேர்ந்தவர் இன்னாசிமுத்து. இவரது மகள் லூர்து மேரி(வயது19). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமா னார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சுழி குரவை குளத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

    இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்

    • மேச்சேரி அருகே திருமணமான ஒரு ஆண்டில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி காளிகவுண்டனூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 28). இவருக்கும், தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகள் சந்தியா (28) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காளிகவுண்ட னூரில் வசித்து வந்தனர்.

    கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிமேகலை கடும் வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
    • 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 32) என்பவருக்கும் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த மணிமேகலை (22) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் அருகே உள்ள வட்டமலை அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மணிமேகலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், வலி தாங்க முடியாத காரணத்தால் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை யாரிடமும் சொல்லாமல் 3 நாட்கள் கழித்து தனது கணவர் சுரேஷிடம் கூறியுள்ளார். உடனே கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவர் பிரிந்து சென்றதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி கணவருடன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்தார்.

    மதுரை

    மதுரை திருப்பாலை பசும்பொன் நகரை சேர்ந்த வர் பெருமாள். இவரது மகள் அருணாதேவி (வயது 23). இவருக்கும், அருண் குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடை பெற்றது. இருவரும் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அருணா தேவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து கணவர் அருண்குமார், அருணாதேவிக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறி தகராறு செய்து மனைவி யுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறி விட்டார். அதன் பின்னர் அருணாதேவி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    திருமணமான ஒரு மாதத்தில் கணவர் வலிப்பு நோயை காரணம் காட்டி பிரிந்து சென்றதால் அருணாதேவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதுதொடர்பாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அருணாதேவி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே மனம் உடைந்த நிலையில் இருந்த அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று மதியம் வெளியில் சென்ற பெருமாள் வீட்டிற்கு வந்தார். அப்போது மகள் தூக்கில் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின் விசிறியில் தொங்கிய அருணாதேவி உடலை மீட்டு உறவினர்கள் பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பாலை போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருணா தேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகி கணவரு டன் ஒரு மாதம் மட்டுமே வாழ்ந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல்போனவரை தேடி வருகிறார்கள்.
    • இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே வருக்கன் பூவன்விளை, மாத்தூர், அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் (வயது 34), வீரப்புலி பகுதியை சேர்ந்தவர் சோபியா (25). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் கணவர் ஜாஸ்பர் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டில் வந்து பார்க்கும்போது மனைவி சோபியாவை காணவில்லை. உடனே அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இதுபற்றி அக்கம்பக்கம் உள்ள வர்களிடம் விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தபோது, காணவில்லை. இதுகுறித்து ஜாஸ்பர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து திருமணமாகி 7 நாளில் மாயமான புதுப்பெண் சோபியாவை தேடி வருகிறார்கள்.

    • திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.
    • இதுகுறித்து தேவகோட்கோடை ட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா (வயது 21) என்பவருக்கும் கடந்த இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் சினேகாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சினேகா இறப்பு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி கொடுத்தபுகாரின் பெயரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்த தன்மையை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் சேதுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாணார்பட்டி பகுதியில் புதுப்பெண் பணத்துடன் மாயமானார்.
    • வீட்டில் இருந்த 1 லட்சம் 40 பணமும் காணவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவருடைய மனைவி இறந்து விட்டார்.

    இந்த நிலையில் 2-வது திருமணம் செய்வதற்காக செந்தில் ஜோடி என்ற ஆப்பில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்தனர். கடந்த ஜூன் 24-ம் தேதி கவிதா சேலம் வந்தார்.

    பின்னர் செந்தில் - கவிதா இருவரும் ஒரு கோவிலில் வைத்து திருமண செய்து கொண்டனர். அப்போது அவருக்கு செந்தில் கம்மல், கொலுசு வாங்கி கொடுத்தார். அன்று இரவு அவருடன் தங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது கவிதாவை காணவில்லை. வீட்டில் இருந்த 1 லட்சம் 40 பணமும் காணவில்லை. தொடர்ந்து செந்தில் அவரை தேடி வந்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து செந்தில் ஜலகண்டாபுரம் போலீஸ் புகார்செய்தார்.போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.

    • மாமியார் உள்பட 2 பேர் மீது வழக்கு
    • பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகு விளையைச் சேர்ந்தவர் அபிராமி (வயது 22).

    இவருக்கும் பூதப்பாண்டி ஞாலம்காலனியை சேர்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நடந்தது.அபிராமி இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அபிராமி தனது அறையில் மின்விசிறி யில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். இது குறித்து அபிரா மியின் தந்தை வினு பூதப் பாண்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் தனது மகள் சாவிற்கு அவரது கணவர் மற்றும் தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் அபிராமி பேசிய ஆடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் தொடர்ந்து மனோஜ் அவரது தாயார் நாகேஸ்வரி பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மனோஜை போலீ சார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மனோஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.

    பின்னர் அவரை நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். நாகேஸ்வரி, கிருஷ்ணம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்ய பூதப்பாண்டி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.
    • கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பன்னீர்செல்வம். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகள் சந்தியாவிற்கும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்துள்ளார், சந்தியா டிப்ளமோ அக்ரி படித்து முடித்துள்ளார்.

    நேற்று காலை தனது கணவனான பன்னீர்செல்வம் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்தியா குளித்துவிட்டு வருவதாக அவரது அறைக்குள் சென்றார். கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் சந்தியா வெளியே வராததை கண்ட அவரது கணவர் கதவைத்தட்டி உள்ளார். ஆனால் திறக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில்,விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    சந்தியாவின் கணவர் பன்னீர் செல்வத்தை காவல்துறையினர் ,கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன ஒரே வாரத்தில் பெண் மரணம் அடைந்ததால் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

    ×