search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth"

    • வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்தது.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை ரவுண்டா னாவில் தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. கோட்டக்குப்பம் நகர இளைஞரணி நிர்வாகி பிரேம் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி கலந்து கொண்டு வேளாங்கண்ணிக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு சைவ உணவு, 5 விதமான பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் நகர் மன்ற உறுப்பினர்கள் வீரப்பன், சண்முகம், ஸ்டாலின்சுகுமார், சுகுமார் ஜாகிர், நாசர், பாரூக், அன்சாரி மற்றும் தி.மு.க. நகர இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தந்தையுடன் தகராறு காரணமாக பூசாரியை, வாலிபர் அரிவாளால் வெட்டினார்
    • அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வட வீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 50), கோவில் பூசாரி. இவரது சகோதரர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன்.

    இதில் பாலையா வடவீக்கத்தில் வசித்து வருகிறார். பாலகிருஷ்ணன் ஜெயங்கொண்டத்திலும், ராதாகிருஷ்ணன் காட்மன்னார்குடியிலும் வசிக்கின்றனர்.

    பாலையாவிற்கும் இவரது அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் வீட்டுமனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் கடந்த வாரம் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கு பூசாரியாக இருந்த பாலையாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில், ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணனின் மகன் தாமரைச்செல்வன் (24) தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 20-ந் தேதி பாலையாவை கத்தி மற்றும் அரிவாளால் பல்வேறு இடங்களில் வெட்டியதாக தெரிகிறது.

    இதில், படுகாயம் அடைந்த பாலையாவை அவரது உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் வழக்குப்பதிவு செய்து சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய தாமரைச்செல்வன் மற்றும் வசீகரன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மாதம்

    ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (BE போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.

    தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்க னவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளை ஞர்கள் பூர்த்தி செய்து வேலை நாட்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

    • சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இசக்கிமுத்து என்ற ராஜா என்பவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற ராஜா (29) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் ராஜாவை கைது செய்தனர். 

    • ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.
    • 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், தெற்கு மாநகர அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர். கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகரத்துக்கு நிர்வாகிகளை நியமிக்க ஒப்புதல் வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நியமனம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வது,

    வருகிற 29-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் சீருடையுடன் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராஜசேகரன், பாலசுப்பிரமணியம், சசி என்கிற ஞானசிகாமணி, சசிக்குமார், லிங்கேஸ்வரன், ரவிச்சந்திரன், முகமது ஜூனைத், வடக்கு மாநகர துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பாண்டித்துரை, வஞ்சிமுத்து, பார்த்திபன், தியாகு, தெற்கு மாநகர துணை அமைப்பாளர்கள் விக்னேஷ், அரவிந்த், திருநாவுக்கரசு, சையது அபுதாஹிர், அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.
    • பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவாக இருப்பவர் கல்யாணசுந்தரம். நேற்று காலை இவர் வழக்கம்போல் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எம்.எல்.ஏவுக்கு போன் செய்த மர்மநபர், முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் தானே, எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அதற்கு கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. அந்த நபரிடம் யார் வேண்டும் எனக் கேட்ட போது, உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. என்னை ஏதும் உங்களால் செய்ய முடியாது, பாக்குறீங்களா? எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. என்னுடைய தொலைபேசி எண் உங்களுக்கு எப்படி கிடைத்தது எனக்கேட்ட போது, காரைக்காலில் ஒருவரிடமிருந்து வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. இப்போது உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் எனக்கூறி போனை துண்டித்துவிட்டார்.

    ஏதோ குடிகாரன் பேசுவதாக நினைத்துக்கொண்ட கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, இதனை பெரிதுபடுத்தவில்லை.

    இதற்கிடையே திருபுவனை தொகுதி பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளனுக்கு நேற்று மாலை சொல்போனில் பேசிய மர்ம நபர், என்னிடம் மோத வேண்டாம், நீங்கள் முன்னாள் அமைச்சரா இருந்தா என்ன? என்கிட்ட வச்சுக்காதீங்க எனக்கூறி அங்காளன் எம்.எல்.ஏ.வை திட்டினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அங்காளன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் தொலைபேசியில் மிரட்டியது ஒரே நபர் என்றும், ஒரே எண்ணை பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும் அந்த செல்போன் நாகை மாவட்டத்தில் இருந்து பேசியது பதிவாகி இருந்தது.

    இதனால் உஷாரான போலீசார், காரைக்கால் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த எண்னை வைத்து விசாரணை நடத்தியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வர் நாகப்பட்டினத்தை அடுத்த செம்பியன்மகாதேவி கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது40) என்பது தெரியவந்தது.

    அவரை கைது செய்ய காரைக்கால் போலீசார் நாகப்பட்டினம் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்து நரேந்திரனை பிடித்து காரைக்கால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நரேந்திரன் எதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுத்தார்? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஷேக் தவுலத் பீக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று முகமது இலியாஸ் என்ற மகன் உள்ளார்.
    • கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த குல்சர்கானுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன.

    திருப்பதி:

    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சர்கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது செல்போன் ராங் கால் மூலம் ஆந்திர மாநிலம், நந்தியாலா அடுத்த கடிவேமுலாவை சேர்ந்த ஷேக் தவுலத் பீ என்ற இளம் பெண்ணை தொடர்பு கொண்டார். இதையடுத்து இருவரும் அடிக்கடி நட்பாக பேசி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. ஷேக் தவுலத் பீக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்று முகமது இலியாஸ் என்ற மகன் உள்ளார்.

    காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து குல்சர் கான் இந்த 2010-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் இருந்து கள்ளப்படகு மூலம் சட்ட விரோதமாக மும்பை வழியாக இந்தியாவிற்கு வந்தார். பின்னர் குல்சர் கான் தவுலத் பீயை திருமணம் செய்து கொண்டார்.

    அந்த 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்தது.இதன் மூலம் இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த குல்சர்கானுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. இதன் மூலம் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளை பாகிஸ்தான் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து இருந்தார். பின்னர் சவுதி அரேபியா வழியாக பாகிஸ்தான் செல்ல ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் குல்சர்கானிடம் நடத்திய விசாரணையில் அவர் சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து குல்சருக்கானை கைது செய்து ஐதராபாத் சரளப்பள்ளியில் உள்ள ஜெயிலில் அடைத்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதங்களில் ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    கொரோனா தொற்று பரவல் குறைந்தது எடுத்து மீண்டும் குல்சர் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரை விடுவிக்க கோரி தவுலத் பீ நீதிமன்றத்தை நாடினார்.

    இதையடுத்து கடந்த வியாழக்கிழமை குல்சர் கானை நீதிமன்றம் விடுதலை செய்தது.

    மேலும் விடுதலை செய்யப்பட்ட குல்சர் கான் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது எனவும் வரும் 27-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் போது வெளிநாடு அனுப்புவதா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை.
    • வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானம் இயக்கப்படுவதால் கோவை மாவட்டத்தை சுற்றி இருக்க கூடிய அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவை விமான நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றன.

    நேற்று மதியம் கோவையில் இருந்து டெல்லிக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணிப்பதற்காக பயணிகளும் விமான நிலையத்திற்கு வந்தனர்.

    இந்த விமானத்தில் பயணிக்க உள்ள பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். ஒவ்வொருவராக தனித்தனியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு இருந்த 40 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவரின் கைப்பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தது.

    இதை பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கு இருந்த துப்பாக்கி குண்டு மற்றும் பெட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் துப்பாக்கி குண்டு வைத்திருந்த அந்த வாலிபரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சிங் (வயது42) என்பதும், காண்டிராக்ட் மற்றும் விவசாயம் செய்து வருவதும் தெரியவந்தது.

    மேலும் இவரது சகோதரர் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருவதாகவும், அவரை பார்க்க ராஜஸ்தானில் இருந்து கோவை வந்ததும், அவரை பார்த்து விட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப புறப்பட்டதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி குண்டு பையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்த போது, அது தனக்கு தெரியாது. எப்படி வந்தது என்றே தெரியவில்லை என போலீசாரிடம் பதில் அளித்து கொண்டிருந்தார்.

    போலீசார் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது பையில் துப்பாக்கி குண்டு வந்தது எப்படி? இவரே எடுத்து வந்து விட்டு போலீசில் சிக்கியதால் மாற்றி பதில் அளிக்கிறாரா? அல்லது வேறு யாராவது இவரது பையில் குண்டுகளை போட்டனரா? என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். இதற்காக விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான்.
    • சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பொறியியல் பிரிவு சார்பில் உலக இளைஞர் திறன் தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், சக்கரபாணி, தமிழ்ச்செல்வி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தொழில் கல்வி பயிற்றுனர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் தொழிற்கல்வி ஆசிரியர் முகமது ரபிக் கலந்து கொண்டு பேசுகையில்:-

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி உலக இளைஞர் திறன் தினத்தை அறிவித்தது. இந்த நாள் "உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வியை உறுதி செய்து அனை வருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கவும்" என்று பரிந்துரைக்கிறது.

    ஐ.நா.வை பொறுத்தவரை வேலைவாய்ப்பு, ஒழுக்கமான வேலை மற்றும் தொழில் முனைவோர் ஆகியவற்றிற்கு தேவையான திறன்களை இளைஞர்கள் மற்றும் பெரியவர்க ளிடையே வளர்க்க உதவுவதன் மூலம் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இயல்புடைய பல கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.

    பின், பள்ளி மாணவன் தவச்செல்வன் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கினான். மாணவன் லோகேஸ்வரன் பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்து பேசினார். முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இதில் ஆசிரியை அஜிதா கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
    • இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.

    சேலம்:

    சேலத்தில் லாட்டரி விற்பனை கும்பலால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.

    லாட்டரி விற்பனை

    தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. எனினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது.

    சரமாரி தாக்குதல்

    இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். மேலும் அவரது கனரக வாக னத்தின் கண்ணாடி யையும் உடைத்தனர். இந்த தாக்கு தலில் படுகாயம் அடைந்த அவர், ரத்தம் சொட்ட சொட்ட சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பெரிய சாமி அடிக்கடி போலீசில் புகார் அளித்து வந்துள்ளார். இத னால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் லாட்டரி சீட்டு விற்ப னையாளர்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்தது டன் வாகனத்தை அடித்து நொறுக்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மறியல்

    இது தொடர்பாக அன்ன தானப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். காயம் அடைந்த பெரி யசாமி சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் அங்கு அதிக அளவில் திரண்ட னர். திடீரென அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களை கலந்து செல்லுமாறு கூறினர்.

    3 பேர் சிக்கினர்

    ஆனாலும் அவர்கள் சாலை யில் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரி கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியசாமியை தாக்கிய வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் ராஜேஷ் (வயது 28). டிப்ளமோ படித்த இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் இறந்துவிட்டனர்.

    இதனால் ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக திப்பணம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது சகோதரி மாரீஸ்வரி வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார், ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.

    இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .

    இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.

    அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×