search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Democratic"

    • அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சேலம்:

    அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஐசக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஐசக் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண் கள் நிர்வாணப்ப டுத்தி கொடுமைப்ப டுத்தப்படு கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எடுக்கப்பட்டுள் ளன. பாதிரியார்கள் தாக்கப்பட் டுள்ளனர்.இதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும்.

    இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவ டிக்கை இல்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அரசில் மாற்றம் தேவை. தமிழக அரசு சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பாக உள்ளது. தமிழ கத்தில் தி.மு.க.வுக்கும், தேசிய அளவில் காங்கிரசுக்கும் எப்போ தும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மண்டல பேராயர் ஹெரால்டு டி.டேவிட், கிழக்கு மாவட்ட பேராயர் ஜோசப் மோகன்,மேற்கு மண்டல பேராயர் டேனியல், வடக்கு மண்டல பேராயர் டேவிட் குட்டி,கிழக்கு மண்டல பேராயர் பர்ண பாஸ், நாமக்கல் மாவட்ட பேராயர் சாமுவேல், முதன்மை பொது செயலா ளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் ஜான் ஐசக் ,சேலம் மாவட்ட தலை வர் ராமு செல்வராஜ்,சேலம் மாவட்ட பொருளாளர் பீட்டர், மேற்கு தொகுதி செயலாளர் மார்டின் செந்தில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
    • இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.

    சேலம்:

    சேலத்தில் லாட்டரி விற்பனை கும்பலால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.

    லாட்டரி விற்பனை

    தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. எனினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது.

    சரமாரி தாக்குதல்

    இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். மேலும் அவரது கனரக வாக னத்தின் கண்ணாடி யையும் உடைத்தனர். இந்த தாக்கு தலில் படுகாயம் அடைந்த அவர், ரத்தம் சொட்ட சொட்ட சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பெரிய சாமி அடிக்கடி போலீசில் புகார் அளித்து வந்துள்ளார். இத னால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் லாட்டரி சீட்டு விற்ப னையாளர்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்தது டன் வாகனத்தை அடித்து நொறுக்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மறியல்

    இது தொடர்பாக அன்ன தானப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். காயம் அடைந்த பெரி யசாமி சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் அங்கு அதிக அளவில் திரண்ட னர். திடீரென அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களை கலந்து செல்லுமாறு கூறினர்.

    3 பேர் சிக்கினர்

    ஆனாலும் அவர்கள் சாலை யில் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரி கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியசாமியை தாக்கிய வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சிஐடியு. மாவட்ட தலைவருமான கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழுச் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. பாலன், மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    ×