search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்
    X

    மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
    • இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.

    சேலம்:

    சேலத்தில் லாட்டரி விற்பனை கும்பலால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.

    லாட்டரி விற்பனை

    தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. எனினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது.

    சரமாரி தாக்குதல்

    இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். மேலும் அவரது கனரக வாக னத்தின் கண்ணாடி யையும் உடைத்தனர். இந்த தாக்கு தலில் படுகாயம் அடைந்த அவர், ரத்தம் சொட்ட சொட்ட சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பெரிய சாமி அடிக்கடி போலீசில் புகார் அளித்து வந்துள்ளார். இத னால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் லாட்டரி சீட்டு விற்ப னையாளர்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்தது டன் வாகனத்தை அடித்து நொறுக்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    மறியல்

    இது தொடர்பாக அன்ன தானப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். காயம் அடைந்த பெரி யசாமி சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் அங்கு அதிக அளவில் திரண்ட னர். திடீரென அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களை கலந்து செல்லுமாறு கூறினர்.

    3 பேர் சிக்கினர்

    ஆனாலும் அவர்கள் சாலை யில் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரி கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியசாமியை தாக்கிய வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×