search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    தூத்துக்குடியில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இசக்கிமுத்து என்ற ராஜா என்பவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற ராஜா (29) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

    Next Story
    ×