search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை
    X

    பாவூர்சத்திரம் அருகே பட்டதாரி வாலிபர் தற்கொலை

    • ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் ராஜேஷ் (வயது 28). டிப்ளமோ படித்த இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது பெற்றோர் இறந்துவிட்டனர்.

    இதனால் ராஜேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது அதனை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக திப்பணம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது சகோதரி மாரீஸ்வரி வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார், ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×