search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villagers"

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.
    • கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் இருந்து மீண்டு முழு உடல் நலம் பெற வேண்டி கிராம மக்கள் அனைவரும் கூடி திருஷ்டி பரிகாரம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பே, தாதம்பட்டியை சார்ந்தவர் கவியரசன் (வயது 24). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சுஜி என்ற மனைவியும் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி கவியரசன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வரும்போது, எதிர்பாராத விதமாக கோட்டைமேடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் தலையில் அடிபட்ட அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 4 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் விபத்தில் சிக்கி தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அவரது மனைவி சுஜிக்கு பெருத்த மனவேதனை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தனது தாயிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சுஜியின் தாயார் தனது மருமகன் உடல் நலத்துடன் மீண்டு வர வேண்டும் என்றால் குலதெய்வத்திடம் நேர்த்திக்கடன் செலுத்தி ஆடிப் பண்டிகை என்பதால் அம்மனுக்கு பலியிட்டு திருஷ்டி கழித்தோம் என்றால் உடல் நலத்துடன் வருவார் என்று நம்பிக்கையூட்டியுள்ளார்.

    இதன் பேரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் கவியரசனை மருத்துவமனையின் அனுமதியுடன் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக வரவழைக்க முடிவு செய்தனர். அதன்படி சேலம் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கவியரசன் அழைத்து வரப்பட்டார்.

    விபத்து நடந்த கோட்டைமேடு பகுதியில் பே.தாதம்பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களின் குலதெய்வமான காளியம்மன், வேடியப்பன் ஆகிய இரு தெய்வங்களையும் தேரில் அமர வைக்கப்பட்டு மிகவும் பயபக்தியுடன் பரிகார பூஜைகள் செய்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த கவியரசன் முன்பு ஆட்டு கிடா வெட்டி திருஷ்டி கழித்தனர்.

    அப்போது சக்தி வாய்ந்த காளியம்மன் மற்றும் வேடியப்பன் சாமியை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கவியரசனை சுற்றி பல சுற்றுகள் சுற்றினர், பின்பு சாமி முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி மீண்டும் கவியரசன் முழு உடல் தகுதியுடன் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர்.
    • நெல்லை கோட்ட இந்து முன்னணி தலைவர் தங்க மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பகுதியில் போதிய மழை பெய்து தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் புத்தன்தருவை பெருமாள் நகரில் பெண்கள் விரதமிருந்து வீட்டில் மஞ்சள் நீர் வைத்து பூஜை நடத்தினர். பின்னர் ஊர்வலமாக வந்து கும்மியடித்து அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் அபிஷேகம் நடத்தினர். இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . நெல்லை கோட்ட இந்து முன்னணி தலைவர் தங்க மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி தலைவி பரமேஸ்வரி தலைமையில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர். இதில் சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் மாயவன முத்துசாமி, துணைத்தலைவர் இசக்கி முத்து, செயற்குழு உறுப்பினர்கள் செல்வ முத்துக்குமார், முத்துக்குமார், புத்தன்தருவை கிளை கமிட்டி தலைவர் ஈஸ்வரன், செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்ட இந்து முன்னணியினர், இந்து அன்னையர் முன்னணியினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளா ளப்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

    இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்தி டம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் சத்திர வெள்ளாளப்பட்டி கிராம மக்கள் இன்று காலை ஊருக்கு வந்த அரசு பஸ்சை மறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவிகள், பெற்றோர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாலமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி கூறப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர்.
    • அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது தொப்பம்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் சாலை வசதி, மின்விளக்கு, மயானம், கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தொப்பம்பட்டி கிராமமக்கள் கூறியதாவது:-

    எங்கள் ஊரின் பெயர் பலகை கூட இல்லை. மெயின் ரோட்டில் இருந்து தொப்பம்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கான சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் தான் கிராம மக்கள் சென்று வருகின்றனர். அதிலும், மின்விளக்கு வசதி எதுவும் இதுவரை செய்து தரப்படாததால் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இக்கிராமத்தில் கால்வாய் வசதி தற்போது வரை செய்து தரப்படாமல் உள்ளது.

    கிராமத்து குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் கூட கட்டப்படாததால், 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராம த்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தை களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர். இங்குள்ள மக்கள் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டி லும், ஓட்டு வீடுகளிலுமே தங்களது வாழ்க்கையை நடத்து கின்றனர்.

    தொப்பம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு கால்வாய் வசதி, மின் விளக்கு, சாலை வசதி, நூலகம், மயானம், பொது குளியல் தொட்டி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி ஊராட்சிமன்றத் தலை வரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிதியில்லை என கூறி அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளார்.

    மேலும் அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி என எதுவுமே செய்துதராமல் தவிர்த்து வருகிறார். அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத தொப்பம்பட்டி கிராமத்திற்கு திருமண சம்பந்தம் பேச வரும் பிற ஊர்களை சேர்ந்த வர்கள் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர்
    • சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. மழை வேண்டி பல்வேறு முறைகளில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு ஒன்றை எடுத்து உள்ளனர்.

    இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.

    அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    இதன்பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனமடைந்து உள்ளது. இந்த ஆண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இதனால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர் என அவர்கள் கூறியுள்ளனர்.

    • கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • வெங்கடாசலம்செட்டியார் 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தகட்டளை சொத்தாகும்.
    • ரூ.50 லட்சத்துக்கு அதிகம் பொருமான மரங்களைவெட்டி கடத்தி சென்றனர் .

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்திபெற்ற வீரட்டா னேஸ்வரர் கோவில். இந்த கோவில் எதிரில்திலகவதி யார் நந்தவனம், திருநா வுக்கரசர் நந்தவனம் உள்ளது. திலகவதியார் நந்த வனம் திருவாடுதுறை ஆதீனம்பராமரிப்பில் உள்ளது திலகவதியார் நந்தவனத்தைபராமரித்து வரும் திருவாடுதுறை ஆதீனம் திருவதிகை விரட்டா னேஸ்வரர் கோவிலுக்கு செய்ய வேண்டிய கட்ட ளைகளை முறையாக நிறை வேற்றி வருகின்றனர். திருநாவுக்கரசர் நந்தவனம் பரங்கிப்பேட்டை வெங்கடாசலம் செட்டியார் 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தகட்டளை சொத்தாகும். பரங்கிப்பேட்டை வெங்க டாசலம் செட்டியா ருக்கு வாரிசு இல்லாததால் அவரது தம்பி சிவனேசன் செட்டியார் குடும்பத்தினர் அந்த சொத்தை அனுபவித்து உயிலில்உள்ளவாறு கட்டளைகளை செய்து வந்தனர். தற்போது உள்ள 5-வது தலைமுறையினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டளையை நிறைவேற்றாமல் சுமார் 50 கோடி மதிப்புள்ள இந்த கட்டளை சொத்தைவேறு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    40 ஆண்டு காலமாக கட்டளை பணிகளை செய்யாமல் இந்த கட்டளை சொத்தை விற்பதற்கு தற்போதுள்ள வாரிசுதாரர்களுக்கு உரிமை இல்லை எனக்கூறி கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த சொத்தை நாங்கள்வாங்கிவிட்டோம் என்று கூறி ஒருகூட்டத்தினர் நந்தவனத்திற்குள் புகுந்து பொக்லைன் எந்திரம் மூலம் இங்குள்ள ரூ50 லட்சத்துக்கு அதிகம் பொருமான மரங்களைவெட்டி கடத்தி சென்றனர் . இதனை அறிந்த கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள்,சிவனடியார்கள், சிவதொண்டர்கள், இந்து மக்கள் கட்சியினர் அங்கு திரண்டனர்.இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுபோவதாக வதாக மிரட்டல் விடுத்தனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அனுமதி இல்லாமல் பச்சை மரங்களை வெட்டி கடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள், பக்தர்கள் கலைந்து சென்றனர் இதனால்பொதுமக்கள் நடத்த இருந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • திருச்சுழி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
    • உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சியில் காரேந்தல், கொக்குளம், நாடாக்குளம், பள்ளிமடம் மற்றும் ஊரணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்கள் உள்ளது. பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிப்பட்டி பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு பல மாதங்களாக குடிநீர், சாலைவசதி, உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த 2020-21-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரணிப்பட்டி கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குழாய்களில் தாமிரபரணி குடிநீருக்கு பதிலாக உப்பு தண்ணீரே சப்ளை செய்யப்படுகிறது. அதையும் கூட ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவது இல்லை.

    இதனால் அன்றாடம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு இடையே நாள்தோறும் குடம் ஒன்றுக்கு ரூ.12 வரை செலவழித்து 4 முதல் 8 குடங்கள் வரை தனியார் குடிநீர் வாகனங்களில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

    குடியிருப்புகள் வழியே முறையான சாலை வசதி யில்லாத காரணத்தால் மழைக்காலங்களின் போது தெருக்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து தீவுகளில் வாழ்வதை போல உள்ளது. மேலும் தேங்கிய மழைநீரில் முழங்கால் வரை நனைந்த படி நடந்து செல்வதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் திருச்சுழி யூனியன் அலுவலகத்திலும் பலமுறை புகாரளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதனால் வீணாகி வரும் சிறிதளவு தண்ணீரையே வெகு நேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

    ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே யானை, சிறுத்தை, மான் காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    நகுல வரம்-மொய்தீன்புரம் இடையே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 3 குட்டிகளுடன் சிறுத்தை ஒன்று சுற்றி வந்தது.

    அந்த வழியாக காரில் சென்ற நபர் சிறுத்தை குட்டிகளுடன் சுற்றியதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    பின்னர் வீடியோவை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதை உறுதி செய்தனர்.

    இது குறித்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

    கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் சுற்றி திரியக்கூடாது.

    கூடிய விரைவில் கிராமப் பகுதியை ஒட்டி சுற்றி திரியும் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 குல தெய்வ கோவில்களில் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பை தலைமை யாக கொண்ட 56 கிராமங் களை சேர்ந்த ஒரே சமு தாயத்தை சேர்ந்த மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி 215 மாட்டுவண்டி களில் குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள் சிவ காசி அருகே எம்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கூட முடையார்அய்யனார் கோவிலுக்கும், சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள மல்லி வீரகாளியம்மன் கோவிலுக்கும், ராஜபாளை யம் அருகே கீழராஜகுல ராமன் கிராமத்தில் உள்ள பொன் இருளப்பசுவாமி கோவிலுக்கும் 3 பிரிவுகளாக பிரிந்து சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    56 கிராம மக்களும் குல தெய்வ தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வருகிற 27-ந்தேதி ஒரே இடத்தில் சந்தித்து அங்கு கிடா வெட்டி விருந்து வைத்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

    அதனை தொடர்ந்து 28-ந் தேதி தாங்கள் சென்ற மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் சிவகாசியில் இருந்து புறப்பட்டு வருகிற 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவிடையார்பட்டியில் கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருவிடையார்பட்டி பள்ளி அருகே சுகாதாரத்துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் நல்ல தண்ணீர், மழை நீர் எங்கு எங்கு தேங்குகிறதோ அதில் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் மக்களுக்கு டெங்கு பரவுகிறது. பொது மக்கள் வீட்டில் உடைந்த குடங்கள், டயர்கள், மண்பானைகள், தேங்காய் கொட்டாச்சி ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதில் கொசுக்கள் உற்பத்தி யாகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    டெங்கு காய்ச்சல் வந்தால் மூட்டுவலி, கை கால் வலி தலைபாரம் போன்றவைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பரிசோதனை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

    மெலட்டூர் அருகே நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் குடம் அகற்றப்பட்டது.
    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பகுதியில் சாலையில் தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் குடம் தலையில் சிக்கியவாறு பல நாட்களாக சுற்றி திரிந்தது. இதனால் உணவின்றி பல நாட்களாக நாய் அங்கும் இங்கும் சாலையில் சுற்றியபடி உயிருக்கு போராடி வந்தது. நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் குடத்தை அகற்ற கிராமத்தினர் சிலர் முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி, மூலம் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர், தீயணைப்பு மீட்பு பணியினர், கால்நடைதுறையினர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற வேண்டும் என கிராமமக்கள் கேட்டுக்கொண்டனர். யாரும் முன்வராததால் இது குறித்து தகவல் மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் கவனத்திற்கு சென்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். பேரூராட்சி ஊழியர்கள் இருவர் திருக்கருகாவூர் அரசு கால்நடை மருத்துவர் ஆகியோர் இரும்புதலை கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு தலையில் குடத்துடன் சுற்றித்திரிந்த நாயை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து பின்னர் நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் குடத்தை கட்டிங் பிளேடு உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி காயமின்றி வெட்டி அகற்றினர்.

    பின்னர் நாயின் உடல்நலத்தை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தார். மெலட்டூர் பேரூராட்சி செயல்அலுவலர் குமரேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கால்நடை மருத்துவர் சௌந்தராஜன் ஆகியோருக்கு கிராமமக்கள் நன்றி பாராட்டினர்.
    ×