search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு உருக்காலை"

    • கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் .

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 93 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம்பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    90 நாட்களுக்கும் மேலாக தொடரும் பொதுமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரும்பு உருக்கு ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் . சட்ட விரோதமாக செயல்படும் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் நேரில் வந்து தங்களிடம் பேச வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலை உரிமம் முடிவடைந்த நிலையில் அதனை புதுப்பி க்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17ந் தேதி முதல் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப ட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 8-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்ட பந்தலில், அப்பகுதி மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது
    • 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17-ந் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.

    இதற்கிடையே நேற்று இரும்பு உருக்கா லைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி, மாசுக்கட்டு ப்பாட்டு வாரிய அலு வலகம், பல்லடம் ஊராட்சிஒன்றிய அலுவலகம்ஆகிய இடங்களில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    • 17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.எம். சண்முகம் தலைமையில்,பல்லடம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் செல்வராஜ், வீரபாண்டி பகுதி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஓ.பி.எஸ்.சிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இதே போல பா.ஜ.க.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இரும்பு உருக்காலை அனுமதியின்றி இயங்கிய விவகாரத்தில் துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.

    • கடந்த 16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அனுப்பட்டியில் கடந்த 8 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிப்படையில், இரும்பு உருக்காலை உரிமத்தை நீட்டிப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் தெரிவித்தார்.இந்தநிலையில் அனுப்பட்டி கிராமத்தில் 8-வது நாளாக பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே அங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என அனுப்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • இரும்பு உருக்காலையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைகின்றனர். ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து தரக்கூடாது.
    • எங்கள் கோரிக்கையை மீறி அனுமதி தந்தால் அரசு வழங்கிய ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைப்போம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைய உள்ளது.

    எனவே அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 16- ந்தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதை த்தொடர்ந்து அனுப்பட்டி யில் 5 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) வாசுகி, உதவி பொறியாளர் செந்தில்குமார், காம நாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய இன்ஸ்பெ க்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் குழந்தைவேல் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன், வக்கீல் கோபாலகிருஷ்ணன், அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தனியார் இரும்பு உருக்காலை நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் இரும்பு உருக்காலையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்படைகின்றனர். ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து தரக்கூடாது. எங்கள் கோரிக்கையை மீறி அனுமதி தந்தால் அரசு வழங்கிய ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைப்பதோடு ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மாலை 4 மணிக்கு தொடங்கிய அமைதி கூட்டம் இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தாலுக்கா அலுவலகம் முன்பு திரண்ட அனுப்பட்டி கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இதற்கிடையே பேச்சு வார்த்தை இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிப்படையில், இரும்பு உருக்காலை உரிமத்தை நீட்டிப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமார் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று முதல் இரும்பு உருக்கு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது.

    ×