search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லடத்தில் 100-வது நாளாக தொடரும் பொதுமக்கள் போராட்டம்- கஞ்சி தொட்டி திறந்ததால் பரபரப்பு
    X

    அனுப்பட்டி கிராமத்தில் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பல்லடத்தில் 100-வது நாளாக தொடரும் பொதுமக்கள் போராட்டம்- கஞ்சி தொட்டி திறந்ததால் பரபரப்பு

    • கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இரும்பு உருக்காலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றுடன் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×