search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள்"

    • அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).

    நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

    அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.

    இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.

    தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
    • குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

    அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
    • நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டில் ரத்தின தங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு எறும்பு காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணியாற்றி வருகின்ற னர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வ நாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்க லம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடு வது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.

    விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளை யடிக் கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடி யாக அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரத்தின தங்கத்திற்கு தகவல் அளித்தார்.

    இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா ளரின் கணவர் ராம்கோபால் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்த னர். பெட்ரோல் பங்கில் திருடு வதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.

    • மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.

    அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளனர்.
    • 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து தக்காளி திருட்டில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது திட்டக்குடியில் ராமநத்தம் - விருத்தாச்சலம் மாநில சாலையோரம் உள்ள பன்னீர் முட்டை கடையில் இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் உள்ள 4 ஆயிரம் பணத்தை எடுப்பதும் மற்றும் பொருள்கள் எடுக்கும் காட்சிகள் அங்குள்ளசி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த சிறுவன், கோழியூரை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

    • வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 33). இவருடைய மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.

    கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். ஆத்தியப்பன் வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்ப டுகிறது.

    இந்த நிலையில் கட்ட னார் பட்டியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கில் கைகள் கட்டப்பட்டு, வெட்டு காயங்களுடன் ஆத்தி யப்பன் பிணமாக கிடந்தார்.

    தகவலறிந்த வச்சக்கா ரப்பட்டி போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா மேற்பார்வையில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஆத்தியப்பனை முன் விரோதத்தில் ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (19), மாரீஸ்வரன் (24), மைன் பீட்டர் (28) வசந்தகுமார் (19) மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்ததுது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.

    சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.

    மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

    பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.

    இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். 

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் உத்தரவின்படி அதிராம்பட்டினம் இராஜமடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் கடற்கரை சாலையில் ஜார்ஜ்ராஜ், குணசேகரன், ஐயப்பன், விமல், மதி ஆகிய போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.

    • பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர்
    • சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. மழை வேண்டி பல்வேறு முறைகளில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு ஒன்றை எடுத்து உள்ளனர்.

    இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.

    அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    இதன்பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனமடைந்து உள்ளது. இந்த ஆண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இதனால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர் என அவர்கள் கூறியுள்ளனர்.

    • கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.
    • போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பளியர்இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான சீனி மகன் பட்டவராயன் (வயது 16), வேல்முருகன் மகன் ஞானவேல் (15), ரவி மகன் தமிழரசன் (14) ஆகிய 3 சிறுவர்களையும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.

    அவர்களது பெற்றோர்களிடம் சிறுவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.

    இதையடுத்து வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களை பெற்றோர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், ராஜதானி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரஹ்மான், தலைமைக்காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவர்களை மீட்க மத்திய பிரதேசத்திற்கு விரைந்தனர்.

    போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 340 கி.மீ. தூரத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 3 சிறுவர்களும் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்று மீட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி கோர்ட்டில் குழந்தைகளை ஆஜர்படுத்தி அதன் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் மாயமான சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்றும், இட்லி கடை வேலைக்காக சென்று அங்கு வேலை பிடிக்காமல் தாங்களாகவே வெளியேறி சென்றதாகவும்,

    பின்னர் ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக லாரியுடன் வந்த தமிழ்நாடு தொழிலாளர்களுடன் சேர்ந்து இடம் பெயர்ந்ததும் தெரிய வந்தது. 3 சிறுவர்களையும் விைரந்து மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.
    • புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி ரெயில் சேவை காலை மற்றும் மாலையில் உள்ளது.

    முன்பதிவு இல்லாத இந்த ரெயிலில் சாதாரண டிக்கெட் பெற்று பயணிகள் எளிதில் பயணம் செய்ய முடியும் ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்தால் இருக்கை கிடைத்துவிடும்.

    ஆனால் புறப்படும் நிலையத்தை தவிர இடையில் உள்ள நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதால் இருக்கைகள் மட்டுமின்றி உடமைகள் வைக்கக் கூடிய பகுதி, நடைபாதையில் எல்லாம் மக்கள் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

    குறிப்பாக புதுச்சேரியில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும் பாசஞ்சர் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற நிலையங்கள் தவிர சிறிய நிலையங்களிலும் நின்று செல்வதால் வழி நெடுக மக்கள் ஏறுகிறார்கள். இதனால் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

    பெண்கள், வயதானவர்கள் ரெயில் பெட்டியில் இடம் இல்லாததால் வழியில் அமர்ந்து பயணிக்கின்றனர். சிலர் கழிவறையில் நின்று பயணம் செய்கின்றனர். பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடம் இல்லாததால் கழிவறையில் நின்று பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். கழிவறையில் நின்றால் யாருக்கும் இடையூறாக இருக்காது எனக் கருதி அங்கே விட்டு விடுகின்றனர்.

    பாதுகாப்பு இல்லாத சுகாதாரமில்லாத அந்த இடத்தில் சிறுவர்கள் மட்டுமின்றி பெண்களும் நிற்கின்றனர். இதனால் அவசரமாக கழிவறையை பயன்படுத்த நினைப்பவர்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து தாம்பரம் வரை இந்த அவலநிலை நீடிக்கிறது.

    எனவே புதுச்சேரி - சென்னை இடையே ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

    ×