search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union"

    • திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
    • 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே ஆலங்குடியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க இடைக்கமிட்டி கூட்டம் ஒன்றிய தலைவர் மருதையன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ரவி பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் மருதையன் கூட்டத்தை நிறைவு செய்தார்.

    கூட்டத்தில், வருகிற 26-ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினம் குறித்து திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், வருகிற 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    மேலும் ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.எம். முருகையன் நினைவு தினத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ராமராஜ், துணைச் சேர்மன் ஆஸ்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் பேசும்போது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அல்லிகுளம், குமாரகிரி, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, தளவாய்புரம், மாப்பிள்ளை யூரணி, மறவன்மடம், மற்றும்சேர்வைகாரன்மடம் ஆகிய ஊராட்சிகளில் தார்சாலைகள், பேவர்பிளாக் சாலைகள், வடிகால்கள், கழிவுநீர் கால்வாய், சிறு பாலம், தடுப்புச் சுவர்அமைத்தல் ஆகிய வளர்ச்சித் திட்ட பணிகள்ரூ.1 கோடியே 90 லட்சத்தில் மேற்கொள்ளப் பட இருப்பதாக தெரி வித்தார்.

    கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், யூனியன் கூட்ட அரங்கு கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகள் மே ம்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

    முத்துக்குமார் உட்பட சில கவுன்சிலர் கோரிக்கைகள் முன்வைத்து பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் பதிலளித்தார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், சுதர்சன் தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, ஜெயகணபதி, மரியசெல்வி, முத்துலட்சுமி, செல்வபாரதி, நர்மதா, யூனியன் சத்துணவு அமைப்பாளர் செல்வராணி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வங்கிகளில் கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என அரசின் உத்தரவுக்கு கப்பலூர் தொழிற்சங்கம் பாராட்டு தெரிவித்தது.
    • கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    கப்பலூர் தொழிற்சங்கம் சார்பாக 30-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கப்பலூர் தொழிற்சங்கத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் ரகுநாத ராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது அணுகு சாலையை முழுமையாக பயன்படுத்திச் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போதைய மின்சார கட்டண உயர்வு, சிறு மற்றும் குறு தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டணம் ஏற்றப்படாவிட்டாலும், தற்போதைய உயர்வு சுமார் 32 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகி உள்ளது. இதனால் வெளி மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாமல் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டணம் குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது சிறு, குறு தொழில்கள் உற்பத்தி வெளி மாநில தொழிலாளர்களை நம்பும் நிலை உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

    வங்கிகளில் தொடர்ந்து கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அரசின் முடிவிற்கு கப்பலூர் தொழிற்சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தது.
    • இந்த தகவலை தலைவர் பிர்லா கணேசன் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் நடராஜன் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், அண்ணா திட்டம் மூலம் உடனடி வளர்ச்சி திட்ட பணிகள் தேவைப்படும் 8 ஊராட்சிகளில் ரூ.4.29 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு அவை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் 2 ஊராட்சிகளில் அவசர வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து வருகின்றனர். பொது நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறோம் என்றார்.

    கவுன்சிலர் ரவி பேசுகையில், கடந்த மாதங்களில் டெண்டர் விடப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு பொறியாளர் பதிலளிக்கையில், இப்போது தான் ஒவ்வொரு படிகளாக நடைபெற்று வருகிறது என்றார்.கவுன்சிலர் ஜான்சி ராணி பேசுகையில், கிளியூர்- புலியால் ரோடு சமீபத்தில் தான் போடப்பட்டது. அந்தச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. வெற்றிவேல் ஊராட்சிக்குட்பட்ட வாய்வுநேந்தல் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.

    இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.

    • உலக அமைதிக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள நேட்டோ கூட்டமைப்பை உடனே கலைக்க வேண்டும்.
    • மனித உரிமைகளையும், தொழிலாளர் உரிமைக ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் ஏ .ஐ. டி. யூ. சி தொழிற்சங்கம் சார்பில் உலக அமைதி நாள் கடைபிடிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    நிகழ்வில்உலக அமைதிக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள நேட்டோ கூட்டமைப்பை உடனே கலைக்க வேண்டும், ரஷ்யா-உக்ரைன் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போர் இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்குவோம், மனித உரிமைகளையும், தொழிலாளர் உரிமைக ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, துணைச் செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி கஸ்தூரி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கட்டுமான சங்க துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.
    • சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் என்.எஸ்.என். திருமண மகாலில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.

    அப்போது கலந்து கொண்ட காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகளில் ஒருவரும், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மகேஸ்குமார் தனது மன்ற நிர்வாகிகளுடன் (ஆண்கள் மற்றும் பெண்களுடன்) சலங்கையாட்டம் ஆடினார். தொடர்ந்து கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் தலைவர் குருவேலன் தங்கவேலன் தங்களது குழுவின் உறுப்பினர்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடினார்.

    அப்போது கலந்து கெரண்ட காங்கயம் நகராட்சி சேர்மன் சூர்யபிரகாஷ், காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என்.தனபால் , செயலாளர் கங்கா சக்திவேல், பொருளாளர் பாலாஜி ரவிச்சந்திரன், காங்கயம் நகர , ஒன்றிய, வட்டார பகுதிகளின் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் , சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

    • கடையம் யூனியன் அலுவலக சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வணிக வளாகம் அமைக்க வேண்டும்.
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான அட்டையை ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் வழங்க அனுமதிக்க வேண்டும்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 பஞ்சாயத்துக்களின் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் துப்பாக்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் டி.கே .பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார். துப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடைபெறும் பணிகளுக்கான பேக்கேஜ் டெண்டருக்கு ஒப்பந்ததாரரை ஊராட்சி தலைவரே நியமிக்கவும், 75-வது சுதந்திர தின விழாவில் அனைத்து ஊராட்சிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து கொடியேற்றவும், கடையம் யூனியன் அலுவலக சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தவிர்க்க வணிக வளாகம் அமைக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான அட்டையை ஆகஸ்ட் 10-ந் தேதிக்குள் வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம ராதா ஜெயம் , கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளராக திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் அணைந்த பெருமாள்நாடனூர் அழகுதுரை, கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், அடைச்சாணி மதியழகன்,பொட்டல்புதூர் கணேசன்,மந்தியூர் கல்யாணசுந்தரம் , ஐந்தாங் கட்டளை முப்புடாதி பெரியசாமி, சிவசைலம் மலர்மதி சங்கரபாண்டியன் ,முதலியார்பட்டி முகைதீன் பீவி அசன்,கடையம் முத்துலட்சுமி ராமதுரை, மேலஆம்பூர் குயிலி லட்சுமணன் , பாப்பான்குளம் முருகன், தர்மபுரம் மடம் ரூகான் ஜன்னத் சதாம், வீராச முத்திரம் பர்வீன் யாகூப், மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கீழ ஆம்பூர் மாரிசுப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார்.
    • வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பில்லாளி, திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூர், கீழப்புதனூர், காரையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மொத்தம் 269 மனுக்கள் அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி சகாயராஜ், பாண்டியன் சத்யமூர்த்தி, தமிழரசி கணேசன், கலாராணி உத்திராபதி, உள்ளாட்சி பிரதிநிதி லீலாவதி பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    கரூர்:

    ஜன. 1ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.தாமோதரன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ஆர்.ராஜசேகர் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சடையாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கே.கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட இணை அமைப்பாளர் கே.ஞானசேகரன் வரவேற்றார்.

    தி.மு.க.வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். முடக்கப்பட்ட சரண்டர் பணபலன்களை திரும்ப வழங்கவேண்டும். முன்னாள் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.

    • புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் சிறப்பு தொழில் மண்டலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சக்திகுமார், அமுத கணேசன், மாவட்ட துணை தலைவர் சேதுராஜ், ஒன்றிய தலைவர்கள் கனகவேல், பார்த்திபன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கண்ணன், சுப்பாராம், குருசாமி, லிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையை உலக அளவில் கொண்டு செல்லும் வகையிலும், தீப்பெட்டி உற்பத்திக்கும் சிறப்பு தொழில் மண்டலம் அமைக்க வேண்டும்.

    ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். விளாத்திகுளம் பகுதி விவசாயிகள், விளைபொருட்களுக்கு விலை கிடைக்காத காலத்தில், அதனை பாதுகாத்து சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது
    • முறையற்ற மாறுதலை ரத்து செய்யக்கோரி

    கரூர்:

    முறையற்ற மாறுதலை ரத்து செய்யக்கோரி க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க க.பரமத்தி ஒன்றிய கிளை சார்பில் ஒன்றியத்தலைவர் கே.பூமாதேவி தலைமையில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் வி.டி.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சி.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் எஸ்.செல்வராணி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி, மாவட்ட இணைச் செயலாளர் சிவகாமி ஆகியோர் விளக்க உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் என்.பூங்கொடி வரவேற்றார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.மல்லிகா நன்றி கூறினார்.முறையீட்டில், விருப்ப மாறுதலில் சென்ற ஒரு வாரத்தில் அமைப்பாளர் லதாமங்கேஷ்கருக்கு சின்னதாராபுரம் மகளிர் பள்ளியிலிருந்து பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மேலும் ஒரு முறையற்ற மாறுதல் செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்யவேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்.கூட்டுறவு நாணய சங்கத்தில் கடன்பெறும் உரிமையை ஒப்புதல் செய்திடவேண்டும். மாற்றுத் திறனாளிக்கு அரசாணைப்படி அலவன்ஸ் வழங்கவேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.

    • அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புக் குழு தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க 4-வது மாநில மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலம் காசிமேஜர்புரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வரவேற்புக் குழு தலைவர் துரைசிங் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் செயலாளர் அறிக்கையையும், மாநில பொருளாளர் பாலமுருகன் பொருளாளர் அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொருளாளர் முருகான ந்தம் வாழ்த்திப் பேசினார்.

    தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் அமைப்பு விதிகள் திருத்தத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு நிறைவுரை ஆற்றினார்.

    மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் தீர்மானங்கள் விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் அல்லாபிச்சை நன்றி கூறினார்.

    மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக பேரூராட்சி களுக்கு இணையான மக்கள்தொகை மற்றும் வருவாய் கொண்டுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகள் ஆக தரம் உயர்நிலைக்குழு அமைத்திட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பேரூராட்சி ஊழியர்களும் கோசங்களை எழுப்பி எழுந்து நின்று முன்மொழிந்தனர். மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×