search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சங்கம்"

    • பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் , வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், ரெயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பினர் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்துகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் குமரன் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நாளை நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கத்தினரும் ஒன்று சேர்ந்து மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

    சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்த போராட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்களும் டிரைவர், கண்டக்டர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இதனால் பஸ் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.

    இதையொட்டி சீரான பஸ் போக்குவரத்து நடை பெற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகர போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்கு வரத்து கழகங்களில் செயல்படும் சில தொழிற் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (16-ந் தேதி) அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

    எனவே போக்குவரத்து டிரைவர் கண்டக்டர்கள், தொழிலாளர்கள் அனை வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் பணிக்கு வரவேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு 16-ந் தேதி வழங்கப்பட்ட விடுமுறை யாவும் ரத்து செய்யப்படுவதோடு, வார ஓய்வு, பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும்.

    அவ்வாறு பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டிவிடும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த சுற்றறிக்கை அனைத்து பணிமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    • மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையம் முன்பு டி.ஆர்.இ.யூ. தொழிற் சங்கத்தினர் அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப போனஸ் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்தல், காலி பணி யிடங்களை நிரப்புதல் உள் ளிட்ட 6 அம்ச கோரிக் கையை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    மதுரை கோட்ட பொரு ளாளர் சரவணன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். அதைதொடர்ந்து, நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.

    இதில் தலைவராக அய்யப்பன், செயலாளராக முனியாண்டி, பொருளாள ராக கேசவன்துரை, உதவி செயலாளராக செல்லத் துரை உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அகில இந்திய தலைவர் நரேந்திர குமார் , செயல் தலைவர் பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் தேசிய பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏ .ஐ .டி. யூ. சி., அகில இந்திய பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், அகில இந்திய தலைவர் நரேந்திர குமார், செயல் தலைவர் பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவோம், தொழில் துறையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க சார்பில் ஆகஸ்ட் 9 ம் தேதி வெள்ளையனே வெளியேறு நாளில் கார்ப்பரேட் கம்பெனிக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து பெருந்திரள் தொடர் அமர்வு போராட்ட விளக்க கூட்டம் எண்ணூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 14 அம்சகோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுவதை முன்னிட்டு மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு , ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிஐடியு விநாயகமூர்த்தி, கதிர்வேல், ஏ ஐ டி யு சி பார்த்திபன், பாலன், ஐ என் டி யு சி, தாமோதரன், சி ஐ டி யு, பாண்டியன், ஆகியோர் விளக்க உரையாற்றினர் சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் விஜயன், ஏ ஐ டி யு சி, மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு படிப்பகம் மற்றும் தொழிற்சங்க கொடி ஏற்றி பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சொக்கர், பேரவை மண்டல அமைப்பாளர் சரவணன், 62-வது வட்டச் செயலாளர் ஆரான் ஆகியோர் செய்திருந்தனர்.

    மாவட்டச் செயலாளர்கள் முனியசாமி, மணி, பிச்சைமணி தொழிலாளர் அணி மண்டல அமைப் பாளர்-தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப் பாளர்கள் பாண்டியன், மயில்ராஜ், ரமேஷ் மற்றும் அணியின் மண்டல அமைப் பாளர்கள் செல்லப்பாண்டி, சிவபாலகுரு, கிருஷ்ண குமார், பத்மா, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொது செயலாளர்-முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    பெத்தானியாபுரம் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஆர். சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை தாங்குகிறார்.மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜா வரவேற்று பேசுகிறார்.

    மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் ரவிச்சந்திரன், மத்திய 6-ம் பகுதி செயலாளர் ராமச்சந்திரன், சக்தி மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கணேஷ் பிரபு, முன்னிலை வைக்கிறார்கள்.

    தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் மல்லன், தவசி, சுப்புராஜ், பாலகுமார், ராஜசேகரன், முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்று கிறார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டாக்டர் முத்தையா, துணைச்செயலாளர் எம். எஸ். பாண்டியன், பேச்சா ளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    தொழிலாளர்களின் மேன்மையை சிறப்பிக்கும் இந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவு நிர்வாகி கள் மற்றும் முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • அண்ணா தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் லட்சுமி (வயது48), மாற்றுத்திற னாளி. இவர் கடந்த மாதம் 31-ந் தேதி வேலையை முடித்து விட்டு, நூற்பாலைக்கு வெளியே வந்தபோது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்கா மல் கடுமையான பணிகள் ஒதுக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர் என்றும், மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி மரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மேற்பார்வையாளர் கொடுத்த பணி சுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அவரை பணி நீக்கம் செய்ய கோரி அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நூற்பாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். அச்சங்குளம் நூற் பாலை அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கர்ணன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, முத்தையா, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்கள் சிறு,சிறு குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
    • அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விடுப்புகள் மறுக்கப்படுவது கண்டன த்துக்கு உரியதாகும். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடிகள் உள்ளது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    நாகர்கோவில் மண்டலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் மீது எடுக்கப்படும் பழி வாங்கும் நடவடிக்கையை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இது தொழிலாளர்களை நசுக்கும் செயலாகும்.

    போக்குவரத்து தொழிலாளர்கள் சிறு,சிறு குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கடந்த 4 மாதமாக டி.ஏ. வழங்கப்படவில்லை. சம்பளத்துடன் சேர்த்து டி.ஏ. வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு விடுப்புகள் மறுக்கப்படுவது கண்டன த்துக்கு உரியதாகும். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடிகள் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஓய்வூதியம் வழங்காமல் பழி வாங்கப்படுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசினார்.அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜய குமார், தலைவர் சந்தனராஜ், பொருளாளர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் முருகேஸ் வரன்,ஜெய கோபால், ஜெவின் விசு, ஸ்ரீலிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்புச் செயலாளர் பச்சைமால், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர்கள் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தரநாத்,தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஆரல் வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் நிர்வாகிகள் வெங்கடேஷ், ரவீந்திர வர்ஷன், ஆறுமுக ராஜா.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பிரைட் ஜேக்கப், ராணி தோட்டம் பணிமனை டிப்போ செயலாளர்கள் குமார், ராஜன், விஜய குமார், கனகராஜ், செட்டி குளம் டிப்போ ராஜன், கலைச்செல்வன், திருவட்டார் டிப்போ சதீஷ், ஜான் கிறிஸ்டோபர், திங்கள் சந்தை ராஜன், ஹரிஹரன், குளச்சல் செந்தில்குமார், இளங்கோ, சபாபதி, ரகுவரன், குழித்துறை பிரகதீஷ் ஜெபராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாகர்கோவில் மண்டல விபத்து பிரிவு செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாகர்கோவில் மண்டல அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அலுவல கத்திற்கு உள்ளே இருந்து வாக னம் ஒன்று வெளியே செல்ல வந்தது. தொழிலாளர்கள் அந்த வாகனத்தை விட மறுப்பு தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வெளியே இருந்து அலுவலகத்திற்குள் அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் செல்ல வந்தார்.அவரையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி னார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் மலர்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளுக்கு சிறப்பு விருதுகளை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் http://www.labour.tn.gov.in என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமரசம்) அலுவலகத்தில் பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார். 

    • உடுமலை அரசு போக்குவரத்து கிளை மேலாளராக பணிபுரிந்த சந்திரன் என்பவரை கண்டித்து தர்ணா போராட்டம்.
    • 54 பேருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிந்த சந்திரன் என்பவரை கண்டித்து கிளை மேலாளர் அலுவலகம் முன்பு திமுக தொழிலாளர் சங்கத்தினர் திடீர் தர்ணாவில் போராட்ட பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 28, 29, 30 ஆம் தேதிகளில் திமுக தொழிலாளர் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் முறையாக அரசு போக்குவரத்து கிளையில் விடுப்பு கடிதம் கொடுத்த பிறகும் தற்பொழுது 54 பேருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிளை மேலாளர் அலுவலகம் முன்பு தற்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தி.மு.க தொழிற்சங்க த்தினர் கூறியதாவது:-

    உடுமலை அரசு போக்குவரத்து கிளையில் பணிபுரிந்து இடமாற்றம் மாறுதலாகி சென்ற சந்திரன் என்ற கிளை மேலாளர் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நோக்கில் 54 பேருக்கு சம்பள பிடித்தம் செய்து விடுப்பு போடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் 54 தொழிலாளர்களுக்கும் முறையான சம்பளம் வழங்க வேண்டுமென தற்சமயம் கிளை மேலாளராக உள்ள நடராஜன் என்பவரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட காரணத்தால் தற்சமயம் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். உடுமலை அரசு போக்குவரத்து கிளை அலுவலகத்தில் திமுக தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கிகளில் கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என அரசின் உத்தரவுக்கு கப்பலூர் தொழிற்சங்கம் பாராட்டு தெரிவித்தது.
    • கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    கப்பலூர் தொழிற்சங்கம் சார்பாக 30-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கப்பலூர் தொழிற்சங்கத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர் ரகுநாத ராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது அணுகு சாலையை முழுமையாக பயன்படுத்திச் செல்ல தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போதைய மின்சார கட்டண உயர்வு, சிறு மற்றும் குறு தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக கட்டணம் ஏற்றப்படாவிட்டாலும், தற்போதைய உயர்வு சுமார் 32 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகி உள்ளது. இதனால் வெளி மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டி போட முடியாமல் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கட்டணம் குறைப்பதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது சிறு, குறு தொழில்கள் உற்பத்தி வெளி மாநில தொழிலாளர்களை நம்பும் நிலை உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

    வங்கிகளில் தொடர்ந்து கடன் பெறும் நிறுவனங்கள் ஒரு முறை மட்டுமே ஆவண பதிவு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அரசின் முடிவிற்கு கப்பலூர் தொழிற்சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×