search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strikes"

    • பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் , வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், ரெயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பினர் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்துகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் குமரன் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    திருச்சி

    வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து

    திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் திருச்சி குட்செட் யார்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தன்ராஜ், அருணகிரி, செல்வம், குழந்தைவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக காய்கறி சிமெண்ட் இரும்பு போன்ற பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.

    ×