search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசு போக்குவரத்து கிளையில் திமுக தொழிற்சங்கத்தினர் திடீர் தர்ணா போராட்டம்
    X

     தர்ணா போராட்டம் நடைபெற்ற காட்சி.

    உடுமலை அரசு போக்குவரத்து கிளையில் திமுக தொழிற்சங்கத்தினர் திடீர் தர்ணா போராட்டம்

    • உடுமலை அரசு போக்குவரத்து கிளை மேலாளராக பணிபுரிந்த சந்திரன் என்பவரை கண்டித்து தர்ணா போராட்டம்.
    • 54 பேருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் கிளை மேலாளராக பணிபுரிந்த சந்திரன் என்பவரை கண்டித்து கிளை மேலாளர் அலுவலகம் முன்பு திமுக தொழிலாளர் சங்கத்தினர் திடீர் தர்ணாவில் போராட்ட பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 28, 29, 30 ஆம் தேதிகளில் திமுக தொழிலாளர் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் முறையாக அரசு போக்குவரத்து கிளையில் விடுப்பு கடிதம் கொடுத்த பிறகும் தற்பொழுது 54 பேருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிளை மேலாளர் அலுவலகம் முன்பு தற்சமயம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தி.மு.க தொழிற்சங்க த்தினர் கூறியதாவது:-

    உடுமலை அரசு போக்குவரத்து கிளையில் பணிபுரிந்து இடமாற்றம் மாறுதலாகி சென்ற சந்திரன் என்ற கிளை மேலாளர் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நோக்கில் 54 பேருக்கு சம்பள பிடித்தம் செய்து விடுப்பு போடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் 54 தொழிலாளர்களுக்கும் முறையான சம்பளம் வழங்க வேண்டுமென தற்சமயம் கிளை மேலாளராக உள்ள நடராஜன் என்பவரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட காரணத்தால் தற்சமயம் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். உடுமலை அரசு போக்குவரத்து கிளை அலுவலகத்தில் திமுக தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×