search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் தேசிய பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
    X

    திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் தேசிய பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

    • அகில இந்திய தலைவர் நரேந்திர குமார் , செயல் தலைவர் பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தின் தேசிய பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏ .ஐ .டி. யூ. சி., அகில இந்திய பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், அகில இந்திய தலைவர் நரேந்திர குமார், செயல் தலைவர் பினாய் விஸ்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவோம், தொழில் துறையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×