என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தெருமுனை விளக்க கூட்டம்
    X

    அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தெருமுனை விளக்க கூட்டம்

    • மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க சார்பில் ஆகஸ்ட் 9 ம் தேதி வெள்ளையனே வெளியேறு நாளில் கார்ப்பரேட் கம்பெனிக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்து பெருந்திரள் தொடர் அமர்வு போராட்ட விளக்க கூட்டம் எண்ணூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 14 அம்சகோரிக்கையை வலியுறுத்தி நடைபெறுவதை முன்னிட்டு மீஞ்சூர் பஜாரில் தெருமுனை விளக்க கூட்டம் சிஐடியு , ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிஐடியு விநாயகமூர்த்தி, கதிர்வேல், ஏ ஐ டி யு சி பார்த்திபன், பாலன், ஐ என் டி யு சி, தாமோதரன், சி ஐ டி யு, பாண்டியன், ஆகியோர் விளக்க உரையாற்றினர் சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் விஜயன், ஏ ஐ டி யு சி, மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ் கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×