search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தல்
    X

    சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டது.

    ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தல்

    • உலக அமைதிக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள நேட்டோ கூட்டமைப்பை உடனே கலைக்க வேண்டும்.
    • மனித உரிமைகளையும், தொழிலாளர் உரிமைக ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சர்வதேச அமைதி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் ஏ .ஐ. டி. யூ. சி தொழிற்சங்கம் சார்பில் உலக அமைதி நாள் கடைபிடிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    நிகழ்வில்உலக அமைதிக்கு எதிரான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் உள்ள நேட்டோ கூட்டமைப்பை உடனே கலைக்க வேண்டும், ரஷ்யா-உக்ரைன் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போர் இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்குவோம், மனித உரிமைகளையும், தொழிலாளர் உரிமைக ளையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    இதில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, துணைச் செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி கஸ்தூரி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கட்டுமான சங்க துணை தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×