search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூனியன்"

    • தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
    • ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல்

    திருவட்டார் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆனையாளர்கள் சசி, யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா குமாரி, ராம்சிங், ஜெபா, சகாய ஆன்றனி, ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் சஞ்சிவ், பொன்ராஜன், கீதா, அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவட்டார் பேரூராட்சியில் அம்ருத் குடிநீர் திட்டத்திற்கு திருவட்டார் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை உடைத்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க இடம் அனுமதி வழங்குதல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அயக்கோடு ஊராட்சியில் குறுக்குடி முதல் மனக்குன்று வரை ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை அமைத்தல், கண்ணனூர் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காப்பிகுளத்தில் பக்க சுவர் அமைத்தல், ஏற்றக்கோடு ஊராட்சியில் கூற்றவிளாகம் பகுதியில் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா பொறுப் பேற்றது முதல் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மூலம் பெற்று தந்து வருகிறார். சமீபத்தில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது திங்கள்நகர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 14 லட்சத்து 82 ஆயிரம், கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 3 லட்சத்திற்கும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ. 93.7 லட்சம், நெய்யூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 11 லட்சம் என மொத்தம் ரூ. 6 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்கான சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பணிகளின் தொடக்க விழா அந்தந்த பேரூராட்சி பகுதிகளில் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் மேயருமான மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர்கள் திங்கள்நகர் சேவியர் ஏசு தாஸ், கல்லுக்கூட்டம் ரஜூ லின் ராஜகுமார், ரீத்தாபுரம் சுஜெய் ஜாக்ஸன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுமன், மனோகரசிங், பிரதீபா, காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் லாரன்ஸ், குளச்சல் சபீன், ஜெயசகிலா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் கழக நிர்வாகி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி யூனியன் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் தனலட்சுமி கண்ணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வனஜா வரவேற்றார். கணக்கர் சங்கர் தீர்மான அறிக்கை வாசித்தார்.

    இந்த கூட்டத்தில் யூனியன் கமிஷனர் ரத்தின கலாவதி திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். 15-வது நிதி குழு வளர்ச்சி திட்ட பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண்மை, தோட்டக்கலை, போக்கு வரத்து உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ராதா நன்றி கூறினார்.

    • போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், கொடிக்குளம், உரத்தூர்,கோரை குளம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீரை முறையாக விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். அதிகாரிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றார். துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியக்குடி, முத்துச்செல்லாபுரம், அ.புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டுக் குழு நீர் வரவில்லை என்றார்.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்: சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. கோடையை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. விரைவில் சரி செய்யப்படும் என்றார். தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், முதலமைச்சரின் சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி போகலூர் யனியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தில் 3 சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும். தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு மழை காலத்திற்குள் அனைத்து சாலைகளும் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழை காலத்திற்கு முன்பாக அனைத்து அத்தியாவாசிய தேவைகளுக்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதில் கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, காளீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

    • காண்டிராக்டர் மீது வழக்கு
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி.

    இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சில சாலை பணி களை காப்புக்காடு பகுதி கோணத்து விளையை சேர்ந்த பிரிங்கோ ஸ்டான்லி (வயது 35) என்பவர் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.

    இதில் குறிப்பிட்ட சாலை பணிகளை 2 மாதத்தில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் சம்மந்தப்பட்ட சாலை பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

    இதையடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்காதது குறித்து தலைவர் ராஜேஸ்வரி, ஒப்பந்ததாரரிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரர் ஸ்டான்லி, நேற்று தலை வரின் அறைக்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் சுனில்குமார், புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேவகோட்டை யூனியனில் ரூ.4.29 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்தது.
    • இந்த தகவலை தலைவர் பிர்லா கணேசன் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர் நடராஜன் ராஜாத்தி முன்னிலை வகித்தார். ஆனையாளர் ஸ்ரீதர் வரவேற்றார். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், அண்ணா திட்டம் மூலம் உடனடி வளர்ச்சி திட்ட பணிகள் தேவைப்படும் 8 ஊராட்சிகளில் ரூ.4.29 கோடியில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு அவை டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    மேலும் 2 ஊராட்சிகளில் அவசர வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்து வருகின்றனர். பொது நிதியிலும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறோம் என்றார்.

    கவுன்சிலர் ரவி பேசுகையில், கடந்த மாதங்களில் டெண்டர் விடப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு பொறியாளர் பதிலளிக்கையில், இப்போது தான் ஒவ்வொரு படிகளாக நடைபெற்று வருகிறது என்றார்.கவுன்சிலர் ஜான்சி ராணி பேசுகையில், கிளியூர்- புலியால் ரோடு சமீபத்தில் தான் போடப்பட்டது. அந்தச் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. வெற்றிவேல் ஊராட்சிக்குட்பட்ட வாய்வுநேந்தல் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மாணவர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் வெளியே சென்று வரும் சூழ்நிலை உள்ளது என்றார்.

    இதற்கு பதில் அளித்த யூனியன் தலைவர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி நன்றி கூறினார்.

    • கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.
    • சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் என்.எஸ்.என். திருமண மகாலில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.

    அப்போது கலந்து கொண்ட காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகளில் ஒருவரும், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மகேஸ்குமார் தனது மன்ற நிர்வாகிகளுடன் (ஆண்கள் மற்றும் பெண்களுடன்) சலங்கையாட்டம் ஆடினார். தொடர்ந்து கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் தலைவர் குருவேலன் தங்கவேலன் தங்களது குழுவின் உறுப்பினர்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடினார்.

    அப்போது கலந்து கெரண்ட காங்கயம் நகராட்சி சேர்மன் சூர்யபிரகாஷ், காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என்.தனபால் , செயலாளர் கங்கா சக்திவேல், பொருளாளர் பாலாஜி ரவிச்சந்திரன், காங்கயம் நகர , ஒன்றிய, வட்டார பகுதிகளின் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் , சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

    • வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 81 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தென்மலை, உள்ளார் தளவாய்புரம், திருமலாபுரம் என்ற அருளாட்சி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊராட்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கம் தூய்மையான குடிநீர் வழங்குவதாகும். வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று வாசுதேவநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் என்ற அருளாட்சியில் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலனி மயானத்தில் நடைபெற்று வரும் தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டி பணி மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணிகளையும் மற்றும் அப்பகுதியில் நடைபெற்று வரும் வாறுகால் பணிகளையும் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணியில் யூனியன் கூட்டம் நடத்தாததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி உள்பட 11 ஒன்றியங்கள் உள்ளன. யூனியன் கூட்டம் 60 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் விதி.

    திருப்புல்லாணி ஒன்றியத்தில் 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிய முடியாத சூழ்நிலையில் கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து பெரி யபட்டினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், திருப்புல்லாணி ஒன்றியத்தில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பெரியபட்டினம் ஊராட்சியில் யூனியன் நிதியிலிருந்து இதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒன்றிய கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் எழுத்து வடிவமாகவே உள்ளது. எந்த பணியும் நடைபெறாத நிலையில் பெரியபட்டினம் ஊராட்சி உள்ளது என்றார்.

    ×