search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் யூனியனில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி
    X

    திருவட்டார் யூனியனில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி

    • தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
    • ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல்

    திருவட்டார் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆனையாளர்கள் சசி, யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் அனிதா குமாரி, ராம்சிங், ஜெபா, சகாய ஆன்றனி, ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் சஞ்சிவ், பொன்ராஜன், கீதா, அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவட்டார் பேரூராட்சியில் அம்ருத் குடிநீர் திட்டத்திற்கு திருவட்டார் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை உடைத்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க இடம் அனுமதி வழங்குதல், ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அயக்கோடு ஊராட்சியில் குறுக்குடி முதல் மனக்குன்று வரை ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலை அமைத்தல், கண்ணனூர் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காப்பிகுளத்தில் பக்க சுவர் அமைத்தல், ஏற்றக்கோடு ஊராட்சியில் கூற்றவிளாகம் பகுதியில் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் பைப் லைன் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×