search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யூனியன் கூட்டம்: கவுன்சிலர்கள் அதிருப்தி
    X

    யூனியன் கூட்டம்: கவுன்சிலர்கள் அதிருப்தி

    • திருப்புல்லாணியில் யூனியன் கூட்டம் நடத்தாததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி உள்பட 11 ஒன்றியங்கள் உள்ளன. யூனியன் கூட்டம் 60 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது அரசின் விதி.

    திருப்புல்லாணி ஒன்றியத்தில் 60 நாட்களை கடந்தும் யூனியன் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிய முடியாத சூழ்நிலையில் கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து பெரி யபட்டினம் எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர் பைரோஸ் கான் கூறுகையில், திருப்புல்லாணி ஒன்றியத்தில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பெரியபட்டினம் ஊராட்சியில் யூனியன் நிதியிலிருந்து இதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.

    ஒன்றிய கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் அனைத்தும் எழுத்து வடிவமாகவே உள்ளது. எந்த பணியும் நடைபெறாத நிலையில் பெரியபட்டினம் ஊராட்சி உள்ளது என்றார்.

    Next Story
    ×