search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பணிகள்"

    • வடக்கு மண்டல தலைவர் தகவல்
    • மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினரும், வடக்கு மண்டல தலைவருமான ஜவஹர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி 16-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் வார்டு பகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி ஹனிபா நகரில் மேடுபள்ளமாக இருந்த பகுதிகள் சீர் செய்யப்பட்டு கழிவுநீர் பாய்ந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜோதி தெருவில் மழைநீர் வடிகால்கள் சீர் செய்யப்பட்டது.

    16-வது வார்டு சுத்தம், சுகாதாரம் நிறைந்த வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 2 போர்வெல்களில் இருந்து வரும் தண்ணீர் இணைக்கப்பட்டு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுகிறது. இம்மானுவேல் தெரு, ேஜாதி தெரு பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டும், நிலை உயர்த்தப்பட்டும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

    அடுத்து 2 மாத காலத்திற்குள் புத்தன் அணை குடிநீர் திட்டம் அமலுக்கு வரும்போது தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும், வார்டு பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு, கிறிஸ்டோபர் தெரு ஓடைகள் புதுப்பிக்கப்படும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையோரம் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    16-வது வார்டு பகுதியில் சுகாதார மையம் இல்லை. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். அதனை போன்று 2 அங்கன்வாடிகள் உள்ளது. அவை மோசமான நிலையில் உள்ளது. அதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நூலக கட்டிடம் அருகே அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளும் மேயரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. 16-வது வார்டில் மட்டும் இதுவரை ரூ.2.50 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    எம்.எஸ்.ரோட்டில் கிறிஸ்துநகர் முன்பு ஓடைகள் முறையாக சீரமைக்கப்படாததால் இந்த பகுதியில் 20 வருடங்களாக தண்ணீர் தேங்கும். மழைக்காலங்களில் தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்தும் நிலை இருந்தது. தற்ேபாது வடிகால் சீர் செய்யப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மாணவர்களிடம் கற்றல் திறன் பற்றி கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சவ் வாசுபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.72 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புரணமைக் கப்பட்ட பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் மதிய உணவு சமையல் கூடத்திற்கு சென்று பார்வையிட்டு, வழங்கப்பட்டு வரும் உண வின் தரம் குறித்தும், பதிவே டுகளையும் ஆய்வு செய்து, திட்டத்தின் மூலம் பயன்பெ றும் மாணவர்களின் எண் ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், சவ்வாசு புரத்தில் உள்ள பொது நூல கத்திற்கு சென்று பார்வை யிட்டு பதிவேடுகள், புத்தகங் களை ஆய்வு செய்து, வாசிப் பாளர்களிடம் நூலகத்தின் பயன்பாடு, தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந் தார்.

    குள்ளம்பட்டி ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் ரூ.5.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள பேவர் பிளாக் சாலையினையும், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தி னையும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ள உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    முத்துராமலிங்கபுரம் அரசு துணை சுகாதார நிலையத்தில், மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், ம.ரெட்டியாபட்டி மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு சென்று பிரசவ அறை, பிரசவத்திற்குபின் கவனிப்பு அறை, வழங்கப்படும் உணவு, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, மருந்துக ளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    • கோரையாற்றின் புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
    • சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூ.70.79 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், பூவனூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் நபார்டு வங்கி நிதிஉதவி திட்டத்தின் கீழ் பூவனூர் ஊராட்சி முதல் பெரம்பூர் ஊராட்சி வரை கோரையாற்றின் குறுக்கே புதுப்பாலத்தின் அருகே சாலை அமைக்கப்பட்டுவருவதையும்,

    திருவாரூர் மாவட்ட கலெக்டா சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.பின்னர் பெரம்பூர் ஊராட்சியில் ரூ.68.30 லட்சத்தில் முல்லைவாசல் கிராமம் முதல் பெரம்பூர் வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், மேலாளவந்தசேரி ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுவருவதையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

    இதைப்போல அரிச்சபுரம் ஊராட்சியில் ரூ.42.50 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், ரூ.3.88 லட்சம் மதிப்பில் அரிச்சபுரம் நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பழுதுநீக்க பணிகளையும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார்.

    பின்னர் ரிஷியூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழக திருவாரூர் மண்டல நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் இருந்தனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், செப்.13-

    நாகர்கோவில் மாநகராட்சியில் 4-வது வார்டுக்குட்பட்ட கோட்டவிளை பகுதியில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம், 18-வது வார்டு பிளசன்ட் நகரில் ரூ.21 லட்சத்தில் தார் சாலை, 4-வது வார்டு அசோக் கார்டனில் ரூ.5 லட்சத்தில் தார் சாலை, 17-வது வார்டு குழந்தை யேசு கோவில் முன்பு உள்ள சாலையில் ரூ.10 லட்சத்தில் கருந்தளம், 17-வது வார்டு அருள்நகரில் ரூ.20 லட்சத்தில் கருந்தளம், 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் அமலசெல்வன், கவுசிகி, வீரசூரபெருமாள், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.
    • இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு நகராட்சி சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தை, கொடைக்கானல் பஸ் நிலைய புதிய கழிவறை கட்டிடம் மற்றும் பஸ் நிலைய கட்டிட பராமரிப்புபணிகள், படகு குழாம், செண்பகனூர் அய்யர் கிணறு பகுதி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.

    இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் மனோகரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொடைக்கானல் நகர் மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மண்டல செயற்பொறியாளர் மனோகரன் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    • குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
    • குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கிராமப்புறங்களில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார்.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அவர் கேட்டார். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்படுத்தப் பட்டு வரும் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ரூ.பல லட்சம் செலவு செய்து பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர். ஆனால் அதில் உள்ள கழிவுகளை ரோட்டில் விடுகிறார்கள். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர், மாணவ-மாணவிகள் நலன் கருதி காலை உணவுத் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். எனவே அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், திட்ட அதிகாரி பாபு மற்றும் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. தினமும் சாலை பணி உள்ளி ட்ட மேம்பாட்டு பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார்.

    இன்று 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர் தெருக்களில் ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    6-வது வார்டுக்குட்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ. தெருவில் ரூ.2.80 லட்சம் செலவில் பேவர் பிளாக் மறுசீரமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டுக்குட்பட்ட சி.டி.எம்.புரம் குறுக்கு தெருக்களில் ரூ.1.67 கோடி மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரம ணியம், உதவி பொறியாளர் ராஜா, தொழில்நுட்ப அலுவலர் தேவி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, சத்யராஜ், ராஜா, கவுன்சிலர் ஜெயவிக்ர மன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.குமரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்து வருகிறது.

    அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையம் சார்பில் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்களு க்கான பயிற்சி இன்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பிரபாகர் தலை மை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் துரைராஜ், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநி திகளுக்கு பள்ளி மேலாண்மை குழு பொறுப்புகள் என்ன? பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளி வளர்ச்சி மற்றும் செயல்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் அரசின் கட்டுப்பா ட்டில் உள்ளது. அதனால் சில வளர்ச்சி பணிகள் மாநக ராட்சியால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இணைக்கும் வகையில் அரசுக்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும் நிலையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என கணக்கிட்டு மாநகராட்சி நிதியில் பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆசி ரியர் பயிற்றுநர்கள் ஜெசிகா மேரி, முருகேசன், ரெஜி, ரவிக்குமார், ஜான்சன், பால்மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ராணிப்பேட்டை நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் நகரம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு மையம், திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தனியார் வங்கியின் சமுதாய பங்களிப்பு திட்ட நிதி மூலம் ரூ.24 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் ஒப்படைப்பு, 15-வது நிதிக் குழு மான்யம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள், ரூ.21லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 3 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் ரூ.77லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் ெசய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வளமீட்பு மையத்தை திறந்து வைத்து, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜி.கே. உலகப்பள்ளி இயக்குநர் வினோத் காந்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர் விநாயகம், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.
    • 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் ெரயில்வே நிலையத்தில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6ந் தேதி, பிரதமர் மோடி பணிக்கு அடிக்கல் நாட்டினார். முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

    ெரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஏ.டி.எம்., அருகே துவங்கி ரெயில் நிலையம் முகப்பு பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டு, குழி தோண்டப்பட்டது. பணி நடக்கும் இடத்துக்கு பயணிகள் வருவதை தவிர்க்க, பாதுகாப்பு கருதி முதல் பிளாட்பார்ம் நுழைவு வாயில் தகரம் வைத்து அடைக்கப்பட்டது.

    இதற்கு மாற்றாக அருகே வலதுபுறம் சுவர் இடிக்கப்பட்டு தற்காலிகமாக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக பயணிகள் உள்ளே, சென்று வர ெரயில்வே போலீசார் அறிவுறுத்தினர். தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.அதன்பின் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு கட்டுமான பணி துவங்க உள்ளது.

    ஒரே நேரத்தில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் பணிகள் நடந்தால் இடையூறு ஏற்படும் என்பதால் முதல் பிளாட்பார்மில் மட்டும் பணி துவங்கியுள்ளது.இரண்டாவது பிளாட்பார்மில் எந்த பணியும் தற்போதைக்கு துவங்கவில்லை. 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்க உள்ளதால் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.

    • கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு
    • ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.80லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் வெட்டப்படும் பணி, 13-வது வார்டில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உலர்த்திட உலர் களம் அமைக்கும் பணி, ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்பில் தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை வைக்கும் குடோன் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.69லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அல்லிகுளம் சாலை அமைக்கும் பணி, நரசிங்கபுரம் பகுதியில் இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணி என மொத்தம் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அரிசி சரியில்லாததை பார்த்து இதனை மாற்றி பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர்(பொறுப்பு) அம்சா, செயல் அலுவலர் கோபிநாத், வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • பிராக்கால் குளத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரத்தில் பிராக்கால் குளத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியையும், கே.ஆர்.காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான வாறுகால், அய்யாபுரத்தில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 890 மதிப்பிலான வாறுகால், சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளி ட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கர ம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துக்கல் வலசை ஊராட்சி செயலர் வேம்பையா நன்றி கூறினார்.

    ×