search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது-கலெக்டர் தகவல்
    X

    வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது-கலெக்டர் தகவல்

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மொத்தம் 112 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    வரப்பு பயிர்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு) ஆகியவை கிராம பஞ்சாயத்துக்கு 15 எக்டர் வீதம் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 5 கைத்தெளிப்பான்கள் மற்றும் 5 விசைத் தெளிப்பான்கள் அல்லது 5 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை பயனுள்ள வேளாண் நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் இதுவரை 39 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியான தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்புகளாக அமைந்திட வேண்டும். தரிசு நில தொகுப்புகள் தொட ர்ச்சியாக அமையாதபோது இடையில் உள்ள 2 முதல் 3 ஏக்கர் வரை சாகுபடி நிலங்க ளையும் கொண்டு வந்து தொடர்ச்சியான தரிசு நிலத் தெர்குப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

    தரிசு நில தொகுப்பு அமைப்பதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மை யினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரம், விக்ரமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் எண் உலர்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×