search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லம் ஒன்றியத்தில்  தோட்டக்கலைத்துறை வளர்ச்சி பணிகள்: கலெக்டர் பழனி ஆய்வு
    X

    வல்லம் ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சி பணிகளை விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

    வல்லம் ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சி பணிகள்: கலெக்டர் பழனி ஆய்வு

    • கலெக்டர் அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் கேட்டறிந்தார்.
    • விவசாயிகள் நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அவர் கொங்கரப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மூலம் அவுரி பயிர் செய்யப்ப ட்டுள்ளதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னோடி விவசாயி அன்பழகன் இப்பகுதியில் அதிக அளவு அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் தெரிவித்தார். பயிர் செய்ய பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் சாகுபடி செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாகவும் அதனால் அதனை பயிர் செய்வதாக அவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அவுரி பயிர் செய்த விதைப்பு முதல் அறுவடை செய்வது ஏற்றுமதி செய்வது வரை விவரங்களை விவசாயி களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் அவுரி பயிருக்கு மானியம், அவுரி தழை காய வைக்க உலர் களம், சேமிப்பு கிடங்கு, அவுரிபயிருக்கு காப்பீடு, அவுரி விதை உற்பத்தி செய்தல், நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) சண்முகம் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உதவிய இயக்குனர் தோட்ட கலைத்துறை அப்துல் லத்தீப் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சத்தியமூர்த்தி வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×