search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகராட்சி"

    • பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
    • பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

    குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.

    எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
    • வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது.

    இந்த கொசுக்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் வகையில் 21 வார்டுகளிலும் கொசு மருந்துகள் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காகவும், கொசு ஒழிப்புக்காகவும் மருந்து அடிக்கும் எந்திரம் போதிய அளவிற்கு இல்லாததால், கூடுதலாக 2 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான தீவிர நடவடிக்கை எடுத்த வெள்ளகோவில் நகராட்சி தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் முயற்சியை கண்டு நகராட்சி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
    • மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.

    இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
    • கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறபபு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி பண்ருட்டி நகராட்சியில் உள்ள 49 வாக்குச்சாவடி மையங்களில் புதியதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.

    பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள சுப்பராயலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர் பானுமதி, துப்புரவு அலுவலர் முருகேசன், தேர்தல் துணை தாசில்தார் ராஜலிங்கம், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.

    • தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும்.

    சென்னை:

    நகராட்சிகளின் பொது சுகாதார பிரிவில் ஒரே பணிகளை செய்வதற்கு வேறு வேறு துறைகளை சேர்ந்த இரு அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து நகராட்சிகளிலும் தற்போது துப்புரவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது. இதற்காக மாநில சங்கம் நகராட்சி துறை அமைச்சர், துறை செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குனர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது. இந்த நிலையில் சிறப்புநிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை முயற்சி செய்து வருகிறது.

    இது குறித்து, தங்களது கருத்துகளை, எதிர்ப்பினை தமிழ்நாடு நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் மாநில சங்கம் தனது கடிதத்தின் மூலம் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு தெரிவித்து உள்ளது. அக்கடிதத்தில் துப்புரவு அலுவலர் பதவி என்பது துப்புரவு ஆய்வாளரின் பதவி உயர்வு பணியிடமாகும். நோய் தடுப்பு பணி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், உரிமத் தொகை வசூலித்தல், பிறப்பு - இறப்பு பதிவு மற்றும் சான்றிதழ் வழங்கும் பணி அனைத்தையும் துப்புரவு அலுவலர், நகராட்சியின் பொது சுகாதார பிரிவிற்கு தலைமை யேற்று செய்து வருகிறார்.

    இந்நிலையில் துப்புரவு அலுவலர் செய்து வரும் அதே பணிகளை செய்திட பொது சுகாதாரத்துறை, தனது மருத்துவர்களை நகர்நல அலுவலர் என்ற பணியிடத்தில் நகராட்சிகளில் விரைவில் நிரப்பிட உள்ளது. ஒரு நகராட்சியில் ஒரு பணியினை செய்திட வேறு வேறு துறையினை சார்ந்த இரு அலுவலர்கள் எதற்கு என்றும், துப்புரவு ஆய்வாளர்களின் ஒரே ஒரு பதவி உயர்வு துப்புரவு அலுவலர் மட்டுமே. அதையும் நீர்த்து போக செய்யும் விதத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குனரின் இச்செயல் உள்ளது என்றும், பிறிதொரு துறையான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிலிருந்து நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடங்களில் மருத்துவர்களை நியமித்திடுவதை தவிர்த்திடுமாறும் பொது சுகாதார இயக்குநருக்கு வழங்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து மாநில சங்க தலைவர் கூறுகையில் பொது சுகாதார துறையில் உள்ள மருத்துவ அதிகாரிகள், பதவி உயர்வு பெறும் நோக்கத்தில் நகராட்சிகளில் காலியாக உள்ள நகர்நல அலுவலர் பணியிடங்களுக்கு வருகின்றனர் என்றும், இதனால் ஏற்கனவே அப்பணிகளை செய்து வரும் துப்புரவு அலுவலர்களின் நிலை தான் என்ன, அவர்களுக்குரிய பணி தான் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுகிறது. ஒரே பணி செய்ய இரு அலுவலர்கள் அதுவும் ஒரே நகராட்சியில், தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் தேவை இல்லை. எனவே துப்புரவு அலுவலர் பணியிடம் உள்ள நகராட்சிகளில் நகர்நல அலுவலர் பணியிடம் தேவை இல்லை என்ற முடிவு உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்சினை குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை இதில் உடனடியாக தகுந்த நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • குப்பைகளை தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் மன்ற பொருட்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    ராமு (தி.மு.க.):- கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் இருந்து உள்ள கழிவுநீர் கால்வாய் 20 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் மண்தூர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    நாகரத்தினம் செந்தில் (அ.தி.மு.க.):- பால சுப்ரமணியன் நகர் பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும், சாலை அமைத்து தர வேண்டும்.பாஸ்கரன்:- குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவதில்லை. தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயந்தி பாபு:- 14-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். முபாரக் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சி மூலம் 24 வார்டுகளுக்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில், அங்கு குடிநீர் மோட்டார் பழுதால் கடந்த சில மாதங்களாக நகராட்சி வளாகத்திலேயே ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால் வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா ராஜசேகரன் (தி.மு.க.) பேசுகையில்:-

    9-வது வார்டில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு குளம் என பெயர் வைக்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழைகாலம் தொடங்கி உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • குன்னூர் டோபிகானா பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு
    • ஊழியர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் விதிமீறிய கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நகராட்சியில் அதிகாரிகள் முறையாக இல்லாததே இதற்கு காரணம். இதனால் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக சிலர் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

    அவர், திடீரென அலுவலகம் முன்பு வைத்து தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனை திறந்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார்.

    இதனை அங்கு இருந்த ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடடினயாக ஓடி சென்று, அதனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது, அவர் டோபி கானா பகுதியில் சிலர் குடியிருப்பை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனை தடுத்து நிறுத்த புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    எனவே இவர்களை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களாகவே குன்னூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிங்கள் அதிகளவில் கட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
    • ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழபுரம் பகுதியில் தாழங்குளம் என்ற இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தாழங்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் மழைக்காலத்திற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழங்குளத்தில் அப்பகுதி மழை நீரை கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக உடனடியாக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று திருவேற்காடு போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா தலைமையில் பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி முன்னிலையில் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் உள்பட 75 பேர் கொண்ட குழுவினர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.பின்னர் அங்கிருந்த 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வேண்டுகோள்
    • கொல்லங்கோடு பேரூராட்சி படிப்பகம் என்ற வாசகத்துடனேயே திகழ்கிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் நகராட்சி சார்பில் படிப்ப கங்கள் உள்ளன. இந்த படிப்பகங்கள், தற்போது நீண்ட காலமாக பூட்டியே கிடக்கின்றன. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், அனைவரும் கல்வி பெற்று வாழ்வில் முன்னேற படிப்பகங்கள் தொடங்கப் பட்டன. ஆனால் கொல்லங்கோடு பகுதியில் இந்த படிப்பகங்கள் பயனற்று கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் இந்த படிப்பகங்கள் தற்போது காட்சி பொருளாக தான் உள்ளது என வேதனை தெரிவித்தனர். கொல்லங்கோடு பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்றளவும் கண்ணனாகம் சந்திப்பில் உள்ள ஒரு படிப்பகம் கொல்லங்கோடு பேரூராட்சி படிப்பகம் என்ற வாசகத்துடனேயே திகழ்கிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றம் செய்வதோடு, கொல்லங் கோடு நகராட்சிக்கு சொந்த மான அனைத்து படிப்பகங்க ளையும் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது.
    • முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது. இந்த உரக்கிடங்கு வளாகத்தில் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., துணை செயலாளர் கே.ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், செம்மாண்டம்பாளையம் சக்திகுமார் ,நகராட்சி பொறியாளர் திலீபன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.

    • ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • மீதமுள்ள 2 பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் முயற்சியில் அடிப்படைத் தேவைகள் மற்றும் கட்டுமான பணிகளை மாணவ, மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் முருகேசன் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.அதன் ஒரு கட்டமாக பள்ளி வளாகத்தில் தரைத்தளம் (பேவர் பிளாக்) அமைக்க முடிவெடுக்கப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு நிதியினை பள்ளி மேலாண்மை குழு சார்பாக வழங்குவது என்றும், மீதமுள்ள இரண்டு பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பள்ளி மேலாண்மை குழு தலைவி சுகன்யாவின் கோரிக்கையை அடுத்து, அந்த வார்டு உறுப்பினர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெயபாரதி விஸ்வநாதன், தற்போதைய நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், இந்தப் பணியினை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜையின் போது நகராட்சி ஆணையர் முருகன், பொறியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×