search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emergency meeting"

    • சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
    • வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் கூட்ட அரங்கில் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படிநமக்கு நாமே திட்டம் அல்லது பொது நிதி மூலம் செப்டிக் டேங்க் வாகனம் வாங்கி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்மற்றும் பேரூராட்சி பகுதியில் கழிவறை கழிவுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தலாம். மேலும் அவினாசி பேரூராட்சி பொதுமக்கள்பயன்பாட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை வருவாய் துறையிடம் கேட்டு பெறுவது என்று தலைவர் தனலட்சுமி கூறினார்.

    இதையடுத்துவார்டு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், சூளை பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரை வெளியேற்றவேண்டியது குடிசை மாற்று வாரியத்தின் பணியாகும். நமது பேரூராட்சிக்கு தேவையான குப்பை வண்டி வாங்க சொல்லி பல கூட்டங்களில் வலியுறுத்தியும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

    திருமுருகநாதன் பேசுகையில்,அவினாசி வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது. அந்த பணி எப்போது முடியும் என்றார். தலைவர் பேசுகையில், டேங்க் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிரம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

    • கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர்.
    • வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி அவசரக்கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி, கமிஷனர் முகமது சம்சுதீன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி தலைவர் பதில் அளித்து பேசிய போது, நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகள், சாக்கடை தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
    • உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    திருமங்கலம் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை கடக்க ஒவ்வொரு முறையும் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி நிர்வாகத்து க்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

    கப்பலூர் சுங்கச்சாவடியை கைப்பற்றிய புதிய ஒப்பந்த நிறுவனம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் மாதந்தோறும் ரூ.310 கட்ட வேண்டும். சுங்கச்சாவடியை கடக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. மேலும் சுங்கச்சாவடி பாக்கித் தொகை லட்சக்கணக்கில் இருப்பதாகவும், அதனை உடனே செலுத்தக்கோரி வாகன உரிமையாளருக்கு கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கப்பலூர் சுங்கச்சா வடி ஒருங்கிணைப்பு போராட்ட குழுவினர் நேற்று திருமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    அமைச்சரின் அறிவிப்பை முன்னிட்டு போராட்ட குழுவின் அவசர கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரின் கருத்தில் முழு திருப்தி இல்லை. இந்த அறிவிப்பு தற்காலிகமானது தான். கப்பலூர் சுங்கச்சா வடிக்கு நிரந்தர தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட போவதாக போராட்டக்குழு தெரிவித்தனர்.

    • தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • உறுப்பினர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார், பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விஜயன், பிரிட்டிஷ், மணிகண்டன், தினேஷ்குமார், நாராயண பாண்டியன், நாகராஜன், அய்யனார் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்திட நிதி பகிர்வில் உள்ள பணிகள் உள்பட 7 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் உள்ள போர்வெலில் உடைந்த தண்ணீர் தொட்டிகள் சரிசெய்ய வேண்டும். சேதமடைந்த பேவர் பிளாக் கற்களை மாற்ற வேண்டும். தெரு மின்விளக்கு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதுபோல தெருக்களில் பயனற்று கிடக்கும் போர்வெல் தண்ணீர் தொட்டிகளை அகற்றி விட்டு சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததையடுத்து டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். #sterliteplant #protest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்ததால் வன்முறை வெடித்தது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர்  ஒரே சமயத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றபோது கடும் மோதல் வெடித்தது.



    போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கி  தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பின்னர் இந்த கலவரம் குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துவிடட்து. கூடுதல் பாதுகாப்புக்கு மற்ற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி கூறினார்.

    தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். #sterliteplant #protest
    ×